India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காய்கறி கிலோவில் தக்காளி ரூ 20-40, சேனைக்கிழங்கு ரூ 60-80, கருணைக்கிழங்கு ரூ 80-90, வெண்டைக்காய் ரூ 60-70, வெங்காயம் ரூ 35-70,சின்ன வெங்காயம் ரூ 65-70, கத்திரிக்காய் ரூ 60-80,புடலை ரூ 40-50,பூசணி ரூ 30-35, உருளைக்கிழங்கு ரூ 40-60, காலிஃப்ளவர் ரூ 30-40, முள்ளங்கி ரூ 40,கேரட் ரூ 40-60, தேங்காய் ரூ 20,25,30, பூண்டு 380-400,430 இஞ்சி ரூ 55-120, பீட்ரூட் ரூ 70-80 என விற்பனை செய்யப்படுகிறது

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை டிச. 27-இல் நடைபெறும் என ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளார். இதில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, பட்டு வளர்ச்சித் துறை, மீன்வளத்துறை, கால்நடை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.

வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வழங்கலாம் என உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி 1000 நாட்களாக எந்த நடவடிக்கையும் இல்லாமல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் காலம் தாழ்த்தி வரும் தமிழக அரசை வலியுறுத்தி, ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக சார்பில் நாளை காலை 10 மணிக்கு ராணிப்பேட்டை முத்துகடை பேருந்து நிலையம் அருகில் போராட்டம் நடைபெறும் என்று பா.ம.க மேற்கு மாவட்ட செயலாளர் சண்முகம் அறிவிப்பு.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( டிச 22 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் : 9884098100

ராணிப்பேட்டையில் டாடா நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் தயாரிக்கும் ஆலை அமைக்கப்படுகிறது. இதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி கோரி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. கார் தொழிற்சாலைக்கு செப்டம்பர் 28ஆம் தேதி முதலமைச்சர் அடிக்கல் நாட்டிய நிலையில் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. முதல் கட்டமாக 190 ஹெக்டேரில் ரூ.914 கோடியில் கார் தொழிற்சாலை அமைய உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் டிச.27-ந் தேதி காலை 11 மணி அளவில் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு குறைகளை கோரிக்கை வாயிலாகவும், மனுக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (டிச 21) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம்: 9884098100

அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் 1வது நடைமேடையில் இன்று திடீரென தண்டவாளத்தில் இறங்கி விடுதலை சிறுத்தை கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பாராளுமன்றத்தில் சட்ட மேதை அம்பேத்கரை அவதூறாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கண்டன கோஷங்கள் எழுப்பினர். பின்னர் போலீசார் அவர்களை கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் டிச.27-ந் தேதி காலை 11 மணி அளவில் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு குறைகளை கோரிக்கை வாயிலாகவும், மனுக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று காவேரிப்பாக்கம் ராணிப்பேட்டை சிப்காட், முகுந்தராயபுரம், வாலாஜா ஒழுகூர் முசிறி, மோசூர் துணை மின் நிலையத்தில் பல்வேறு பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ஆணைப்பாக்கம், அரக்கோணம்,ராணிப்பேட்டை, போளிப்பாக்கம், பழையபாளையம், நவல்பூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்க
Sorry, no posts matched your criteria.