Ranipet

News August 30, 2024

ராணிப்பேட்டையில் மூடநம்பிக்கை ஒழிப்பு பொதுக்கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட திராவிட கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு இந்திய அரசியல் சட்டம் 51A(h)பிரிவு விளக்க பொதுக்கூட்டம் நெமிலி பேருந்து நிலையத்தில் செப் 2ம் தேதி மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது. திராவிட கழக துணைப் பொதுச் செயலாளர் மதிவதனி, மாநில ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் சிறப்புரையாற்றுகின்றனர்.

News August 30, 2024

விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

image

விநாயகர் சதுர்த்தி செப்.7ஆம் தேதி கொண்டாடப்ப உள்ளது. இந்தநிலையில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி மற்றும் துறைச்சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News August 30, 2024

ராணிப்பேட்டையில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை

image

ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்வெண்பாக்கத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்விரோதத்தில் முட்டவாக்கத்தைச் சேர்ந்த பட்டியலின இளைஞர் அஜித் குமார் (23) 2020ஆம் ஆண்டு வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதான 7 பேருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து வேலூர் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது.

News August 30, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் இன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், வேளாண்மை இணை இயக்குனர் தபேந்திரன், வேளாண்மை துணை இயக்குனர் செல்வராஜ், உதவி வன பாதுகாவலர் மணிவண்ணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

News August 30, 2024

வாலாஜா அருகே விபத்தில் மூளை சிதறி இளைஞர் பலி

image

ராணிபேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த வன்னிவேடு பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துள்ளானது. லாரியை முந்தி சென்ற கார் கவிழ்ந்த விபத்தில் காரில் பயணித்த அருணகிரி என்பவர் மூளை சிதறி பலியானார். 3 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News August 30, 2024

ராணிப்பேட்டையில் ரூ.2 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

image

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் 334 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் சந்திரகலா மற்றும் சோளிங்கர் எம்.எல்.ஏ.முனிரத்தனம் ஆகியோர் வழங்கினர். இந்த முகாமில் பட்டா, பட்டா பெயர் மாற்றம், முதியோர் உதவித்தொகை, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.

News August 30, 2024

மாவட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 1,122 வரைவு வாக்குச்சாவடி பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் கலெக்டர் சந்திரகலா வெளியிட்டார்.இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியல், ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் வருவாய் கோட்ட லுவலகங்கள் மற்றும் அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலகமான தாசில்தார் மற்றும் நக–ராட்சி ஆணையாளர் அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

News August 30, 2024

ஏரி மண் எடுப்பதை தடுத்து நிறுத்திய வட்டாட்சியர்

image

ஆற்காடு தாலுகா திமிரி பகுதியில் உள்ள ஏரியில் வண்டல் மண் அள்ளுவதற்கு வட்டாட்சியர் அனுமதி அளித்திருந்தார். இந்நிலையில் ஏரியிலிருந்து அதிக அளவு மண்ணை எடுத்து வீட்டு மனை அமைய உள்ள இடத்திற்கு லாரிகளில் விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து ஆற்காடு வட்டாட்சியர் இன்று நேரில் சென்று விசாரணை நடத்தி ஏரியில் வண்டல் மண் எடுப்பதை தடுத்து நிறுத்தினார்

News August 29, 2024

காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் சி.எஸ்.பி மஹாலில் ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் செயல் வீரர்கள் கூட்டம் நாளை 30ம் தேதி மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். எனவே செயல் வீரர்கள், கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உள்ளனர்.

News August 29, 2024

அரக்கோணம் எம்எல்ஏ அறிவிப்பு 

image

அரக்கோணம் பழனிபேட்டை பகுதியில் ரயில்வே இரட்டைக்கண் சுரங்கப்பாதை அமைந்துள்ளது. இங்கு மழை நீர் மற்றும் சேறும் சகதியும் கலந்து தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். இந்த சுரங்கப்பாதையை சீரமைத்து விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அங்காளம்மன் கோயில் அருகில் செப். 5ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம நடைபெறும் என்று எம்எல்ஏ ரவி இன்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!