Ranipet

News June 4, 2024

அரக்கோணத்தில் திமுக முன்னிலை

image

அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக முன்னிலை பெற்றுள்ளது.
இதில் திமுக- 27,205 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறது.
இரண்டாவது இடத்தில் அதிமுக-12,214, மூன்றாவது இடத்தில் பாமக-10,640 வாக்குகள், நாம் தமிழர்- 4238 வாக்குகள் பெற்றதுள்ளது. இதில் திமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

ராணிப்பேட்டை: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

image

நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

News June 4, 2024

கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி ஆட்சியர்

image

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஜூன் 10ஆம் தேதி முதல் ஜூலை 1ஆம் தேதி வரை கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படுகிறது. கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட வரும் ஊழியர்களிடம் தகுந்த ஒத்துழைப்பு தர வேண்டும். கால்நடைகளின் நலன் கருதியே கோமாரி நோய் தடுப்பூசி போடப்படுகிறது என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் வளர்மதி இன்று தெரிவித்துள்ளார்

News June 4, 2024

ELECTION: அரக்கோணத்தில் வெல்லப்போவது யார்?

image

2024 மக்களவைத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் மொத்தம் 74.08 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. வேட்பாளராக திமுக சார்பில் எஸ்.ஜெகத்ரட்சன், அதிமுக சார்பில் விஜயன், பாமக சார்பில் கே.பாலு, நாம் தமிழர் சார்பில் பேராசிரியர் அப்சியா நஸ்ரின் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News-னுடன் இணைந்திருங்கள்.

News June 3, 2024

ராணிப்பேட்டை: மாவட்டத்தில் 33 ஆயிரம் பேர் தேர்வர்கள்

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணி தேர்வில் தொகுதி – 4 ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 121 தேர்வு கூடங்களில் 32,970 தேர்வுகள் தேர்வு எழுத உள்ளனர். இந்த தேர்வு ஜூன்.9ஆம் தேதி நடக்கிறது. தேர்வுக்காக சிறப்பு பேருந்து வசதிகள், தடையில்லா மின்சாரம் , போலீஸ் பாதுகாப்பு என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்று ஆட்சியர் வளர்மதி இன்று தெரிவித்துள்ளார்.

News June 3, 2024

உங்கள் தொகுதி யாருக்கு?

image

2019 மக்களவைத் தேர்தல் அரக்கோணம் தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்ட ஜெகத்ரட்சகன் 3,28,956 (28.12%) வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறை 2024 மக்களவைத் தேர்தலில், திமுக சார்பில் ஜெகத்ரட்சகனும், அதிமுக சார்பில் ஏ.எல். விஜயனும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? உங்கள் கருத்து என்ன?

News June 3, 2024

ராணிப்பேட்டை கலெக்டர் எச்சரிக்கை

image

அரக்கோணம் மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. அப்போது வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ரகசிய தன்மையை பாதுகாப்பதை மீறுவதாக அமைகின்ற எந்த தகவலையும் யாரிடமும் தெரிவிக்க கூடாது. விதிமுறைகளை மீறுகின்ற நபருக்கு 3 மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டு தண்டனைகளும் விதிக்கப்படும் என உறுதிமொழி எடுக்க வேண்டும் என ஆட்சி வளர்மதி தெரிவித்துள்ளார்.

News June 3, 2024

பெருமூச்சி ஏரியில் செத்து மிதந்த மீன்கள்

image

அரக்கோணம் அடுத்த பெரு மூச்சியில் இரண்டு ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் உள்ள மீன்கள் இன்று செத்து மிதந்தன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் எம்எல்ஏ ரவிக்கு தகவல் தெரிவித்தனர் . இதைத் தொடர்ந்து எம்எல்ஏ ரவி இன்று ஏரியை நேரில் பார்வையிட்டு மீன்கள் எதனால் செத்து இருந்தன என்று பொதுப்பணித்துறையினரிடம் கேட்டு அறிந்தார். மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் பழனி ,அதிமுக பிரமுகர் நரேஷ் உடன் இருந்தனர்.

News June 3, 2024

இரண்டாம் கட்டமாக பணியாளர்கள் தேர்வு

image

அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் வாலாஜா அரசு கல்லூரியில் நாளை எண்ணப்படுகின்றன. இதற்கான பணியாளர்கள் குழுக்கள் முறையில் இரண்டாம் கட்டமாக தேர்வு செய்யும் பணி மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் தேர்தல் பொது பார்வையாளர் சுனில் குமார் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News June 3, 2024

பெண்ணிடம் சில்மிஷம்: வாலிபர் திடீர் உயிரிழப்பு

image

அரக்கோணம் அடுத்த தண்டலத்தை சேர்ந்தவர் சேட்டு (42). இவர் நேற்று இரவு வீட்டுக்கு வெளியில் படுத்திருந்த பெண் ஒருவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை பெண்ணின் உறவினர்கள் தாக்கியுள்ளனர். இதில் மயங்கி விழுந்த அவரை அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், இன்று சேட்டு இறந்தார். மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!