India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆட்சியர் வளர்மதி மரக்கன்றுகள் நட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி, மாவட்ட வன அலுவலர் குரு சுவாமி, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வரும் 9ஆம் தேதி நடைபெற உள்ள குருப்4 தேர்வினை ராணிப்பேட்டை மாவட்டத்தில் 121 மையங்களில் 32970 பேர் எழுத உள்ளனர். தேர்வு எழுதுபவர்கள் தேர்வு மையத்திற்கு காலை 8 மணி முதல் 9 மணிக்குள் வந்துவிட வேண்டும். 9 மணிக்கு மேல் வருபவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே, தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு குறித்த நேரத்திற்கு முன்பு வரவேண்டுமென கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
அரக்கோணம் மக்களவை தொகுதியில் ஜெகத்ரட்சகன் மீண்டும் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மையமான வாலாஜா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எம்.பி ஜெகத்ரட்சகன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் வளர்மதி இன்று வழங்கினார். உடன் கைத்தறித்துறை அமைச்சர் காந்தி மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் கடந்த 1999 ம் ஆண்டு, 2009ம் ஆண்டு , 2019ம் ஆண்டு திமுக வேட்பாளராக டாக்டர் எஸ் ஜெகத்ரட்சகன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் 2024 மக்களவை பொதுத் தேர்தலிலும் போட்டியிட்டு 3,06, 599 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் 4 வது முறையாக ஜெகத்ரட்சகன் வெற்றி பெற்று எம் பி ஆனது திமுகவினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 5,48,307 வாக்குகள் பெற்று அமோக வெற்றிபெற்றுள்ளார். அதிமுக 2,49,051 வாக்குகளும், பாமக 1,96,846 வாக்குகளும், நாதக 96,058 வாக்குகள் பெற்று அடுத்தடுத்த இடங்களைப் பெற்று வெற்றியை நழுவ விட்டனர்.
நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்கான 10 வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிய முறையே திமுக – 2,83,063 அதிமுக -1,20,619, பாமக -1,02,544, நாதக – 45,929 பெற்றுள்ளன. திமுகவை சேர்ந்த வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 1,62,444 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்
அரக்கோணம் மக்களவை தொகுதியில் 26 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் .திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்து வருகிறார்.அதே போல் பாமக சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் கே.பாலு தொடர்ந்து கடும் பின்னடைவை சந்தித்து வருகிறார்.
அரக்கோணம் மக்களவை தொகுதியில் 26 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் .திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் அதிகாரப்பூர்வ தேர்தல் ஆணைய அறிவிப்பில் 27 ஆயிரத்து 205 வாக்குகள் பெற்றுள்ளார் . அதிமுக வேட்பாளர் விஜயன் 12,214 வாக்குகள் பெற்றுள்ளார். முதல் சுற்றில் ஜெகத்ரட்சகன் 14,991 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார் . பாமக 10,640 வாக்குகளும், நாதக 4,238 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் 2வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம்: சட்டமன்ற தொகுதி வாரியாக ராணிப்பேட்டை திமுக: 4589 அதிமுக:1744 பாமக:1501 நாதக:673, ஆற்காடு திமுக:4658 அதிமுக:2157 பாமக:2606 நாத:670, அரக்கோணம் திமுக:4911 அதிமுக:2253 பாமக:1916 நாத:970, திருத்தணி திமுக:5416 அதிமுக:2195 பாமக:1095 நாத:665, காட்பாடி திமுக:3918 அதிமுக:2113 பாமக:1655, சோளிங்கர் திமுக:4534 அதிமுக:2444 பாமக:1959
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வாலாஜாவில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை கல்லூரியில் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் முதல் சுற்று முடிவில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 27235 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் A.L.விஜயனை விட 15000 வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்
Sorry, no posts matched your criteria.