Ranipet

News June 6, 2024

வேலையில்லா இளைஞர்களுக்கு நூற்பு பயிற்சி

image

அனைத்து மாவட்டங்களிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு முடித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு நூற்பு மற்றும் தொழில்நுட்ப ஜவுளித்துறை தொடர்பான பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் முதற்கட்டமாக ஜவுளி துறைக்காக டிஎன் டெக்ஸ்டைல்ஸ் என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. பயிற்சி தேவைப்படுவோர் இணையதள முகவரியில் பதிவு செய்யலாம் என்று ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

News June 6, 2024

வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை

image

சோளிங்கர் அடுத்த பாண்டியநல்லூர் கிராமத்தில் டிவிஎஸ் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று சோளிங்கர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ஸ்ரீ தேவி, டிஎஸ்பி வெங்கடேசன் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள், தொழிற்சாலை நிர்வாகத்தினர் கலந்து கொண்ட அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

News June 6, 2024

வாலாஜா: வடமாநில தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி

image

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு வட மாநிலத்தை சேர்ந்த ஷேக் மயூம் ஆலம்(40) என்பவர் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இன்று வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது திடீரென அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார். தொடர்ந்து, மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

News June 5, 2024

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டம் ஆட்சியர்

image

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி புதுமைப்பெண் திட்டம் தமிழகத்தில் 2022 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வி பயின்று மேற்படிப்பில் சேரும் பட்டப்படிப்பு பட்டய படிப்பு அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூபாய் 1000 தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நேரடியாக அனுப்பப்படும் என்று மாவட்ட ஆட்சியர் வளர்மதி இன்று தெரிவித்துள்ளார்.

News June 5, 2024

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் ஆட்சியர்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2002 முதல் 2007 வரையான காலகட்டங்களில் விண்ணப்பித்து பயனடைந்து வைப்புத் தொகை பத்திரம் பெறப்பட்டு தற்போது 18 வயது முதிர்வடைந்த பெண் குழந்தைகளுக்கு முதிர்வு தொகை வழங்கப்பட உள்ளது. இதன் பொருட்டு வங்கி கணக்கு புத்தகம், மாற்று சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் பிடிஓ அலுவலகம் அணுகலாம் என ஆட்சியர் வளர்மதி இன்று தெரிவித்துள்ளார்

News June 5, 2024

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை நல அலுவலர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியரின் 13 விடுதிகள் உள்ளன. இந்நிலையில் இதில் சேர விரும்பும் மாணவர்கள் இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

News June 5, 2024

இராணிப்பேட்டையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

image

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது. சில இடங்களில் மழை பெய்து வருவதும் குறிப்பிட்டத்தக்கது.

News June 5, 2024

நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர்

image

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றதையொட்டி ஜெகத்ரட்சகன், ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகிகள், நகர ஒன்றிய பேரூர் செயலாளர்கள் அணிகளின் அமைப்பாளர்கள், நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்­வா­கி­களை ராணிப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

News June 5, 2024

இராணிப்பேட்டையில் கனமழைக்கு வாய்ப்பு!

image

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இராணிப்பேட்டை உட்பட 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று(ஜூன் 5) மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது. சில இடங்களில் மழை பெய்து வருவதும் குறிப்பிட்டத்தக்கது.

News June 5, 2024

அரக்கோணம் தொகுதி தேர்தல் முடிவு

image

2024 மக்களவைத் தேர்தல்:
*திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் – 5,63,216 வாக்குகள்
*அதிமுக வேட்பாளர் ஏ. எல். விஜயன்- 2,56,657 வாக்குகள்
*பாமக வேட்பாளர் கே. பாலு – 2,02,325 வாக்குகள்
*நாதக வேட்பாளர் அஃப்சியா நஸ்ரின்- 98,944 வாக்குகள்

error: Content is protected !!