Ranipet

News September 5, 2024

ராணிப்பேட்டை: சிறப்பு ரயில் இயக்கம்

image

சென்னை சென்ட்ரலில் இருந்து செப்.6ம் தேதி மாலை 3.45 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி வழியாக கோவைக்கு இரவு 11.45 மணிக்கு சென்று சேருகிறது. மறு மார்க்கத்தில் 8ம் தேதி கோவையில் இரவு 11:30 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரலுக்கு காலை 7.35 மணிக்கு சென்று சேருகிறது என்று தெற்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது.

News September 4, 2024

100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

image

அரக்கோணம் பஜார் பகுதியில் உள்ள கடைகளில் இன்று நகராட்சி ஆணையாளர் ரகுராமன், சுகாதார அலுவலர் மோகன், சுகாதார ஆய்வாளர் சுதாகர் மற்றும் தூய்மை பணியாளர் இணைந்து 20 கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்ததாக மூன்று கடைகளில் இருந்து 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து ரூபாய் 12,000 அபராதம் விதித்தனர்.

News September 4, 2024

ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம்: 4 பேர் கைது

image

அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து அரக்கோணம் வரும் ரயிலில் 19 வயது இளம் பெண்ணிடம் 4 வாலிபர்கள் தகாத முறையில் நடந்து கொண்டனர். இளம்பெண் ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அரக்கோணம் ரயில்வே இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி விசாரணை நடத்தி, பீகாரைச் சேர்ந்த ஹக்கீம், மஜ்ருல் ஜுல்பாகர், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தர்மே சர்கார் ஆகிய 4 பேரை இன்று அரக்கோணத்தில் கைது செய்தார்.

News September 4, 2024

என்டிஆர்எப் வீரர்களுக்கு அடிப்படை பயிற்சி

image

அரக்கோணம் அடுத்த தக்கோலம் நகரி குப்பத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தில் துணை கம்மாண்டர் சங்கர பாண்டியன் தலைமையில் வேதியல், உயிரியல், கதிர்வீச்சு, ரசாயனம் போன்ற அபாயம் ஏற்படும் போது அதை கையாளும் விதம் குறித்த நான்கு வார கால அடிப்படை பயிற்சி இன்று நடைபெற்றது. இதில் அரியானா, அஸ்ஸாம், உத்தர பிரதேசம் ஜம்மு உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 40 பேர் கலந்து கொண்டனர்.

News September 4, 2024

9 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை

image

வாலாஜா தாலுகா பாகவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் மனைவி சுஜிதா (24). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சுஜிதா 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். இன்று தம்பதிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் மன உளைச்சலுக்கு ஆளான சுஜிதா வீட்டில் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. வாலாஜா போலீசார் விசாரிக்கின்றனர்.

News September 4, 2024

வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில், வாராந்திர பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி தலைமையிலான இந்தக் கூட்டத்தில், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் மனுக்களாக (52 மனுக்கள்) வழங்கினர். இதில், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் வெங்கடகிருஷ்ணன், திருமால், ரமேஷ்ராஜ், ராமச்சந்திரன் மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.

News September 4, 2024

ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் உத்தரவு 

image

ராணிப்பேட்டை மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட அதிமுக நிர்வாகிகள் அனைவரும் தங்கள்  பகுதிகளில் தலைமைக் கழகத்திலிருந்து பெறப்பட்ட அதிமுக புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை உரியவர்களிடம் வருகிற 8-ஆம் தேதிக்குள் கையொப்பம் மற்றும் செல்போன் எண் தங்களிடம் உள்ள உறுப்பினர் உரிமை சீட்டு பட்டியலில் பதிவு செய்து மாவட்டக் கழக அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு  ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் S.M.சுகுமார் உத்தரவு.

News September 4, 2024

ராணிப்பேட்டையில் அறிவுரை வழங்கிய அமைச்சர்

image

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காவேரிப்பாக்கம் பகுதியில் திமுக ஒன்றிய கழகத்தின் சார்பாக நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில், ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளரும், அமைச்சருமான ஆர் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசுகையில், வருகிற சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற வேண்டுமென கட்சித் தொண்டர்களுக்கு அறிவுரைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

News September 4, 2024

ராணிப்பேட்டை ஆசிரியர்கள் நான்கு பேருக்கு விருது

image

பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் வழங்கப்படும் டாக்டர். ராதாகிருஷ்ணன் விருதுக்கு இந்தாண்டு ராணிப்பேட்டையிலிருந்து நான்கு பேர் தேர்வாகியுள்ளனர். அரசினர் ஆதி திராவிட பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ரஜினி பிரியா, அரக்கோணம் அரசினர் உயர்நிலை பள்ளி ஆசிரியர் கௌரி, விஆர்வி பெண்கள் மேல்நிலை பள்ளி ஆசிரியர் சதீஷ் பானர்ஜி, ஆற்காடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளி ஆசிரியர் ஜானகி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

News September 4, 2024

ராணிப்பேட்டையில் தடகளப் போட்டிகள் தொடக்கம்

image

ராணிப்பேட்டை மாவட்டம், மண்டல அளவில் தடகளப் போட்டிகள் வாலாஜா அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் இன்று நடைபெறுகிறது. விளையாட்டு போட்டியில் 11 மாவட்ட மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் வெற்றி பெற்றவர்கள் வரும் 20ம் தேதி முதல் 23ஆம் தேதி வரை ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான தடகள போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று ராணிப்பேட்டை மாவட்டம் உடற்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!