Ranipet

News September 6, 2024

ராணிப்பேட்டை ஆட்சியர் உத்தரவு

image

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துணை பிடிஓவாக பணியாற்றி வந்த கோபால் காவேரிப்பாக்கத்திற்கும், அங்கு பணியாற்றி வந்த பிஸ்மில்லா நெமிலிக்கும், வாலாஜா துணை பிடிஓ செல்வவிநாயகம் நெமிலிக்கும், அங்கு பணியாற்றி வந்த கோகிலா ஆற்காட்டுக்கும் என மொத்தம் 8 துணை பிடிஓக்களை பணியிட மாற்றம் செய்து இன்று ஆட்சியர் சந்திரகலா உத்தரவிட்டுள்ளார்.

News September 6, 2024

ரோப்கார் சேவை நாளை முதல் தொடக்கம்

image

சோளிங்கர் மலையில் புகழ்பெற்ற ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு ரோப் கார் சேவை இயங்கி வருகிறது. வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக கடந்த மாதம் 16ஆம் தேதி ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டது. இப்பணிகள் நிறைவடைந்த நிலையில், செப்டம்பர் 7ஆம் தேதி முதல் ரோப் கார் சேவை தொடங்கும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 22 நாட்கள் ரோப் கார் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News September 6, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்டும் பணி தொடக்கம்

image

அரக்கோணம் தாலுகா ஆட்டுப்பாக்கம் கிராமத்தில் 26 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு அதிலே அரசு வழங்கும் தொகுப்பு வீடுகள் கட்டும் பணி இன்று நடைபெற்றது. இப்பணியை எம்எல்ஏ ரவி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், அதிமுக ஒன்றிய செயலாளர் விஜயன் ஊராட்சி மன்ற தலைவர் நித்யா ராமதாஸ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News September 6, 2024

ராணிப்பேட்டையில் தொழிற் பழகுநர் மேளா

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு தொழிற்பிரிவுகளை சார்ந்த பயிற்சியாளர்களுக்கு பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் மேளா மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளை கொண்டு செப் 23ஆம் தேதி காலை 9 மணி முதல் 3 மணி வரை நடத்தப்படுகின்றது. இந்த பயிற்சியில் சேர்ந்து என்ஏசி சான்றிதழ் பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News September 6, 2024

அரக்கோணம் அருகே பழிக்கு பழியாக இளைஞர் கொலை

image

அரக்கோணம் அடுத்த கிழவனத்தில் பழிக்கு பழியாக இளைஞரை தந்தை, மகன் கொலை செய்தனர். ஓராண்டுக்கு முன்பு பாஸ்கர் என்பவர் சந்திரன் என்பவரை கொலை செய்துள்ளார். ஜாமினில் வந்த சந்திரன் பாஸ்கரின் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதில், ஆத்திரமடைந்த சுப்பிரமணி, மகன் எத்திராஜ் சேர்ந்து சந்திரனை வெட்டியுள்ளனர். இதில், படுகாயமடைந்த சந்திரன் உயிரிழந்தார். இது குறித்து அரக்கோணம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News September 6, 2024

ரயில் முன் பாய்ந்து சிறுமி தற்கொலை

image

வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் 16 வயது சிறுமி நேற்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். அம்மூா் மேட்டுத் தெருவைச் சோ்ந்த சிறுமிக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில், சிறுமிக்கு திருமணத்தில் விருப்பமில்லை. இதனால் மனம் உடைந்த சிறுமி, வாலாஜா ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளாா். போலீசார் வ்ழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 6, 2024

வாலிபருக்கு சரமாரி வெட்டு

image

அரக்கோணம் தாலுகா கிழவனம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன். இவரை கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் விதமாக இன்று சிலர் கத்தியால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சந்திரனை அங்கிருந்தவர்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 5, 2024

10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை: எஸ்பி பாராட்டு

image

ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட புதுபுங்கனூர் கிராமத்தை சேர்ந்த பொன்முடி (வ/33) என்பவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.5000 அபராதம் என ராணிப்பேட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தால் இன்று (05.09.2024) தீர்ப்பு வழங்கப்பட்டது. இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளை மாவட்ட எஸ்பி பாராட்டினார்.

News September 5, 2024

ராணிப்பேட்டையில் விண்ணப்பிக்கலாம்

image

அகில இந்திய தொழிற்தேர்வில் தனிதேர்வர்களாக கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து தேர்வு கட்டணம் ரூபாய் 200 செலுத்தி பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News September 5, 2024

ஒன்றரை வயது பெண் குழந்தை நீரில் மூழ்கி பலி

image

பாணாவரம் அடுத்த போளிப்பாக்கம் ரோட்டு தெருவை சேர்ந்த ரேவதி-கார்த்திக் தம்பதியரின் ஒன்றரை வயது பெண் குழந்தை இன்று வீட்டில் விளையாடி கொண்டிருந்துள்ளது. அப்போது வீட்டில் வைத்திருந்த பக்கெட் தண்ணீரில் தவறி விழுந்து மூச்சு திணறி மயங்கியது. வீட்டில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!