Ranipet

News July 12, 2024

மாவட்ட அளவிலான பேச்சு, கட்டுரை போட்டி

image

இராணிப்பேட்டை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துறையின் சார்பில் “ஒன்றிணைவோம்” என்ற தலைப்பின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான தமிழ் பேச்சு போட்டி கட்டுரை போட்டி நடைபெற்றது. போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

News July 12, 2024

ராணிப்பேட்டை பெண்களுக்கு வேலைவாய்ப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் OSC சேவை மையத்தில் வழக்கு பணியாளர் மற்றும் மூத்த ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் . விருப்பமுள்ளவர்கள் https://ranipet.nic.in/ என்ற தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கி பூர்த்தி செய்து மாவட்ட சமூக நலத்துறைக்கு தபால் மூலமாகவோ நேரிலோ 22-07-24 க்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News July 11, 2024

தனியார் தொழிற்சாலை ஊழியர்களுக்கு விழிப்புணர்வு

image

சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் தியாகராஜன் தலைமையில் போலீசார் சிப்காட்டிலுள்ள Thirumalai Chemicals Ltd தொழிற்சாலையில் உள்ள சுமார் 120 நபர்களுக்கு இணைய வழி குற்றங்களான Financial frauds, OTP frauds, EB bill payment frauds, Scholarship frauds, Investmentfrauds, Loan App frauds, Job Frauds, Part time Job frauds குற்றங்களுக்கு எதிராக விழிப்புணர்வு இன்று வழங்கினர்.

News July 11, 2024

இந்தியன்-2 திரைப்படம் ரிலீஸ்; ஆட்சியர் அறிவிப்பு

image

இந்தியன் 2 திரைப்படம் நாளை(ஜூலை 12) ரிலீஸ் ஆகிறது. இப்படத்துக்கு கூடுதலாக சிறப்பு காட்சி நடத்திட ஆணையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் திரையரங்குகளில் கூடுதல் காட்சி நடத்தப்படும்போது சுகாதாரக் குறைபாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் ஏதும் ஏற்படாத வண்ணம் அந்தந்த வட்டாட்சியர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். போக்குவரத்து பாதிப்பு ஏதுமில்லாமல் இருப்பது அவசியம் என்று மாவட்ட ஆட்சியர் வளர்மதி இன்று தெரிவித்துள்ளார்.

News July 11, 2024

பொது விநியோகத் திட்டம் – ஆட்சியர் அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் சிறப்பாக நடைபெற ஒவ்வொரு மாதமும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதத்திற்கான சிறப்பு முகாம் வரும் 13ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே இந்த சிறப்பு முகாமில் மனு செய்து பயன்பெறுமாறு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி கேட்டுக் கொண்டுள்ளார்.

News July 11, 2024

ராணிப்பேட்டையில் வேலைவாப்பு அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் காலியாக உள்ள கிராம உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் மூலம் பெறப்பட்ட தகுதி வாய்ந்த விண்ணப்பங்களுக்கு நேர்காணல் மூலமாக, இடஒதுக்கீடு முறையில் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பத்தை <>http://ranipet.nic.in<<>> என்ற இணையத்தில் பதவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 10, 2024

பொதுமக்கள் குறைத்தீர்வு கூட்டம்; 33 மனுக்கள் பெறப்பட்டன

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைத்தீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி தலைமையில் இன்று நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்களிடமிருந்து 33 மனுக்கள் பெறப்பட்டன.

News July 10, 2024

ராணிப்பேட்டை: ரூ.3.42 கோடியில் நலத்திட்ட உதவிகள்

image

ராணிப்பேட்டை மாவட்டம் மின்னல் கிராமத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் 174 பயனாளிகளுக்கு ரூ.3.42 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி எம்எல்ஏ, கோட்டாட்சியர் பாத்திமா, வட்டாட்சியர் ஸ்ரீதேவி, ஒன்றிய குழு தலைவர் நிர்மலா சௌந்தர், ஊராட்சி மன்ற தலைவர் கோபி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

News July 10, 2024

ராணிப்பேட்டை அமைச்சரை சந்தித்த கலெக்டர்

image

ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தியை திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு கலெக்டர்
ஆயூஷ்குப்தா இன்று மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது கலெக்டர் அமைச்சருக்கு புத்தகம் வழங்கினார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர்
உடனிருந்தார்

News July 9, 2024

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் குறித்து ஆலோசனை கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஜூலை 11ஆம் தேதி மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் தொடங்குவது குறித்து மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி தலைமையில் துறைச்சார்ந்த அலுவலர்களுடன் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!