Ranipet

News July 15, 2024

காமராஜருக்கு மரியாதை செலுத்திய அமைச்சர்

image

வாலாஜா ஊராட்சி ஒன்றியம் அனந்தலை ஊராட்சி பண்டித மாளவியா அரசு நிதி உதவி நடுநிலைப் பள்ளியில் இன்று தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 122-வது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு அவரின் உருவப்படத்திற்கு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். மாவட்ட ஆட்சியர் வளர்மதி உடன் இருந்தார்.

News July 15, 2024

சுய உதவிக் குழுக்கள் தணிக்கைக்கு விண்ணப்பிக்கலாம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுய உதவிக் குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், வட்டார அளவிலான குழு கூட்டமைப்புகளின் தணிக்கைக்கான தணிக்கையாளர்கள் (அ) தணிக்கை நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார். விண்ணப்பத்தை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட மேலாண்மை அலகு திட்ட இயக்குநருக்கு வரும் 19 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

News July 15, 2024

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்கம்

image

தமிழகம் முழுவதும் இன்று முதல் காலை உணவுத்திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் விரிவுப்படுத்தப்படுகிறது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 49 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனை அமைச்சர் ஆர்.காந்தி, வாலாஜா அடுத்த அனந்தலை கிராமத்தில் அமைந்துள்ள பண்டித மாளவியா அரசு நிதியுதவி நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைக்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

News July 14, 2024

பொது மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில், தற்போது கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பும் அபாயம் உள்ளது. எனவே பெற்றோர்கள் சிறுவர்களை ஏரி, குளம் மற்றும் நீர் நிரம்பிய பகுதிக்கு செல்ல அனுமதிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளது.

News July 14, 2024

ராணிப்பேட்டையில் வேலைவாய்ப்பு முகாம்

image

ராணிப்பேட்டை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டு மைய அலுவலகத்தில் வரும் 19 ஆம் தேதி வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளதால்
இந்த வேலை வாய்ப்பு முகாமில் இளைஞர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு பயனடையுமாறு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அனுமதி தெரிவித்துள்ளார்.

News July 14, 2024

ராணிப்பேட்டை குரூப்-1 தேர்வு விபரம்

image

தமிழகம் முழுவதும் நேற்று குரூப்-1 தேர்வு நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை எழுத 2,654 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில், நேற்று நடந்த போட்டி தேர்வை 10 தேர்வு மையங்களில் மொத்தம் 1,840 பேர் எழுதினர். சுமார் 814 பேர் தேர்வு எழுத வரவில்லை. தொடர்ந்து, ராணிப்பேட்டை நவல்பூர் கிரேஷ் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை மாவட்ட ஆட்சியர் வளர்மதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News July 13, 2024

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று(ஜூலை 13) இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாட்டின் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணிக்குள்ளாக இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

News July 13, 2024

ராணிப்பேட்டை மாணவர்களுக்கு நற்செய்தி

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இதன்படி மாவட்டத்தில் உள்ள 49 பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாளான வரும் ஜுலை-15 ஆம் தேதி இத்திட்டம் தொடங்கப்படுகிறது என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

News July 13, 2024

ராணிப்பேட்டை: தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி நேற்று செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாவட்டத்தில் இன்று (13.07.2024) நடைபெறும் குரூப் I தேர்வினை 2,654 தேர்வர்கள் எழுத உள்ளனர். தேர்வு மையத்திற்கு காலை 8 மணி முதல் 9 மணிக்குள் வருகை புரிய வேண்டும். காலை 9 மணிக்கு மேல் தாமதமாக வருபவர்கள் தேர்வு கூடத்திற்கு எந்த காரணத்தையும் கொண்டு அனுமதிக்கப்படமாட்டார்கள்” என தெரிவித்துள்ளார்.

News July 12, 2024

சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு பாராட்டு

image

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் POCSO வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 1.காங்கேயன் என்பவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.5000 அபராதம் 2.விஜயலட்சுமிக்கு 18 மாதங்கள் கடுங்காவல் தண்டனை, ரூ.2500 அபராதம் என வேலூர் மாவட்ட POCSO நீதிமன்றத்தால் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு எஸ்பி பாராட்டு தெரிவித்தார்.

error: Content is protected !!