Ranipet

News July 17, 2024

ராணிப்பேட்டையில் இன்று கண்டன பேரணி

image

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரும் தென்னிந்திய புத்த விஹார் நிறுவனருமான K.ஆம்ஸ்ட்ராங் அரசியல் படுகொலை செய்யப்பட்டார். அதை கண்டித்தும் சி.பி.ஐ விசாரணை நடத்தக்கோரியும் இன்று மாலை 3.00 மணியளவில் ராணிப்பேட்டை மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன பேரணி நடைபெற உள்ளதாக ராணிப்பேட்டை மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

News July 17, 2024

ஆற்காட்டில் போக்குவரத்துக்கு தடை

image

ஆற்காடு, இராணிப்பேட்டை இடையிலான பாலாற்றில் கட்டப்பட்டுள்ள புதிய பாலம் பராமரிப்பு சீரமைக்கும் பணி நடைபெற உள்ளது. இச்சீரமைப்பு பணி காரணமாக 19.07.2024 முதல் 19.08.2024 வரை வாகனங்கள் செல்ல தடைவிதித்து மாற்றுப் பாதையில் செல்ல தேசிய நெடுஞ்சாலை துறை அறிவித்துள்ளது.

News July 16, 2024

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று (16-07-2024) இரவு 7 மணி வரை 17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News July 16, 2024

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் இட மாற்றம்

image

தமிழகத்தில் 10 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 13 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, ராணிபேட்டை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த வளர்மதி சமூக நலத்துறை இணை செயலாளராக மாற்றப்பட்டு, புதிய ஆட்சியராக தமிழக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறை இயக்குநராக பணியாற்றி வந்த J.U சந்திரகலா நியமிக்கப்பட்டுள்ளார்.

News July 16, 2024

ராணிப்பேட்டையில் மத்திய அரசு வேலை வாய்ப்பு அறிவிப்பு

image

இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி அரக்கோணத்தில் காலிப்பணியடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு,18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் https://indiapostgdsonline.gov.in/ என்ற தளத்தில் ம் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக மாதம் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை வழங்கப்படவுள்ளது.

News July 16, 2024

புதுவகையான மோசடி: காவல்துறை எச்சரிக்கை

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை நேற்று எச்சரிக்கை செய்தி வெளியிட்டது. அதில், “அதிக சம்பளத்தில் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு என சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்பட்டு வரும் போலி வேலைவாய்ப்பு விளம்பரங்களை இளைஞர்கள் நம்பி ஏமாற வேண்டாம்; வேலைக்காக முன்பணம் எதுவும் கட்ட வேண்டாம்; இது தொடர்பாக 1930 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்” என தெரிவித்துள்ளது.

News July 15, 2024

ராணிப்பேட்டையில் முன்னெச்சரிக்கை பணிகள்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் மற்றும் மழைக்காலத்தில் பொது மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமை வகித்தார். திட்ட இயக்குனர் லோகநாயகி ஊராட்சிகள் உதவி இயக்குனர் சுதா மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News July 15, 2024

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 278 மனுக்கள் 

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற திங்கள்கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டு அறிந்தார். நேர்முக உதவியாளர் பொது விஜயராகவன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஏகாம்பரம் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

News July 15, 2024

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 15, 2024

காமராஜருக்கு மரியாதை செலுத்திய அமைச்சர்

image

வாலாஜா ஊராட்சி ஒன்றியம் அனந்தலை ஊராட்சி பண்டித மாளவியா அரசு நிதி உதவி நடுநிலைப் பள்ளியில் இன்று தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 122-வது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு அவரின் உருவப்படத்திற்கு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். மாவட்ட ஆட்சியர் வளர்மதி உடன் இருந்தார்.

error: Content is protected !!