Ranipet

News September 12, 2024

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில், SBI வங்கியின் பெயரில் போலியாக Reward Point-களை அனுப்பி இன்றுடன் காலாவதியாகிவிடும் என்றும், Link-யை அனுப்பி Point-களை வெல்லுங்கள் என போலியாக வரும் குறுஞ்செய்திகளை நம்பி பொதுமக்கள் தங்களது விவரங்களை உள்ளீடு செய்யும் போது தங்களது வங்கிக் கணக்கிலுள்ள பணம் மற்றும் முழுவிவரங்கள் திருடப்பட வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளது.

News September 12, 2024

ராணிப்பேட்டை அமமுக தொண்டர்களுக்கு அழைப்பு

image

ராணிப்பேட்டை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வருகிற 15-ஆம் தேதி பேரறிஞர் அண்ணா 116-வது பிறந்த நாளை முன்னிட்டு காலை 9 மணி அளவில் சோளிங்கரில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணா திருவுருவப்படத்திற்கு மாவட்ட கழக செயலாளர் என்.ஜூ. பார்த்திபன் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ள நிலையில் தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.

News September 12, 2024

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 20ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. பல முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. 8ஆம் வகுப்பு முதல் 10,12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஜடிஜ, டிப்ளமோ, நர்சிங் மற்றும் பிஇ படித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் சந்திரகலா கேட்டுக்கொண்டுள்ளார்.

News September 12, 2024

ராணிப்பேட்டையில் அமைச்சர் அறிவிப்பு

image

மேல்விஷாரம் நகர செயலாளரும் நகராட்சி தலைவருமான முகமது அமீன் நேற்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். இவரது மறைவால் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் இரங்கல் தெரிவிக்கும் வகையில் நேற்று முதல் மூன்று நாட்கள் துக்கம் அனுசரித்து கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்து, திமுக கட்சி கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்று கைத்தறி துறை அமைச்சர் காந்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News September 12, 2024

ராணிப்பேட்டை அருகே விபத்தில் பெண் மரணம்

image

அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் யார்டு பகுதியில் பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் வழியாக நடைமேடை எண் 3,4 ஆகியவற்றுக்கு செல்வதற்காக பயணிகள் சென்று வருகின்றனர். நேற்று அதே போன்று 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சரக்கு ரயில் நின்றிருந்த போது அதனை கடந்து செல்ல முயன்றார். அப்போது சரக்கு ரயிலை இயக்கிய போது உடல் துண்டாகி பெண் இறந்தார். அவர் யார் என ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

News September 12, 2024

ராணிப்பேட்டை ஆட்சியர் அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது விநியோக திட்ட சிறப்பு முகாம் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 14ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், செல்போன் எண் இணைத்தல் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை செய்து கொள்ளலாம். இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நேற்று தெரிவித்துள்ளார்.

News September 11, 2024

5ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பலி

image

அரக்கோணம் அடுத்த நாகவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் பிரசன்னா (10). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். இன்று மாலை நாகவேடு காலனி பகுதியில் உள்ள குட்டையில் குளிக்க சென்றான். இதில் ஆழமான பகுதிக்கு சென்ற பிரசன்னா நீரில் மூழ்கி உயிரிழந்தார். தாலுகா போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

News September 11, 2024

அரக்கோணத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

image

அரக்கோணத்தில் டிவிஎஸ் குரூப் ஆஃப் கம்பெனி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் இணைந்து வேலை வாய்ப்பு முகாமினை செப்டம்பர் 12ஆம் தேதி கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் நடத்த உள்ளனர். இந்த முகாமில் பி.இ, டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 11, 2024

ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

image

வாலாஜா சேர்ந்த ஜிப்ரான் என்பவர் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயதில் மின்சாரம் தாக்கியதால் அவரது வலது கை முற்றிலும் செயல் இழந்தது. இந்த செய்தியை கடந்த வாரம் நமது வே2நியூஸ்-ல் பதிவிட்டு இருந்தோம். செய்தி அறிந்த மாவட்ட நிர்வாகம், மாணவனை நேரில் அழைத்து செயற்கை கை பொருத்துவதற்கான அளவீடு செய்யும் பணி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.

News September 11, 2024

இ.பி.எஸ் உடன் ராணிபேட்டை மாவட்ட செயலாளர் சந்திப்பு

image

ராணிப்பேட்டை அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் S.M.சுகுமார், பசுமைவழிச் சாலையில் அதிமுக பொது செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இதில் மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!