Ranipet

News July 23, 2024

காவல் ஆய்வாளருக்கு தமிழக டிஜிபி பாராட்டு

image

காவல் நிலையங்கள் மேம்பட்ட சேவை மக்களுக்கு வழங்குவதை ஊக்குப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் 3 காவல் நிலையங்களை முதலமைச்சர் கோப்பை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ராணிப்பேட்டை காவல் நிலையம் மக்களின் தேவையாக விளங்கி வரும் சிறந்த காவல் நிலையமாக தமிழக காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு, காவல் ஆய்வாளர் பார்த்தசாரதிக்கு டிஜிபி சங்கர் ஜூவால் பதக்கம் வழங்கி பாராட்டினார்.

News July 23, 2024

தெற்கு ரயில்வே அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கோட்டத்தில் 113 அப்ரண்டீஸ் பயிற்சியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 12.08.2024 கடைசி தேதியாகும். https://rrccr.com/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க..

News July 23, 2024

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலப்படம், காலாவதியான பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உணவுப்பொருள் பாக்கெட்களில் உற்பத்தி, பேக்கிங் தேதி, எடை, விலை குறிப்பிடாமல் விற்பது, மேலும், உணவு பொருட்களில் கலப்படம் செய்வது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

News July 22, 2024

நெமிலி தாலுகா கிராமங்களில் தங்கும் ஆட்சியர்

image

நெமிலி தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில் வரும் 24ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உங்களை தேடி உங்கள் ஊர் திட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற இருக்கிறார். அப்போது பொது மக்களின் அடிப்படை பிரச்சனைகளான குடிநீர், கழிவுநீர், கால்வாய், மின்விளக்கு, சாலை வசதி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்கிறார். அன்று இரவு ஏதேனும் ஊரில் தங்கி இருந்து மறுநாள் காலை நெமிலி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை ஆய்வு செய்கிறார்.

News July 22, 2024

சோளிங்கர் அருகே 4 வயது சிறுமி உயிரிழப்பு

image

சோளிங்கர் தாலுகா தாளிக்கால் அடுத்த பனவட்டாம்பாடி பாடசாலை தெருவை சேர்ந்தவர் 4 வயது சிறுமி இன்று வீட்டின் அருகில் உள்ள குட்டைப் பகுதிக்கு சென்று தண்ணீரில் தவறி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் குழந்தை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்து ஏற்கனவே குழந்தை பிரியங்கா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சோளிங்கர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News July 22, 2024

இந்திய குடியரசு கட்சி நிர்வாகி கைது

image

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை கண்டித்து சோளிங்கரில் கடந்த 19ஆம் தேதி தலித் கூட்டமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கொடைக்கல் கிராமத்தைச் சேர்ந்த இந்திய குடியரசு கட்சி நிர்வாகி இளையராஜா அமைச்சர் துரைமுருகன் குறித்து அவதூறாக பேசினார். விஏஓ சங்கரநாராயணன் கொடுத்த புகாரின் பேரில் சோளிங்கர் போலீசார் இளையராஜாவை கொடைக்கல் பஸ் நிறுத்தம் அருகே இன்று கைது செய்தனர்.

News July 22, 2024

பொதுமக்களுக்கு முறையான குடிநீர் வேண்டும்

image

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் பொது மக்களுக்கு முறையான குடிநீர் வழங்குவது குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்திரகலா ஊராட்சிகள் உதவி இயக்குனர் சுதா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில் அனைத்து. நகராட்சி பேரூராட்சி கிராம ஊராட்சிகளில் முறையாக குடிநீர் வழங்குவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

News July 22, 2024

ராணிப்பேட்டையில் மாற்றுத்திறனாளி முகாம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நேரில் சென்று குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து மனுக்களை பெற்று துறை சார்ந்த அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வழங்கினார்.

News July 22, 2024

விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக இன்று தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக தகவல் வந்தது. அப்போது அங்கு வந்த விவசாய சங்கத்தினரை ராணிப்பேட்டை டிஎஸ்பி பிரபு மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தமிழ்நாடு விவசாய சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் கொடுப்பதற்காக அழைத்து சென்றனர்.

News July 22, 2024

4 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில் நான்கு பெண் பயனாளிகளுக்கு தலா ரூ.5,300 மதிப்பில் தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் திட்ட இயக்குனர் லோகநாயகி நேர்முக உதவியாளர் கலைவாணி ஆகியோர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!