India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்களிடம் புகார் மனுவாக 42 மனுக்கள் பெறப்பட்டு அதன் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைக்க அடுத்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுக்கிறார். 5 ஆண்டுகளில், ரூ.9,000 கோடி முதலீட்டில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த தொழிற்சாலையில் ஜாகுவார், லேண்டர் ரோவர் கார்களை தயாரிக்க டாடா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
ராணிப்பேட்டை ஆட்சியர் சந்திரகலா நேற்று நெமிலி வட்டத்தில் ஆய்வு செய்தார். அதில் பனப்பாக்கம் அருந்ததிபாளையம் அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு பதிவேடுகளை ஆய்வு செய்தார். மேலும், மையத்திற்கு வருகை புரியும் குழந்தைகள் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு உணவு தயார் செய்ய வேண்டும். வருகை புரியாத குழந்தைகளை பதிவேட்டில் பதிவு செய்து கணக்கு காட்டினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் சந்திரகலா நேற்று பனப்பாக்கம் பேரூராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமில் 135 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். உடன் பேரூராட்சி தலைவர் கவிதா சீனிவாசன், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார், செயல் அலுவலர் குமார் மற்றும் பலர் உள்ளனர்.
ஆடி கிருத்திகையை முன்னிட்டு, ஜூலை 27ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை அரக்கோணத்தில் இருந்து காலை 10:18, 11:10, பகல் 12:58, 1:48, 2:48, மாலை 3:38 ஆகிய நேரங்களில் அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு 6 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. மறுமார்க்கத்தில் திருத்தணியில் இருந்து அரக்கோணத்திற்கு சிறப்பு ரயில்கள் வருகின்றன என்று தெற்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது.
சோளிங்கர் ரெண்டாடி கிராமத்தை சேர்ந்த மணிவேலுவின் மகள் நிகிதா அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார். வீட்டில் இருந்து திடீரென காணாமல் போன மாணவி அங்குள்ள கிணற்றில் சடலமாக கிடப்பதாக இன்று தகவல் கிடைத்தது. சோளிங்கர் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் அங்கு சென்று மாணவி நிகிதாவின் உடலை கைப்பற்றி இவர் எப்படி இறந்தார் என விசாரித்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் சாலை பணிகள் குறித்து நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கோட்ட பொறியாளர்களான செல்வகுமார், சுந்தரி மதன்குமார், லட்சுமி காந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடப்பாண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 57 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் சாகுபடி தொழில்நுட்ப ஆலோசனை, விதை நேர்த்தி, உர நிர்வாகம், இதர திட்டங்கள் கால்நடை வளர்ப்பு போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது என்று ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்து வகை பதிவுதாரர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் வரும் ஜூலை 26ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த முகாமில் 4360 காலிப்பணியிடங்களுக்கு தகுதியான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா, இ.ஆ.ப. அவர்கள் இன்று (23.07.2024) பனப்பாக்கம் பேரூராட்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று 10ஆம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடினர். உடன் பேரூராட்சி தலைவர் கவிதா ஸ்ரீனிவாசன், தலைமை ஆசிரியர் அபிதா ஆகியோர் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.