Ranipet

News February 3, 2025

அண்ணாவிற்கு மரியாதை செலுத்திய அமைச்சர்

image

தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 58 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே விசி மோட்டூர் பகுதியில் அமைந்துள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு ராணிப்பேட்டை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர் காந்தி கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்.

News February 3, 2025

மினி பேருந்து வசதிக்கு விண்ணப்பிக்கலாம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பேருந்து வசதி இல்லாத குக்கிராமங்களுக்கு புதிய மினி பேருந்து திட்டத்திற்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. பேருந்து வசதி இல்லாத விவரங்களை நாளை (பிப்.4) ராணிப்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் எழுத்து மூலமாகவோ அல்லது நேரிலோ தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 3, 2025

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

image

ராணிப்பேட்டையில் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, ராணிப்பேட்டை அருகிலுள்ள D5 சிப்காட் காவல் நிலையத்தின் மீது நேற்று இரவு, இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்துவந்த இருவர் பெட்ரோல் குண்டை வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது, இதுகுறித்து ராணிப்பேட்டை சிப்காட் காவல்த்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் அப்பகுதி பரபரப்பாக உள்ளது.

News February 2, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( பிப்ரவரி 2 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100.

News February 2, 2025

மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு செய்தி வெளியிடு

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக இன்று (பிப்ரவரி 2) ஞாயிற்றுக்கிழமை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு செய்தி குறிப்பில், பாதுகாப்பு உங்களின் குடும்பத்திற்கு நீங்கள் வழங்கக்கூடிய மிகச் சிறந்த பரிசாகும் என்று மாவட்ட காவல்துறை சார்பாக மக்களுக்கு சமூக வலைதளத்தில் விழிப்புணர்வு செய்தி வெளியிட்டுள்ளது.

News February 2, 2025

300 கிலோ ரேஷன் அரிசி ரயில்வே போலீசார் பறிமுதல்

image

அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து ஆந்திர மாநிலத்திற்கு விரைவு மற்றும் மின்சார ரயில்களில் அரிசி கடத்துவதாக ரயில்வே போலீசருக்கு தகவல் கிடைத்தது அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் நேற்று இரவு பிளாட்பாரங்களில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஆங்காங்கே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

News February 2, 2025

சோளிங்கர் அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

image

சோளிங்கர் அடுத்த பெரிய வைலாம்பாடியை சேர்ந்தவர் செல்வம், 35. தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில் அப்பகுதியில் கோவை ஈஷா யோக மைய, மஹா சிவராத்திரி விழிப்புணர்வு ரத ஊர்வலம் நடந்தது. அப்போது அப்பகுதியில் சென்ற தாழ்வான மின்கம்பியில் ரதம் உரசியதில் அருகிலிருந்த செல்வம் மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இதுகுறித்து, போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்

News February 1, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (பிப்-1) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100.

News February 1, 2025

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ளதாவது: Google Play Store-ல் உள்ள அங்கீகரிக்கப்படாத கடன் செயலிகளை(Loan Apps) பதிவிறக்கம் செய்ய வேண்டாம். இந்த செயலிகள் உபயோகிப்பவர்களின் தனிமுறை மீறும் வகையில் பயன்படுத்துகின்றன. தங்களின் ஆதார், வங்கி விவரங்களை பதிவு பெறாத கடன் செயலிகளில் கொடுக்க வேண்டாம். உங்களுடைய புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்ட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

News February 1, 2025

80 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைத்த எஸ்பி

image

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் திருடு போன மற்றும் தவறவிட்ட செல்போன்களை போலீசார் மீட்டு அதனை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. மொத்தம் ரூ.8 லட்சம் மதிப்புள்ள 80 செல்போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா இன்று உரியவரிடம் ஒப்படைத்தார்.

error: Content is protected !!