India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியம் லப்பைபேட்டை பகுதியைச் சேர்ந்த பார்வையற்ற மாணவன் எஸ்.கீர்த்திவாசனுக்கு, அதிமுக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு எஸ்.எம்.சுகுமார் தனியார் கண் மருத்துவமனையில் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தார். தனது சொந்த செலவில் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் கிளாஸ் கண்ணாடி வழங்கினார்.
ராணிப்பேட்டை திமுக மாநில சுற்றுச்சூழல் அணியின் துணைச்செயலாளர் வினோத் காந்தியின் இல்லத்தில், குடியாத்தம் நகர கழக திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் டிசைனர் பாலாஜி நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார் இதில் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
ராணிப்பேட்டையில் மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மத்திய அரசுக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஆர்ப்பாட்டத்திற்கு வருகை புரிந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனை, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பட்டு வேட்டி அணிவித்து நேரில் வரவேற்றார்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆயுதப்படை தலைமையகத்தில் இன்று போலீசாருக்கான வாராந்திர கவாத்து பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியின்போது போலீசார் தங்களது உடல் தகுதி திறனை நிரூபிக்கும் வகையில் உடற்பயிற்சிகள் செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி போலீசாரின் உடல் தகுதித் திறனை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .டிஎஸ்பி வெங்கடேசன் உடன் இருந்தார்
கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் R. காந்தி தலைமையில், ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு எந்தவித திட்டத்தையும் அறிவிக்காத பாஜக அரசை கண்டித்து இன்று காலை 10:00 மணிக்கு ராணிப்பேட்டை முத்து கடையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், ஆற்காடு, வாலாஜா, கலவை, சோளிங்கர், நெமிலி என மொத்தம் 6 தாலுகா உள்ளது. இந்த தாலுகாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து பல மாதங்களாக காத்திருக்கின்றனர். தகுதியானவர்களுக்கு ரேஷன் கார்டு ஒப்புதல் அளிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் ஏகாம்பரம் தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
ஆற்காடு அடுத்த மோசூர் கிராமத்தில் கடந்த 14ஆம் தேதி மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. இதில் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. திமிரி போலீசார் இரு தரப்பினரிடம் புகார் பெற்று ராணுவ வீரர், அரசு சித்த மருத்துவ உதவியாளர், ஊர் நாட்டாமைக்காரர் என 9 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த 9 பேரும் தலைமறைவாக உள்ளனர். போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் பாறைமேடு பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஓம்பிரகாஷ், கருத்து வேறுபாடு காரணமாக எழுந்த முன்விரோதத்தில் மனைவி சந்தியாவை, மாமியார் வீட்டில் வைத்து கத்தியால் வெட்டி இன்று கொலை செய்துள்ளார். கொலை செய்த ஓம்பிரகாஷை கைது செய்த பானாவரம் போலீசார், சம்பவம் குறித்து நேரில் சென்று விசாரணை செய்து வருகின்றனர்.
ஆற்காடு பகுதியில் உள்ள ஆற்காடு நகர பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் ஆற்காடு நகர பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டு தெருமுனை பிரச்சாரங்கள் நடத்துவது மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பான ஆலோசனைகளை மேற்கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலெக்டர் சந்திரகலா, எஸ்பி கிரண்ஸ்ருதி, ஆர்டிஓ பாத்திமா, திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, நகராட்சி தலைவிகள் சுஜாதா (ராணிப்பேட்டை), ஹரிணி (வாலாஜா), தமிழ்செல்வி (சோளிங்கர்), தேவி (ஆற்காடு), லட்சுமி (அரக்கோணம்) என்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் 90 % பெண்கள் ஆட்சி செய்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.