India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அரிசி கடை மற்றும் சிப்காட் போலீஸ் ஸ்டேஷன் மீது நேற்று நள்ளிரவு இருவர் பெட்ரோல் குண்டு வீசினர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள எஸ் பி அலுவலக செய்தி குறிப்பில் குற்றவாளி ஒருவர் தன் மீதும், தன் தந்தை மீதும், நண்பர்கள் மீதும் போலீஸ் வழக்கு பதிவு செய்த ஆத்திரத்தில் பழி வாங்கவே இரு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர் என நேற்று தெரிவித்துள்ளனர்.

சிப்காட் போலீஸ் ஸ்டேஷன் மீது நேற்று நள்ளிரவில் இருவர் பெட்ரோல் குண்டு வீசினர். இது தொடர்பாக ஹரி என்பவரை போலீசார் பிடிக்கும் முயன்ற போது சப்இன்ஸ்பெக்டர் முத்தீஸ்வரனை கத்தியால் ஒருவர் தாக்க முயன்றார். தற்காப்புக்காக போலீஸ் சுட்டதில் அரி என்பவர் காயமடைந்தார். இந்நிலையில் காயமடைந்த அரியை வாலாஜா அரசு மருத்துவமனையில் போலீசார் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வந்த நிலையில் சிப்காட் பகுதியைச் சேர்ந்த ஹரி என்ற வாலிபரை காவேரிப்பாக்கம் பகுதியில் தனிப்படை போலீசார் பிடிக்க முயன்ற போது, உதவி ஆய்வாளர் முத்தீஸ்வரனை, ஹரி கத்தியால் தாக்க முயற்சித்துள்ளார். தற்காப்புக்காக போலீசார் ஹரியை காலில் சுட்டு பிடித்தனர். வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( பிப்ரவரி 3 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100.

ராணிப்பேட்டை சிப்காட் காவல்நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பெட்ரோல் வெடிகுண்டு வீசிவிட்டு தப்பியோடியதாக ஊடகங்களில் வெளியாகி இருக்கும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய காவலர்களுக்கே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கிய திமுக அரசின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தென்னக ரயில்வே இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: கோயம்புத்தூர் – பனாரஸ் இடையே வாராந்திர சிறப்பு ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளுர், பெரம்பூர் வழியாக ரயில் எண் 06187 பிப்.16 காலை 6:35 மணிக்கு கோயம்புத்தூரில் இருந்து புறப்படும். பிப்.,22 இல் 06188 பனாரஸிலிருந்து அரக்கோணம் வழியாக கோயம்புத்தூர் வரை செல்லும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஒரு ஏடிஜிபி, தன்னை கொலை செய்யும் நோக்கில் தன் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டதாக சொல்வதும், காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்படுவதும் தான் சட்டம் ஒழுங்கு காக்கப்படும் ஆட்சியா என்று அதிமுக பொதுச்செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

ராணிப்பேட்டையில் சிறுபான்மை மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி, வேலை வாய்ப்பு, பட்டப் படிப்பு பயில்பவர்களுக்கு கல்விக் கடனுதவி வழங்கப்படுகிறது. இதற்கு தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பிக்க தகுதிகள் குறித்த தகவல்கள் மேலே புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான மாணவர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நெமிலி பிடிஓவாக பணியாற்றி வந்த தாசபிரகாஷ் அரக்கோணத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரக்கோணத்தில் பணியாற்றி வந்த பாஸ்கரன் மற்றும் ஜோசப் கென்னடி ஆகிய பிடிஓகள் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும், திமிரி பிடிஓ பிரபாகரன் அரக்கோணத்திற்கும், ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஜெயஸ்ரீ நெமிலி பிடிஓவாகவும் மாற்றம் செய்து ஆட்சியர் சந்திரகலா இன்று உத்தரவிட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உதான் திட்டத்தின் கீழ் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. அரக்கோணம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள ஐந்து இடங்களில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள விமான ஓடுதளங்களை சீரமைத்து, விமான நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.