India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை சூரல்மலை என்ற இடத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இங்கு இதுவரை 80-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளதாக தகவல் வெளியானது. நிலச்சரிவு மீட்பு பணிக்காக அரக்கோணம் என்டிஆர்எப் வீரர்கள் 60 பேர் கூடுதலாக இன்று அனுப்பி வைக்கப்பட்டனர். ஏற்கனவே மீட்பு பணியில் வீரர்கள் உள்ளனர். இதுவரை மொத்தம் 300 வீரர்கள் அங்கு உள்ளனர்.
ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைப்பதற்கு தேவையான இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் பிற முன்னேற்பாடுகளுக்கு தேவையான நிதியில் ரூபாய் 3 லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகத்தை அணுகுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு முறையான குடிநீர் வழங்கும் பணிகள் குறித்தும் பிரச்சனைகள் குறித்தும் வாராந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் சுதா மற்றும் உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், நேர்முக உதவியாளர் பொது விஜயராகவன், நேர்முக உதவியாளர் நிலம் கலைவாணி மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பக்கத்தில் 400 ஏக்கரில், ரூ.9,000 கோடியில் டாடா மோட்டார் நிறுவனத்தின் ஜாகுவார், லேண்ட் ரோவர் புதிய மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலை செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. மேலும் ஜாகுவார், லேண்ட் ரோவர் ஆலைக்கு முதல்வர் முக ஸ்டாலின் அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைக்க உள்ளார். மேலும் இந்தியாவின் முதன் ஜாகுவார், லேண்ட் ரோவர் அலையாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமையவுள்ளது.
தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்க்கு இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி, நெல்லை, குமரி, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மிதமான மழையும், நீலகிரி, ஈரோடு, வேலூர், ராணிப்பேட், தூத்துக்குடி உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு லேசான மழையும் இரவு 7 மணி வரை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை மூலம் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு சீட் திட்டம் சார்பில் நிலம், வீடு மற்றும் வீடுகள் கட்ட நிதி உதவி வழங்குதல் சுகாதாரம் கல்விக்கான அதிகாரம் அளித்தல் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதில் பயனடைய விரும்புவோர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.
அரக்கோணத்தில் உள்ள ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை தளத்தில் உள்ள விமான ஓடுபாதை 4,500 மீட்டர் நீளமுள்ளது. இது இந்தியாவின் இரண்டாவது நீளமான ஓடுபாதையாகும். மேலும் இது ஆசியாவின் இரண்டாவது கடற்படை பெயிற்சி மையமாகும்.
அரக்கோணம் இந்திய கடற்படை நகர லயன்ஸ் சங்கம் ஜாமியா & ஈத்கா மஸ்ஜித் அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் அரக்கோணம் அந்-நூர் கண் மருத்துவமணை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் இன்று அரக்கோணம் கனரா பேங்க் அருகில் ஜாமியா கம்யூனிட்டி ஹாலில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. கண் எரிச்சல், கருவிழி பரிசோதனை, கிட்ட பார்வை. தூரப்பார்வை உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.