India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா தலைமையில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ சட்டம், குழந்தை திருமணம் தடுத்தல் ஆகியவை குறித்து நாடக கலைஞர்கள் மூலம் இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஏடிஎஸ்பி குணசேகரன், டிஎஸ்பி ரமேஷ் ராஜ், இன்ஸ்பெக்டர் பாரதி கலந்து கொண்டனர்.

இராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC GROUP 2 & 2A முதன்மை தேர்விற்கான மாதிரி தேர்வு Virtual learning portal https://tamilnaducareerservices.tn.gov.in/ வெளியிடப்பட்டுள்ளது. போட்டித்தேர்வுக்கு பயிலும் மாணவ மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஒழிப்பு இயக்க கூட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகளான ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மாதம் முழுக்க சேகரித்து வைக்கப்பட்ட பிளாஸ்டிக்கை நான்காவது சனிக்கிழமைகளில் அப்புறப்படுத்தி பிளாஸ்டிக்கை மாற்றுப் பொருளாக தயாரிக்கும் நிறுவனத்தில் வழங்க வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சம்பளம் ரூ.50,000 முதல் – ரூ.1,80,000 வரை வழங்கப்படும். வரும் 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.<

ஆற்காடு குட்டைகரைத் தெருவைச் சோ்ந்தவா் சேட்டு (62). இவா், நேற்று புதன்கிழமை ஆற்காடு அண்ணா சிலை அருகே நடந்து சென்றபோது, பின்னால் வந்த லாரி மோதியதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்த புகாரின் பேரில், ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( பிப்ரவரி 5 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100.

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா தலைமையில் பொதுமக்கள் குறைத்தீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் 46 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் ஏடிஎஸ்பி குணசீலன், டிஎஸ்பி ரமேஷ் ராஜ் மற்றும் போலீசார் உடன் இருந்தனர். மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களுக்கு அனுப்பி விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் முக்கிய குற்றவாளியான தமிழரசனை இன்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரை போலீசார் பிடிக்க முயன்ற போது தப்பி ஓடியதில் அவரது கை, கால் எலும்பு முறிந்ததாக ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலப்புலம் கிராமத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் அரக்கோணத்தில் இருந்து ஓச்சேரி செல்லும் சாலையில் உத்திரம்பட்டு பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி முடிவுற்றது. இங்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று தரப்பரி சோதனை செய்தார். அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், நெமிலி வட்டாட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உடன் இருந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக இன்று (பிப்ரவரி 5) சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சாலையின் ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் நடைபாதையில் நடப்பது பாதுகாப்பானது என ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு செய்தி வெளியிடப்பட்டது. பொதுமக்களாகிய நீங்கள் சாலை விதிகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஷேர் செய்யுங்கள்.
Sorry, no posts matched your criteria.