India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் இன்று மதுரை ரயில் நிலையத்தில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது மதுரையில் ரயில் விபத்து ஏற்பட்டு, சம்பந்தப்பட்ட துறையினருக்கு தகவல் தெரிவித்தால் எவ்வளவு நேரத்தில் அனைத்து துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சேர்கிறார்கள், மீட்பு பணிகள் எவ்வளவு வேகமாக நடைபெறுகிறது என்பது குறித்து ஒத்திகை பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனையாளர்கள் ஆய்வுக் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் நடைபெற்றது. இதில் வேளாண் இணை இயக்குனர் அசோக்குமார் துணை இயக்குனர் செல்வராஜ் நேர்முக உதவியாளர் திலகவதி, துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி தட்டுப்பாடு இன்றி கடைகளில் கிடைக்க வேண்டும் என்றார்.

சோளிங்கர் அருள்மிகு லஷ்மி நரசிம்ம ஸ்வாமி திருக்கோயிலில் பக்தோசித பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தக்கான் குளத்தில் தெப்பல் உற்சவம் பிப்.8 முதல் 10 வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் மூன்று சுற்றுகளும், இரண்டாவது நாள் ஐந்து சுற்றுக்களும், மூன்றாவது நாள் ஏழு சுற்றுக்களும் சுற்றப்படும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்ளுமாறு கோவில் நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் பிப்ரவரி 9 கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி மொழியை ஆட்சியர் மற்றும் அனைத்து துறைச்சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் எடுத்துக் கொண்டனர். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ், நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வேலூர் வரதராஜன் ஆகியோர் இருந்தனர்.

ராணிப்பேட்டை காவல்துறை சார்பாக இன்று பிப்ரவரி -7 வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்தியில் “பெற்றோருக்கான பாதுகாப்பு குறிப்பு, உங்கள் குழந்தையைப் பாதுகாக்கவும், பள்ளி போக்குவரத்துக்கு அதிக நெரிசலான ஆட்டோக்கள்/பஸ்கள் வேண்டாம் என்று சொல்லுங்கள் என்று ராணிப்பேட்டை காவல் துறை சார்பாக இன்று செய்தி வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு நாளை (பிப் 8) வேலூர் சேண்பாக்கத்தில் உள்ள ராஜேஸ்வரி எஸ்டேட் வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் 13 வயது முதல் 21 வயது வரை உள்ள இளம் வீரர்கள் பங்கேற்கலாம் என மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் சம்பத் தெரிவித்துள்ளார். மேலும் தகவலுக்கு மாவட்ட கிரிக்கெட் சங்க கவுரவ செயலாளர் ஸ்ரீதரனை தொடர்பு கொள்ளலாம்.

அம்மூர் காப்புக்காடு பகுதியில் மான், புள்ளிமான், உடும்பு, நரி, காட்டுபன்றிகள் என பலவகை உயிரினங்கள் உள்ளன. இந்த நிலையில் அம்மூர் ரயில் நிலையம் அடுத்துள்ள மலைப்பகுதியில் நேற்று மர்மநபர்கள் சிலர் தீ வைத்துள்ளனர். சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி மலை முழுவதும் வட்ட வடிவில் பற்றி எரிந்தது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( பிப்ரவரி 6 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100.

மகளிர் சுய உதவி குழுவினர் உற்பத்தி செய்யும் பொம்மை, பதப்படுத்தப்பட்ட உணவு, கைத்தறி சேலைகள் உள்ளிட்ட மகளிர் குழுவினர் உற்பத்தி செய்யும் பொருட்கள் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் பிப்., 8ம் தேதி முதல் 17ம் தேதி வரை கண்காட்சி நடத்தி விற்பனை செய்யப்பட உள்ளது. விருப்பமுள்ள மகளிர் குழுவினர் மகளிர் திட்ட அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக இன்றைய செய்தி குறிப்பில், மாவட்டத்தில் உள்ள 6 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் பிப்ரவரி 8ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், செல்போன் எண் இணைத்தல் ஆகியவற்றுக்கு மனு கொடுத்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.