Ranipet

News August 2, 2024

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 7 மணிவரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

News August 2, 2024

 வந்தே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

image

சென்னை கடற்கரையில் இருந்து வில்லிவாக்கம், அரக்கோணம் வழியாக காட்பாடி வரை வந்தே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நாளை ஆகஸ்ட் 3ஆம் தேதி நடைபெறுகிறது. அரக்கோணத்திற்கு காலை 11 .05 மணிக்கு வருகிறது. காட்பாடிக்கு காலை 11:50 மணிக்கு சென்று சேருகிறது. மீண்டும் காட்பாடியில் இருந்து கடற்கரைக்கு வந்தே மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது 12 பெட்டிகள் கொண்ட ரயிலாக இருக்கும் 

News August 2, 2024

விலையில்லா சைக்கிள் வழங்கிய அமைச்சர்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 76 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயிலும் 9.086 மாணவ மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு ஆட்சியர் சந்திரகலா தலைமை தாங்கினார். அமைச்சர் ஆர். காந்தி விலையில்லா சைக்கிள் மற்றும் 835 பள்ளிகளில் பயிலும் மாணவ , மாணவிகளுக்கான சீருடைகள் வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்தார். இதில் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

News August 1, 2024

நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

image

ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் இரத்தினகிரி திருமுருகன் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார். அப்போது மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

News August 1, 2024

ராணிப்பேட்டையில் 56 கொள்முதல் நிலையங்கள் திறப்பு?

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 19 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.மேலும் சுமார் 56 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.இப்பகுதிகளில் நெல் நடவு மற்றும் அறுவடை குறித்து சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்கள், வேளாண் அலுவலர்கள் கண்காணித்து விவாசயிகளின் தேவைகளை மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டுமென ஆட்சியர் வேளாண் அதிகாரிகளுக்கு நேற்று உத்தரவிட்டார்.

News August 1, 2024

ஆற்றுப்படுத்துனர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

image

ராணிப்பேட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு ஒரு ஆற்றுப்படுத்துனர் பதவி முற்றிலும் தற்காலிக தொகுப்பபூதிய ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 42 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதியானவர்கள் ஆகஸ்ட் 16ஆம் தேதி மாலை 5:45 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் முகவரிக்கு அனுப்பலாம் என்று ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News July 31, 2024

ராணிப்பேட்டை மாவட்ட திட்ட இயக்குனர் மாற்றம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக ஜெயசுதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றி வந்த திட்ட இயக்குனர் லோகநாயகி செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குனராக இன்று பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அரசின் கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி பிறப்பித்துள்ளார்.

News July 31, 2024

கண்காட்சியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வேளாண்மை துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் குறித்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பார்வையிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் உடன் இருந்தனர்.

News July 31, 2024

ராணிப்பேட்டை ஆட்சியர் அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியம் நெடும்புலி மதுரா மஹால் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நாளை ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெற உள்ளது. எனவே மேலபுலம், பொய்கை நல்லூர், ரெட்டிவலம், அகவலம், நெடும்புலி, வேட்டாங்குளம் ஆகிய கிராம மக்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கேட்டுக்கொண்டுள்ளார்.

News July 31, 2024

3333 பேருக்கு வீடு ஆட்சியர் அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடப்பாண்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் கான்கிரீட் வீடுகள் கட்டி தருவதற்கு 3,333 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 2,431 பேருக்கு பட்டா இடம் உள்ளது அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்பட உள்ளது. ஆனால் மீதமுள்ள 902 பேருக்கு பட்டா இல்லாததால் அவர்களுக்கு மாற்று இடத்தில் வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!