India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <

ஆற்காடு டவுன் சப் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி மற்றும் போலீசார் நேற்று மாலை வேப்பூர் பைபாஸ் சாலை சந்திப்பு அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பீடா கடையில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று சோதனை செய்ததில் 132 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.

அரக்கோணம் டவுன் தனிப்பிரிவு காவலராக ராஜேஷ், தக்கோலம் தனிப்பிரிவு காவலராக கவியரசன், பாணாவரம் தனிப்பிரிவு காவலராக ராஜ் கமல் ஆகியோரை நியமனம் செய்து ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அரக்கோணம் டவுன் தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வந்த சிவகுமார் ஆற்காடு தாலுகா போலீஸ் ஸ்டேஷனுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு இயக்க மேலாண்மை அலகு சார்பில் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள்நடமாட்டம் குறித்து தங்களுடைய சுயவிபரங்கள் இன்றி புகார் செய்வதற்கு, DRUG FREE TN என்ற அலைபேசி செயலியை (Mobile App) பதிவிறக்கம் செய்யுங்கள் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (பிப்ரவரி 13) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் தொடர்பு எண் மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளது. மேலும், உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் – 9884098100

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, எஸ்.பி விவேகானந்த சுக்லா ஆகியோர் இன்று அரசு தலைமை செயலாளர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற காணொளி காட்சி வாயிலான ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது, ராணிப்பேட்டை மாவட்டத்தில், அனைத்து துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து தலைமைச் செயலாளர் கேட்டறிந்தார். ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு(CISF) CONSTABLE/DRIVER AND
CONSTABLE/DRIVER-CUM-PUMP OPERATOR (DRIVER FOR FIRE SERVICES) பணிக்காக அறிவிப்பு வெளியிட்டுள்ளது அதிக அளவிலான ஆட்கள் தேவைப்படுவதால் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது Website : https://cisfrectt.cisf.gov.in/

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பழங்குடியின இளைஞர்களை ஒருங்கிணைத்து பிப்ரவரி.15 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ராணிப்பேட்டை மாவட்டம் ஆட்சியர் கூட்ட அரங்கில் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான தேர்வு செய்யும் பணிகள் நடைபெறுகிறது. ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின இளைஞர்கள் கலந்து கொள்ளலாம் என்று ஆட்சியர் சந்திரகலா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) <

அம்மூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (52). ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பா.ம.க. முன்னாள் செயலாளர். அரசு வேலை வாங்கித்தருவதாக, வஞ்சூர் கிராமத்தை சேர்ந்த சிவக்குமாரிடம் ரூ.8 லட்சத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம், பணத்தை திருப்பி கேட்ட சிவக்குமாரை தாக்கியதாக முன்னாள் ராணிப்பேட்டை மாவட்ட பா.ம.க. செயலாளர் சரவணனை போலீசார் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.