Ranipet

News August 15, 2024

கலவை அருகே சுவர் இடிந்து குழந்தை மரணம் 

image

கலவை அருகே  கனியன்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி லைலா. இவர்களது 2 வயது குழந்தை தனுஷ்கா ஸ்ரீ. இன்று தனது தாத்தாவுடன் வீட்டில் அருகில் விளையாடி கொண்டிருந்தார். அங்கு பிடிமானம் இல்லாமல் இருந்த செங்கல்சுவர் இடிந்து குழந்தை மீது விழுந்தது. பலத்த காயமடைந்த குழந்தையை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி தனுஷ்கா ஸ்ரீ இறந்தார்.

News August 15, 2024

ராணிப்பேட்டையில் கனமழைக்கு வாய்ப்பு

image

கேரள கடலோர பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இராணிப்பேட்டை, தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

News August 15, 2024

காவனூரில் விசிகவினர் சாலை மறியல்

image

ராணிப்பேட்டை மாவட்டம் காவனூர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி அக்கட்சியினர் பதாகைகளை வைத்தனர். அந்தப் பதாகையை ஒரு சிலர் அப்புறப்படுத்தினர். அதை எதிர்த்து விசிக கட்சியினர் அந்த நபர்களை கைது செய்யும்படி சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திமிரி போலீசார் அந்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் கலைந்து சென்றனர்.

News August 15, 2024

93 அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் – ஆட்சியர்

image

ஆகஸ்ட் 15 சுதந்திர தின கொண்டாட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் தனித்துணை ஆட்சியர் அகிலாதேவி, உதவி ஆணையர் கலால் வரதராஜன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஏகாம்பரம், அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா உள்ளிட்ட 93 வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்க உள்ளதாக ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News August 14, 2024

விருது பெற விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தொழில் முனைவோரும் உரிய தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விருதுகள் உலக சுற்றுலா தினத்தன்று சென்னையில் வழங்கப்படும். விண்ணப்பங்களை மாவட்ட சுற்றுலா அலுவலர் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 20 என்று ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.

News August 14, 2024

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று (14-08-2024) 28 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

News August 14, 2024

எஸ்பி தலைமையில் குறைதீர் கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கிரண்சுருதி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். மொத்தம் 28 பேர் மனுக்கள் கொடுத்தனர். இதில் சீட்டு பணம் மோசடி, வேலை வாங்கி தருவதாக மோசடி, காதல் திருமணம் செய்து சேர்ந்து வாழாதது என்று பல்வேறு மனுக்கள் தரப்பட்டன.

News August 14, 2024

ராணிப்பேட்டையின் சிறப்புகளில் ஒன்று

image

அரக்கோணம், மகேந்திரவாடியில் அமைந்துள்ள மகேந்திர விஷ்ணுகிருகம் என்னும் குடைவரை ஓர் வரலாற்றுச் சின்னமாக இருக்கிறது. இது கி.பி.600 முதல் 630-ஆம் ஆண்டுகளில் ஆட்சி செய்த மகேந்திரவர்மன் காலத்தில் குடையப்பட்ட குடைவரையாகும். எனவே அவரின் பெயராலே மகேந்திர விஷ்ணுகிருகம் என்று அழைக்கப்படுகிறது. வெட்டவெளியான ஓர் இடத்தில் தனியாக ஒரு சிறுபாறையை குடைந்து உருவாக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பாகும். சேர் செய்யவும்

News August 14, 2024

நாய் கடித்த குழந்தை ரேபிஸ் நோயால் உயிரிழப்பு

image

அரக்கோணம் கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது குழந்தை நிர்மல் (4). கடந்த ஜூன் 27ம் தேதி வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த நிர்மலை தெரு நாய் கடித்ததில் ரேபிஸ் நோய் தாக்கி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் நேற்று மருத்துவமனையில் உயிரிழந்தார். ரேபிஸ் நோய் தாக்கியதால் உடலை வீட்டிற்கு எடுத்து வராமல் நேரடியாக இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர்.

News August 13, 2024

மயக்க டீ கொடுத்து கொள்ளை

image

மும்பையில் இருந்து அரக்கோணம் வழியாக நாகர்கோவில் செல்லும் ரயிலில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மதியனூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி ரோனிகா பயணம் செய்தனர். அவர்களுக்கு 3 ஆண்கள் மயக்க டீ கொடுத்து அவர்களிடமிருந்து தாலி கம்பல் கொள்ளையடித்து சென்றனர். அரக்கோணம் அருகில் வந்த நிலையில் மயக்கம் தெளிந்ததால் 2 பேரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அரக்கோணம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!