Ranipet

News February 20, 2025

ராணிப்பேட்டையில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

 வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது. எனவே விருப்பமும் உள்ளவர்கள் காலை 10 மணி அளவில் எண்.9 ஆற்காடு சாலை, பழைய BSNL அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு வழிகாட்டும் மையத்துக்கு நேரில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04172-291400 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News February 20, 2025

வாலாஜா அங்கன்வாடி மையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு. சந்திரகலா, நேற்று (19.02.2025) “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாமில் வாலாஜா வட்டம், அனந்தலை கிராமத்தில் பண்டித மாளவியா அரசு நிதி உதவி நடுநிலைப்பள்ளியில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுடன் அமர்ந்து குழந்தைகளின் வருகை பதிவேடு, எடை குறைவான ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

News February 20, 2025

பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 2 நபர்களுக்கு பசுமை சாம்பியன் விருது மற்றும் தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. மேலே கூறப்பட்ட விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டிய படிவம் https://tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது.மாவட்ட கலெக்டரிடம் பசுமை சாம்பியன் விருதுக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி 15.4.25 என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News February 19, 2025

அரசு திட்டங்கள் குறித்து ஓவிய போட்டி அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசின் சார்பில் ஓவிய போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த ஓவியம் அமைதல் வேண்டும். ஓவியங்களை தெளிவான முறையில் புகைப்படம் எடுத்து https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd1m8yjtK7zMl7ndKkt0H5lpaht46LF7T_FaWyg92lpiufDIw/viewform என்ற link-ல் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

News February 19, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( பிப்ரவரி 19) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100.

News February 19, 2025

கால்நடை ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கிய ஆட்சியர்

image

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வாலாஜா தாலுகாவுக்கு உட்பட்ட அனந்தலை கிராமத்தில் இன்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா விவசாயிகளுக்கு கால்நடை ஊட்டச்சத்து பொருட்களை வழங்கினார். அப்போது கால்நடை உதவி இயக்குனர் திருநாவுக்கரசு, ஊராட்சி மன்ற தலைவர் தேவகி உடனிருந்தனர். கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் போட வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.

News February 19, 2025

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

ராணிப்பேட்டை காவல்துறை இன்று வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்தியில் வாகனம் ஓட்டும் போது மூன்று விஷயங்களை தவிர்க்கும்படி தெரிவித்துள்ளது: அதன்படி, குடித்துவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம், வாகனம் ஓட்டும்போது குறுஞ்செய்தி மற்றும் அழைப்பு வேண்டாம் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்ட வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளது.

News February 19, 2025

ராணிப்பேட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 

image

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 21-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. அன்றைய தினம் காலை 10 மணி அளவில் எண்.9, ஆற்காடு சாலை, பழைய பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்து கொள்ளலாம் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News February 19, 2025

பொருளில்லா ரேஷன் அட்டையாக மாற்றி கொள்ளலாம் 

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்கள், அத்தியாவசியப் பொருட்கள் பெற விருப்பமில்லை எனில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் www.tnpds.gov.in என்ற வலைத்ளத்தின் மூலமாக தங்களது அட்டையினை பொருளில்லா ரேஷன் அட்டையாக மாற்றி கொள்ளலாம்.என மாவட்ட கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News February 18, 2025

ராணிப்பேட்டை காவல் துறையினர் விழிப்புணர்வு செய்தி

image

ராணிப்பேட்டை காவல்துறை இன்று வெளியிடப்பட்ட செய்தியில் ஆன்லைனில் விழிப்புடன் இருங்கள் மற்றும் இணைய அச்சுறுத்தல்களைக் கவனியுங்கள் என்றும், உங்கள் கணக்குகளுக்கு வலுவான, தனித்துவமான கடவுச்சொற்களைப் பராமரிக்கவும் எனவும், கூடுதல் பாதுகாப்பிற்காக செயலில் இரு காரணி அங்கீகாரம் பயன்படுத்துமாறும், உங்கள் சாதனங்களையும் மென்பொருளையும் தவறாமல் புதுப்பிக்கவும்  என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

error: Content is protected !!