India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் அழகு சாதன பொருட்கள், பொம்மை வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், கைத்தறி சேலை வகைகள் உள்ளிட்ட பொருட்கள் ஆற்காடு மேல்விஷாரம் எம்எம்இஎஸ் மகளிர் கல்லூரியில் ஆகஸ்ட் 28 முதல் 30ஆம் தேதி வரை மூன்று நாட்கள் கல்லூரியில் சந்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தகவலை ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் இளஞ்சிறார் நீதி குழுமத்தின் ஒரு உதவியாளர் கலந்த கணினி இயக்குபவர் பதவி முற்றிலும் தற்காலிக தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியான நபர்கள் 15 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ராணிப்பேட்டை என்ற அலுவலக முகவரிக்கு விண்ணப்பம் வந்து சேர வேண்டும் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் ஆக்ஸ்ட் 23ஆம் தேதி சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடக்கிறது. விவரங்களுக்கு 04172 291400 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைத்தீர்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமை வகித்து மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் ஆட்சியர் நேர்முக உதவியாளர் விஜயராகவன், உதவி ஆணையர் கலால் வரதராஜன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கூட்டத்தில் உடன் இருந்தனர்.
சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 9.10 மணி மற்றும் 11 மணிக்கு அரக்கோணத்திற்கு செல்லும் மின்சார ரயில் இன்று மற்றும் 21ஆம் தேதி திருவள்ளூர்-அரக்கோணம் இடையே ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு காலை 11:15 மணி மற்றும் மதியம் 12 மணிக்கு புறப்படும் ரயிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
ஆற்காடு அடுத்த திமிரி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் உஷா. இவர் நேற்று இரவு ரோந்து பணியை முடித்துவிட்டு இன்று அதிகாலை ராணிப்பேட்டை காவல் குடியிருப்பு பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அதிகாலை 4 மணிக்கு ஆற்காடு அண்ணா சாலை எதிரே மின்கம்பத்தில் கார் மோதியது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் உஷா படுகாயம் அடைந்து ஆற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாலாஜா தாலுகா அருகே பள்ளேரி கிராமத்திற்கு செங்கல் சூளையில் வேலை செய்வதற்காக காட்பாடி அடுத்த மிளகாய் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவர் நேற்று வந்தார். இந்நிலையில் பள்ளேரி கிராமத்தில் மர்மமான முறையில் இன்று இறந்து கிடந்தார். அவரது உடலில் லேசான காயங்கள் இருந்தது. சிப்காட் போலீசார் உடலை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் கொலையா? தற்கொலையா என போலீசார் விசாரிக்கின்றனர்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திட்டமில்லா பகுதியில் அமையும் 2011 க்கு முன்னர் கட்டப்பட்ட அனுமதியற்ற கல்வி நிறுவன வரன்முறை திட்டத்திற்கு விண்ணப்பிக்க 2025 ஜனவரி 31ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு ராணிப்பேட்டை நகர் ஊரமைப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்
வாலாஜா தாலுகா சிப்காட் அருகே மாணிக்கம்மாள் என்பவருக்கு சொந்தமாக 2 1/2 நிலம் உள்ளது. 1.13 கோடி மதிப்பிலான இந்நிலத்தில் சிப்காட் அமைக்க அரசு கையகப்படுத்தியுள்ளது. எனவே அரசிடமிருந்து பணத்தை விரைந்து பெற்று தருவதாக போலி பெண் ஆர்.ஐயான சுவாதி , ஜெயகாந்தன், பரத் ஆகியோர் ரூ. 5 லட்சத்தை மாணிக்கம்மாளின் மகள் மெர்லின் ஜெனிபரிடம் நேற்று வாங்கியுள்ளனர். போலி என தெரிந்து டவுன் போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
ராணிப்பேட்டை அடுத்த முகுந்தராயபுரம் இரயில் நிலையம் அருகே நேற்று மாலை சிக்னல் துண்டிப்பு ஏற்பட்டது. எனவே உடனடியாக காட்பாடி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த 10 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்ததில் தண்டவாளத்தின் நடுவே மர்ம நபர்கள் இரும்பு ராடையும், கற்களையும் வைத்து விட்டு சென்றுள்ளனர் என்பதை கண்டறிந்து அதை உடனே அகற்றினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.