Ranipet

News August 23, 2024

ராணிப்பேட்டை கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாற்றம்

image

காவல்துறையில் பணியாற்றிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மாற்றப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த குமார் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு உள்ளார். மேலும் ராணிப்பேட்டையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளிர் இடம் காலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

News August 23, 2024

150 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்

image

அரக்கோணம் டவுன் பகுதியில் இன்று இரவு வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா, வட்டாட்சியர் ஸ்ரீதேவி, வட்ட வழங்க அலுவலர் முத்துக்குமரன், மண்டல துணை வட்டாட்சியர் யுவராஜ் மற்றும் டவுன் போலீசார் இணைந்து கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். இதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் ஹான்ஸ் போதை பொருட்கள் 150 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

News August 22, 2024

அமைச்சர் நேரில் சென்று ஆய்வு

image

ராணிப்பேட்டை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் இன்று அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் குருவராஜப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.யு. சந்திரகலா, மாவட்ட வருவாய் அலுவலர் ந. சுரேஷ். வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா, ஒன்றியக் குழு தலைவர் நிர்மலா சௌந்தர், வட்டாட்சியர் ஸ்ரீதேவி ஆகியோர் உடனிருந்தனர்.

News August 22, 2024

காட்பாடி அருகே அமைச்சர்கள் தொடங்கி வைப்பு

image

காட்பாடி சட்டமன்ற தொகுதி வாலாஜா ஊராட்சி ஒன்றியம், முகுந்தராயபுரம் ஊராட்சி, அக்ராவரம், ஸ்ரீ படவேட்டம்மன் கோயில் அருகில் திருவிக அரசு நிதியுதவி பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் ஆர்.காந்தி ஆகியோர் இன்று கலந்துகொண்டு முகாமை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

News August 22, 2024

ராணிப்பேட்டை மக்களின் மனம் கவர்ந்த காஞ்சனகிரி மலை

image

காஞ்சனகிரி மலை கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரம் கொண்ட சிறிய மலையாகும். காஞ்சனகிரி மலை கிழக்கு தொடர்ச்சி மலையின் கீழ் வருகிறது.இம்மலையில் மருத்துவ குணம் கொண்ட சாந்தன் மர காற்றின் வாசமும், பசுமை நிறைந்த பள்ளத்தாக்குகளும் இம்மலை முழுவதும் காணப்படுகிறது.இந்த மலையில் தட்டினால் மணிஓசை கேட்கக்கூடிய பாறை ஒன்று உள்ளது. இந்த மலையில் சிவன் மற்றும் முருகன் ஆலயங்கள் அமைந்துள்ளது.

News August 22, 2024

ராணிப்பேட்டையில் 3333 வீடுகள் கட்டும் பணி துவக்கம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் என்ற திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகிறது.மாவட்டம் முழுவதும் 3,333 வீடுகள் கட்டுவதற்கு நடவடிக்கைக்கு மேற்கொள்ளப்பட்டு, பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 80 சதவீதத்திற்கு மேல் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு கான்கிரீட் வீடு கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என மாவட்ட திட்ட வியக்குனர் ஜெயசுதா கூறியுள்ளார்.

News August 22, 2024

நிதி ஒதுக்கீட்டு திட்டம் குறித்து அமைச்சர் விளக்கம்

image

இன்று தலைமை செயலகத்தில் ராணிப்பேட்டையில் இணைப்பு சாலையினை அகலப்படுத்த நிதி ஒதுக்கீடு கோருதல் மற்றும் தேசிங்கு ராஜா மணிமண்டபம் அமைப்பதற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு கோறுவதற்கு கைத்தறி, துணி நூல் அமைச்சர் ஆர். காந்தி அவர்கள் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு அவர்களை நேரில் சந்தித்து திட்டம் குறித்து விளக்கி கூறினார். உடன் நெடுஞ்சாலை துறை செயலாளர் செல்வராஜ், அரசு அலுவலர்கள் இருந்தனர்.

News August 21, 2024

கொலை குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

image

பாணாவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கார்த்திகேயபுரம் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஓம்பிரகாஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி ஆட்சியர் சந்திரகலாவுக்கு பரிந்துரை செய்தார். ஆட்சியர் உத்தரவின் பேரில் ஓம் பிரகாஷ் குண்டர் சட்டத்தில் இன்று கைது செய்யப்பட்டார்.

News August 21, 2024

பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் மோசடி

image

ஆற்காடு அடுத்த தாமரைப்பாக்கம் கிராமத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்களுக்கான கூட்டுறவு சங்கத்தில் கடந்த 2019 முதல் 2021 வரையிலான நிதி ஆண்டில் சங்கத்தின் செயலாளர் செல்வராசு என்பவர் ரூ.46.32 லட்சம் முறைகேடு செய்ததாக வேலூர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர். இதையடுத்து அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

News August 21, 2024

ராணிப்பேட்டையில் இன்றைய காய்கறி நிலவரம்

image

ராணிப்பேட்டை மாவட்ட உழவர் சந்தை மார்க்கெட்டில் காய்கறி நிலவரம்: உருளைக்கிழங்கு கிலோ ரூ.44 முதல் 40 வரையிலும், தக்காளி ரூ. 24 முதல் ரூ.28 வரையிலும்,கத்திரிக்காய் ரூ. 40 முதல் ரூ.36 வரையிலும், சிறிய வெங்காயம் ரூ.70 ரூபாய் முதல் ரூ.60 வரையிலும், பெரிய வெங்காயம் ரூ.58 முதல் ரூ.48 வரையிலும்,இஞ்சி ரூ. 70 முதல் ரூ.160 ரூபாய் வரையிலும், பூண்டு ரூ.280 முதல் 300 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது

error: Content is protected !!