India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சர்க்கரை நோயாளிகளுக்காவே அரசு “பாதம் காப்போம்” திட்டதை செயல்படுத்தி வருகிறது. இதில் பரிசோதனை, சிகிச்சை, அறுவை சிகிச்சை போன்றவற்றை செலவில்லாமல் இலவசமாக பெறலாம். ஒருவேளை அறுவை சிகிச்சை மூலம் கால்கள் அகற்றப்பட்டால் முதலமைச்சரின் காப்பீடு திட்டம் மூலம் செயற்கை கால்களை பெறலாம். அரசு மருத்துவமனைகளில் இதற்கென Diabetic Foot Clinic பிரிவு செயல்பட்டு வருகிறது. அங்கு சென்று இத்திட்டத்தில் சிகிச்சை பெறலாம்.
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை, குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், “குழந்தையை பள்ளிக்கு அனுப்புவோம்; பள்ளி இல்லாமல் வாழ்க்கை இல்லை” என்ற கோஷத்துடன் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் ஷேர் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!
தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக உள்ள 2,000 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தொடக்கம் ரூ.23,640 முதல் அதிகபடியாக ரூ.96,395 வரை சம்பளம் வழங்கப்படும். டிகிரி முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரும் 29ஆம் தேதிக்குள் <
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக நாளை (ஆகஸ்ட் 8) ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க
ராணிப்பேட்டை கலெக்டர் ஜெ.யு. சந்திரகலா இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை வேளாண்துறையினரால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 2WDக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 1,700; 4WDக்கு ரூபாய் 2200, செயின் வகை இயந்திரத்திற்கு ரூபாய் 2500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நாளை ஆகஸ்ட் 7 கீழ்க்கண்ட இடங்களில் முகாம் நடைபெறுகிறது. முகாம் நடைபெறும் நேரம் காலை 9மணி முதல் மாலை 3மணி வரை. மேல்விஷாரம் MMES விழா மண்டபம் அண்ணா சாலை, வாலாஜா CM மஹால் டி இராமசாமி தெரு, தக்கோலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரக்கோணம் ஒன்றியம் பஞ்சாயத் அலுவலகம் கட்டிடம், ஆற்காடு சமுதாயக்கூடம் புதிய தெரு ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெறுகிறது.
இன்று (06.08.2025) இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை சார்பில் இரவு நேர கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெறுகிறது. ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் உபபிரிவுகளில் காவல் நிலைய அலுவலர்கள் மற்றும் போலீசார் சிறப்புப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் எந்தவிதத்திலும் பாதுகாப்பாக இருக்கலாம் என காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும் தகவல்களுக்கு மேலே உள்ள புகைப்படத்தை பார்துகொல்லாம்.
இன்று ஆகஸ்ட் 6 ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஜெய் சந்திரகலா விடுத்துள்ள செய்தி குறிப்பில் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு தமிழக அரசின் அன்பு கரங்கள் திட்டத்திற்கு மாதாந்திர உதவித்தொகை அளிக்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு பல்வேறு வகையில் உதவிகள் வழங்கப்பட இருக்கிறது.
ராணிப்பேட்டை காவல் துறை இன்று சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்திகள் மக்கள் சமூக வலைதளங்கள் மற்றும் தொடர்பு கொள்ளும் எண்கள் அங்கீகரிக்கப்பட்ட வாடிக்கையாளர் சேவை மைய உதவி எண்களை மட்டும் உபயோகிக்கவும்..! போலியான எண்களை பயன்படுத்துவதன் மூலம் தங்களது தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளது என மாவட்ட மக்களுக்கு விழிப்புணர்வு செய்தி ஏற்படுத்தப்பட்டது.
இராணிப்பேட்டை மக்களே வருமானம், சாதி, குடிமை, குடியிருப்பு&மதிப்பீடு சான்றிதழ் வாங்க, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் &அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04172-299200) புகாரளிக்கலாம். *இந்த முக்கிய தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்*
Sorry, no posts matched your criteria.