Ranipet

News October 22, 2025

இராணிப்பேட்டை மாவட்டம் கட்டுப்பாட்டு அறை எண் வெளியீடு

image

பொதுமக்கள் மழை, வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் தொடர்பாக தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. தொலைபேசி எண் 1077, 04172-2717666. வாட்ஸ்ஆப் எண் : 8300929401. மேலும் அரக்கோணம் ஆற்காடு சோளிங்கர் நெமிலி வாலாஜா கலவை உள்ளிட்ட வட்டாட்சியர் அலுவலக தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ள. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் பேரிடர் மேலாண்மை தொலைபேசி எண் 04172271766, 8300929401

News October 22, 2025

இராணிப்பேட்டை மாவட்டம் கட்டுப்பாட்டு அறை எண் வெளியீடு

image

பொதுமக்கள் மழை, வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் தொடர்பாக தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. தொலைபேசி எண் 1077, 04172-2717666. வாட்ஸ்ஆப் எண் : 8300929401. மேலும் அரக்கோணம் ஆற்காடு சோளிங்கர் நெமிலி வாலாஜா கலவை உள்ளிட்ட வட்டாட்சியர் அலுவலக தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ள. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் பேரிடர் மேலாண்மை தொலைபேசி எண் 04172271766, 8300929401

News October 22, 2025

ராணிப்பேட்டை: 12th போதும் ரயில்வே வேலை ரெடி..

image

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் மொத்தமாக 8,850 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு 12th பாஸ் அல்லது டிகிரி முடித்து இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.35,400 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.11.2025 ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> இங்கே கிளிக் <<>>செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க மக்களே

News October 22, 2025

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்

image

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் தேவையின்றி வெளியே செல்லாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 22, 2025

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 200 ஏரிகள் நிரம்பியது

image

ராணிப்பேட்டை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையின் காரணமாக பொன்னை பாராற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள 396 ஏரிகளில் 192 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. 32 ஏரிகள் 76%-99% நிரம்பியுள்ளதாகவும், 43 ஏரிகள் 50%-75% வரை நிரம்பியுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 22, 2025

இராணிப்பேட்டை மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

image

மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (22.10.2025) வெளியிடப்பட்ட அறிவிப்பில், மழைநீரால் நிரம்பிய குளங்கள், ஆறுகள் மற்றும் பிற நீர்நிலைகளில் நீந்தல் அல்லது விளையாடுவது உயிருக்கு ஆபத்தானது என்பதால் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News October 22, 2025

ராணிப்பேட்டை: இது உங்க போன் – ல கண்டிப்பாக இருக்கனும்!

image

அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News October 22, 2025

ராணிப்பேட்டை: ஏரிகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான காவேரிப்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் இன்று (அக்.22) நிலவரப்படி 872.87 கியூசியஸ் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. அதே போன்று மகேந்திரவாடி ஏரியில் இருந்து 139.46 கியூசியஸ், சங்கரம்பாடி ஏரிலிருந்து 37.41 கியூசியஸ் தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

News October 22, 2025

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

image

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ள நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. அதன்படி இன்று ராணிப்பேட்டை மாவட்டத்திற்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், 115.6 மிமீ முதல் 204.மிமீ அளவுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 22, 2025

ராணிப்பேட்டை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

ராணிப்பேட்டையில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர் மழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக்.22) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், தேவையிற்றி வெளியே செல்வதை தவிர்த்து வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!