Ranipet

News August 26, 2024

ராணிப்பேட்டை: கொலையை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம் 

image

ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் சோளிங்கர் ஒன்றியம் பெருங்காஞ்சி பகுதியில் இளைஞர் படுகொலை செய்யப்பட்டதை கண்டிக்கும் விதமாக, ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்பாக மாவட்டச் செயலாளர் சீம.ரமேஷ் கர்ணா தலைமையில் நாளை  காலை 10 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

News August 26, 2024

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் மீண்டும் ரோப் கார் சேவை

image

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு செல்லும் ரோப் கார் சேவை செப்.7ஆம் தேதி முதல் தொடங்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் 1305 படிகள் கொண்ட மலை மீது அமைந்துள்ளது. இந்நிலையில் ரோப்கார் பராமரிப்பு பணிகளுக்காக ஆக.22ஆம் தேதி ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது. மீண்டும் இச்சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 26, 2024

மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தகவல்

image

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் ஆக.29-ஆம் தேதி (வியாழக்கிழமை) வாலாஜா வன்னிவேடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கேலோ இந்தியா கையுந்துப்பந்து பயிற்சி மையத்தில் கையுந்துப்பந்து போட்டி மற்றும் ஓட்டப்பந்தய போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த போட்டி நடக்கும் அன்று காலை 6 மணிக்குள் நேரில் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News August 26, 2024

ஆற்காட்டில் 2.5 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

image

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சி ஆணையர் நகராட்சி ஆணையர் வெங்கட் லட்சுமணன் தலைமையில் அதிகாரிகள் ஆற்காடு பஜார் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 2.5 டன் கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனர். மேலும் பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த கடைக்கு அதிகாரிகள் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.

News August 26, 2024

இராணிப்பேட்டை இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை மையம் அமைந்துள்ளது. CISF-யில் காலியாக உள்ள 1,130 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், தமிழகத்தில் 39 இடங்கள் காலியாக உள்ள இப்பணியில் சேர விரும்புவோர் ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை CISF இணையதளத்தில் +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 26, 2024

இராணிப்பேட்டை இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை மையம் அமைந்துள்ளது. சிஐஎஸ்எஃப்- யில் காலியாக உள்ள 1,130 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் தமிழகத்தில் 39 இடங்கள் காலியாக உள்ளன. இப்பணியில் சேர விரும்புவோர் ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை சிஐஎஸ்எஃப் இணையதளத்தில் +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 25, 2024

ராணிப்பேட்டை அருகே காரை சேசிங் செய்த இன்ஸ்பெக்டர்

image

ஆற்காடு தாலுகா திமிரி அருகே உள்ள நாகன்புரடை கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி கணேசன் இன்று ஆரணி திமிரி சாலையில் நடந்து சென் அந்த வழியாக வந்தற போது கார் ஒன்று கணேசன் மீது மோதியத்தில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து திமிரி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் தனலட்சுமி சேசிங் செய்து காரை பிடித்துள்ளார்.

News August 25, 2024

இராணிப்பேட்டை விளையாட்டு வீரர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

இராணிப்பேட்டையில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்பதிவு செய்ய விரும்புவோர் மாவட்ட விளையாட்டு அலுவலக இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News August 25, 2024

இராணிப்பேட்டையில் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம்

image

விளையாட்டு துறையில் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளை பெற்று தற்போது நலிந்த நிலையில் உள்ள தமிழகத்தை சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் 6000 வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் செப் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி மாலை 6 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News August 25, 2024

ராணிப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடப்பாண்டில் 17 வட்டார அளவிலான முகாம்களில் 3464 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். 1765 பேருக்கு அடையாள அட்டைகள், 1124 பேருக்கு யூடிஐடி அடையாள அட்டைகள், 194 பேருக்கு மருத்துவ காப்பீடு அடையாள அட்டை, 126 பேருக்கு அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று ரூபாய் 9.30 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் பெற்று பயனடைந்துள்ளதாக ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!