Ranipet

News February 28, 2025

SBI வங்கியில் வேலை: கைநிறைய சம்பளம்

image

SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கான 88 வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது. வங்கி சேவைகள் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் கடன் / தணிக்கை / அந்நிய செலாவணி ஆகியவற்றில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் நபர்கள் 60 – 63 வயது வரை இருக்கலாம். ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவர். தகுதி அடிப்படையில் ரூ.45,000 – ரூ.80,000 வரை மாதம் சம்பளம் வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க

News February 28, 2025

SBI PO ப்ரீலிம்ஸ் மாதிரி தேர்வு

image

SBI PO ப்ரீலிம்ஸ் காலி பணி இடங்களுக்கான ஆன்லைன் மாதிரித் தேர்வுகள் பிப்ரவரி 28, மார்ச் 4, மற்றும் மார்ச் 6, ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர் / தேர்வாளர்கள் உள்நுழைவுப் பக்கத்தின் மூலம் மெய்நிகர் கற்றல் போர்ட்டலில் (virtual learning portal) மாதிரி தேர்வை எழுதலாம். மாணவர்கள் VLE போர்டல் பதிவாளர்களாக இருக்க வேண்டும் என மாவட்ட வேலை வாய்ப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News February 28, 2025

ராணிப்பேட்டையில் சுய உதவிக் குழு கண்காட்சி அறிவிப்பு

image

சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களான அழகு சாதனங்கள், பொம்மைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், கைத்தறி சேலைகள், தானிய உணவுகள், ஊறுகாய்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், அணிகலன்கள் மற்றும் அனைத்து வகையான தினசரி பயன்பாட்டு பொருட்களை மக்கள் அதிகம் கூடும் பகுதியில் மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் விற்பனை செய்வதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். 

News February 28, 2025

ரோந்து பணி போலீசார் தொலைபேசி எண்கள்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (பிப்.27) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாருக்கு, புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).

News February 27, 2025

பெண்களுக்கான மராத்தான் போட்டி: ஆட்சியர் தகவல்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மார்ச் 8 ம் தேதி காலை 6 மணிக்கு பெண்களுக்கான மராத்தான் போட்டி நடக்கிறது. இப்போட்டியில் 17 வயதிற்கு உட்பட்ட மாணவிகள் மற்றும் 19 வயதுக்கு மேற்பட்ட மாணவிகள் என தனித்தனியே மராத்தான் நடத்தப்பட உள்ளது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு நினைவு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா செய்தி குறிப்பில் இன்று தெரிவித்துள்ளார்.

News February 27, 2025

ராணிப்பேட்டையில் ஆட்சி மொழி பயிலரங்கம்

image

அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழி திட்டச் செயலாக்கம் விரைவாகவும், முழுமையாகவும் நடைபெற துணை புரியும் வகையில் 04-03-2025 மற்றும் 05-03-2025 ஆகிய இருநாட்கள் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் பயிலரங்கம் நடைபெறவுள்ளது. இதில் ஆட்சி மொழி செயலாக்கம் குறித்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

News February 27, 2025

6.5 கிலோ கஞ்சா எக்ஸ்பிரஸ் ரயிலில் பறிமுதல்

image

டாடா நகரில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று மாலை சோதனை நடத்தினர். அப்போது பொதுப் பெட்டியில் ரயிலின் இருக்கைக்கு கீழே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6.5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து காஞ்சிபுரம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு ரூபாய் 3.25 லட்சம் ஆகும்.

News February 27, 2025

மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி பொருட்கள் ஆட்சியர்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களான அழகு சாதனங்கள், பொம்மை வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை விருப்ப கண்காட்சி மூலம், ராணிப்பேட்டை எம்.எல்.ஏ அலுவலகம் பின்புறம் உள்ள சந்தை வளாகத்தில் பிப்ரவரி.28 முதல் மார்ச் 3ம் தேதி வரை பொது மக்களுக்கு சரியான விலையில் விற்பனை செய்யலாம் என்று ஆட்சியர் சந்திரகலா  தெரிவித்துள்ளார்.

News February 26, 2025

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி, மக்களுடன் முதல்வர் முகாம் பேஸ் 3 வாலாஜா, ஆற்காடு மற்றும் திமிரி வட்டாரத்துக்குட்பட்ட கிராமங்களில் மார்ச் 4 ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 15 துறைகளை ஒருங்கிணைத்து இந்த முகாம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் மனுக்களை கொடுத்து பயனடையலாம் என்று தெரிவித்துள்ளார்.

News February 26, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (பிப்ரவரி 26) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100.

error: Content is protected !!