Ranipet

News September 1, 2024

கோவை மைசூர் ரயில்கள் இன்று காட்பாடிடன் நிறுத்தம்

image

அரக்கோணத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இன்று காட்பாடியுடன் நிறுத்தப்படுகிறது. மறு மார்க்கத்தில் காட்பாடியில் இருந்து மாலை 4:25 மணிக்கு புறப்படுகிறது. அதேபோன்று மைசூரில் இருந்து சென்னை செல்லும் ரயில் காட்பாடி நிறுத்தப்படுகிறது .மறு மார்க்கத்தில் காட்பாடியில் இருந்து மாலை 5:25 மணிக்கு பெங்களூருக்கு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News September 1, 2024

வாலாஜா சுங்கச்சாவடியில் இன்று முதல் உயர்வு

image

தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் செப்.1 முதல் சுங்க கட்டணம் 5 முதல் 7 சதவீதம் வரை உயா்த்தப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி, உளுந்தூா்பேட்டை, சமயபுரம், மதுரை எலியாா்பத்தி, ஓமலூா், ஸ்ரீபெரும்புதூா், வாலாஜா உள்ளிட்ட 25 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயா்வு அமல்படுத்தப்படுகிறது. சுங்கக்கட்டண உயா்வால் வாகன ஓட்டிகள் ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஷேர் பண்ணுங்க.

News August 31, 2024

ராணிப்பேட்டை மாற்றுத்திறனாளி மாணவன் தட்டச்சு தேர்வில் கலக்கல்

image

தமிழ்நாடு அளவிலான தட்டச்சு தேர்வு இன்று 31.8.24 நடைபெற்றது. இதில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை சார்ந்த ஜிப்ரான் 12ஆம் வகுப்பு படிக்கும் போது மின்விபத்தில் அவருடைய வலது கையை முற்றிலும் இழந்துவிட்டார். இருந்தபோதிலும் அவர் மனம் தளராமல் தனது இடது கையால் மட்டும் இன்று நடைபெற்ற லோயர் கிரேட் டைப் ரைட்டிங்கில் வேகமாக தட்டச்சு செய்து வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

News August 31, 2024

காவல் அதிகாரிகளுக்கு தியான பயிற்சி வகுப்பு

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் தியான பயிற்சி அமைப்பு மூலம் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு தியான பயிற்சி மற்றும் ஓய்வு நிலை பயிற்சி அளிக்கப்பட்டது.ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன்,துணை காவல் கண்காணிப்பாளர்கள் திருமால்,ரமேஷ் ராஜ், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

News August 31, 2024

ராணிப்பேட்டை ஆட்சியர் அறிவிப்பு 

image

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டை மாதத்தின் முதல் வாரம் மற்றும் 3-ஆம் வாரம் செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும் சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமைகளில் அரக்கோணம் அடுத்த சாலை கிராமத்தில் உள்ள என்எல்பி மண்டபத்திலும், 3-ஆம் வாரம் ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்திலும் முகாம் நடைபெறும் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.

News August 31, 2024

ராணிப்பேட்டை: ராமதாசுக்கு அமைச்சர் பதில்

image

பொங்கல் பண்டிகைக்கு ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக வழங்கும் வேட்டி சேலை முழுவதும் விசைத்தறி நெசவாளிடமிருந்து வாங்கி இருப்பதாகவும், இதனால் கைத்தறி நெசவாளர்கள் பெருமளவில் வேலை இழப்பார்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். இதற்கு அமைச்சர் காந்தி 46.43 லட்சம் சேலைகளும் 20.86 லட்சம் வேட்டிகளும் கைத்தறி நெசவாளர்களிடம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று அறிக்கையில் இன்று தெரிவித்துள்ளார்.

News August 31, 2024

ராணிப்பேட்டை அருகே வாலிபர் மர்ம மரணம்

image

நெமிலி தாலுகா பன்னியூர் கிராம எல்லையில் நேற்று இரவு வாலிபர் ஒருவர் விழுந்து கிடந்தார். அந்த வழியாக ரோந்து பணியில் சென்ற பாணாவரம் போலீசார் வாலிபரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார் .போலீஸ் விசாரணையில் கீழ் வீராணம் மோட்டூரை சேர்ந்த வேலு என்பது தெரிந்தது. இவர் எப்படி இறந்தார் என பாணாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News August 31, 2024

ராணிப்பேட்டையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

image

ராணிப்பேட்டையில் அண்ணா பிறந்த நாள் பேச்சுப்போட்டி செப் 3 காலை 10 மணியளவில் பள்ளி மாணவர்களுக்கும், பிற்பகல் 1.30 மணியளவில் கல்லூரி மாணவர்களுக்கும், தந்தை பெரியார் பிறந்த நாள் பேச்சுப்போட்டி செப் 4 காலை 10 மணியளவில் பள்ளி மாணவர்களுக்கும், பிற்பகல் 1.30 மணியளவில் கல்லூரி மாணவர்களுக்கும் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள் பங்கேற்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 31, 2024

ராணிப்பேட்டை கொலையில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை

image

நெமிலி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கொலை (ம) வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சந்தானம், சர்மாமூர்த்தி, சிவா, ராஜசேகர், பரசுராமன், அஜித் உள்ளிட்ட 7 நபர்களுக்கு ஆயுள் தண்டனை, தலா ரூ.5,000 அபராதம் விதித்து தாழ்த்தப்பட்டோர் (ம) பழங்குடியினர் நேற்று தீர்ப்பளித்தது. இதில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு மாவட்ட எஸ்பி கிரண்ஸ்ருதி பாராட்டு தெரிவித்தார்.

News August 31, 2024

ரயில் நிலையத்தில் ரத்தம் கக்கி வாலிபர் சாவு

image

அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் நேற்று வாலிபர் ஒருவர் வாயில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து டவுன் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தியதில், அரக்கோணம் மதுரைப்பிள்ளை தெருவை சேர்ந்த சீனிவாசன் என்பது தெரியவந்தது.

error: Content is protected !!