Ranipet

News September 3, 2024

ரயிலில் 8 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது

image

ராணிப்பேட்டை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று தலங்கை ரயில் நிலையம் அருகில் வரும்போது திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த ரயிலில் 8 கிலோ கஞ்சா கடத்திய ஒடிஷாவை சேர்ந்த திலீப் ராவத்(28) என்பவரை கைது செய்தனர். கஞ்சாவை அவர் திருப்பூருக்கு கடத்தி செல்ல இருந்தது தெரியவந்தது. யாருக்கு கடத்தி செல்கிறார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

News September 3, 2024

ராணிப்பேட்டையில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்

image

அதிமுக சாா்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் செப். 15 முதல் 6 நாள்கள் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா். இந்தநிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாளன்று அவரின் சிலைக்கு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். துணைப் பொதுச்செயலா் கே.பி.முனுசாமி ராணிப்பேட்டையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்களில் பங்கேற்பார் எனக் கூறப்பட்டுள்ளது.

News September 3, 2024

ராணிப்பேட்டை ஆட்சியர் ஆலோசனை

image

தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் இன்று பள்ளி, கல்லூரிகளில் பாலியல் பிரச்சனைகள் தடுப்பது குறித்து அனைத்து பள்ளி கல்வி நிறுவன முதல்வர்களுடன் காணொளி காட்சி வாயிலாக விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ராணிப்பேட்டை ஆட்சியர் சந்திரகலா நேரலையில் கலந்து கொண்டார். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News September 2, 2024

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் நேரலையில் கலந்து கொண்டார்

image

தமிழ்நாடு அரசின் அரசு முதன்மைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் இன்று பள்ளி கல்லூரிகளில் பாலியல் பிரச்சனைகள் தடுப்பது குறித்து அனைத்து பள்ளி கல்வி நிறுவன முதல்வர்களுடன் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நேரலையில் கலந்து கொண்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News September 2, 2024

ராணிப்பேட்டை அருகே நாளை மின்தடை 

image

சோளிங்கர் கோட்டம் மேல் வெங்கடாபுரம் துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணி நடைபெறுவதால் மேல்வெங்கடாபுரம், கொடைக்கல், ரெண்டாடி, நீலகண்டராயன்பேட்டை, ஜம்பு குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை (செப்டம்பர் –  3) மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று செயற்பொறியாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

News September 2, 2024

ராணிப்பேட்டை: முன்பதிவு செய்ய இன்று கடைசி நாள்

image

ராணிப்பேட்டையில் 2024 – 25 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. பல்வேறு பிரிவுகளில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுளள்து . விருப்பமுள்ளவர்கள் தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் .இன்று மாலை 5 மணி வரை பதிவு செய்ய முடியும்.

News September 2, 2024

இன்று குரூப் 2 மாதிரி தேர்வு

image

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் GROUP-Il & llA போட்டித் தேர்விற்கான மாநில அளவிலான முழுமாதிரி தேர்வு – 2 இன்று காலை 10.00 மணி முதல் 01.00 மணி வரை ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் நேற்று தகவல் தெரிவித்துள்ளது

News September 1, 2024

அரக்கோணம் நகராட்சி ஆணையாளர் அறிவிப்பு 

image

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பராமரிப்பு பணி மற்றும் கேசாவரம் குடிநீர் திட்ட பராமரிப்பு பணிகள் இன்றும்,நாளையும்  மேற்கொள்ளப்பட உள்ளதால் அரக்கோணம் நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளுக்கு குடிநீர் வழங்குவதில் தடை ஏற்படும் என்றும்,3ம் தேதி முதல் குடிநீர் வழங்கும் பணிகள் தடையின்றி மேற்கொள்ளப்படும் என்று அரக்கோணம் நகராட்சி ஆணையாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.

News September 1, 2024

ராணிப்பேட்டையில் 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

image

ராணிப்பேட்டை மற்றும் நெமிலி ஆகிய 2 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் கொலை குற்றசம்பவங்களில் ஈடுபட்ட ராணிப்பேட்டை அரவிந்த் (34) மற்றும் நெமிலி சுந்தரமூர்த்தி (23) ஆகிய இருவரையும் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அவர்கள் இருவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

News September 1, 2024

3 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள்

image

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் கால்நடை துறையின் மூலம் மாவட்டத்தில் உள்ள கால்நடை விவசாயிகளின் பயன்பாட்டிற்காக 3 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களை அமைச்சர் ஆர்.காந்தி ஊர்தி ஓட்டுனர்களிடம் நேற்று வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், கால்நடை பராமரிப்பு துறை துணை இயக்குனர் கோபிகிருஷ்ணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!