India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் மழை தொடரும் என, வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்ப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் உள்ள காலி மனை, வீட்டு மனை, வீடு, கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்களின் உரிமையாளர்கள் 2024-25ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியினை வரும் அக்.31ஆம் தேதிக்குள் செலுத்துவோருக்கு, அதற்கான தொகையில் 5% தள்ளுபடி வழங்கப்படும். இந்த வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம்.
கலை பண்பாட்டு துறை சார்பில் சிறுவர்கள் இடையே குரலிசை, பரதநாட்டியம் நாட்டுப்புற நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 4 கலை பிரிவுகளில் மாவட்ட அளவிலான போட்டிகள் விளாப்பாக்கம், ஸ்ரீ மகாலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அக்.20ஆம் தேதி காலை 9 மணி முதல் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 04427269148, 9751152828 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ராணிப்பேட்டை கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
பொது விநியோக திட்டம் சிறப்பாக நடைபெற ஒவ்வொரு மாதமும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அக்டோபர் மாதத்திற்கான பொது விநியோகம் திட்ட சிறப்பு முகாம் 19ஆம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே இந்த சிறப்பு முகாமினை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கேட்டுக்கொண்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை மழைக் கால எச்சரிக்கை பதிவு இன்று வெளியிட்டுள்ளார்கள். தற்போது மழைக்காலம் என்பதாலும் நீர் நிலையங்கள் நிரம்பும் அபாயம் உள்ளதாலும் சிறுவர்களை ஏரி குளம் மற்றும் நீர் நிரம்பிய பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டாம். நீர் நிரம்பியபகுதிகளுக்குச் சென்று புகைப்படம் எடுத்துக் கொள்வதும் பதிவு செய்வதும் போன்ற ஆபத்தான செயல்களில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம் என்றுஅறிவுறுத்தப்படுகிறது.
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை மழைக் கால எச்சரிக்கை பதிவு இன்று வெளியிட்டுள்ளார்கள். தற்போது மழைக்காலம் என்பதாலும் நீர் நிலையங்கள் நிரம்பும் அபாயம் உள்ளதாலும் சிறுவர்களை ஏரி குளம் மற்றும் நீர் நிரம்பிய பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டாம். நீர் நிரம்பியபகுதிகளுக்குச் சென்று புகைப்படம் எடுத்துக் கொள்வதும் பதிவு செய்வதும் போன்ற ஆபத்தான செயல்களில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம் என்றுஅறிவுறுத்தப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 17)மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் திருவள்ளூர், , திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் வெளியே செல்லும் பொதுமக்கள் தகுந்த முன்னேற்பாடுகளுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (16.10.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்று முன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு,சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம்.
கண்ட்ரோல் ரூம் :9884098100
Sorry, no posts matched your criteria.