Ranipet

News March 10, 2025

முன்விரோதத்தால் கொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி

image

ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி கிருஷ்ணகுமாரை ஓட ஓட வெட்டி படுகொலை செய்த 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் கடந்த 2021ஆம் ஆண்டு, விரலை வெட்டியதற்காக பழிக்குப் பழியாக உயிரை வாங்கியது விசாரணையில் அம்பலம். 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது விரலை வெட்டிய பாஜக நிர்வாகியை, அதே நாளில் வெட்டி கொலை செய்த சம்பவம் ராணிப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

News March 10, 2025

மனைவி சமாதியுடன் வாழும் பாசக்கார கணவர்

image

ராணிப்பேட்டை, துறையூரை சேர்ந்த கட்டட கான்ட்ராக்டர் பழனி (52).இவரது மனைவி செல்வி (50) கடந்தாண்டு மார்ச் 5ல் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.தனக்கு சொந்தமான நிலத்தில் மனைவியை அடக்கம் செய்து,அவருக்கு சமாதி கட்டினார்.மனைவி இருக்கும் போது வீடு கட்ட ஆசைப்பட்ட அவர், இப்பொழுது மனைவியின் சமாதி, வீட்டுக்குள் அமையுமாறு வடிவமைத்து வீடு கட்டினார்.மனைவி இறந்த நாளான மார்ச் 5ல் கிரஹபிரவேஷம் செய்தார்.

News March 9, 2025

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை தகவல்

image

முதியோர்களுக்கு ஏற்படும் எதிர்பாராத இடர்பாடுகளை போக்கிடவும், உதவிடவும் துரிதமாக உதவிகளை கிடைத்திட காவல்துறை சீனியர் சிட்டிசன் ஹெல்ப் லைன் எண் 14567 என்ற எண்ணை அவசர தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

News March 9, 2025

ராணிப்பேட்டையில் விண்ணப்பிக்கலாம்

image

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பேச்சுலர் அல்லது டிப்ளமோ என் டெலி கம்யூனிகேஷன் கல்வித் தகுதி உள்ள ஐந்து வருடங்கள் பணி அனுபவம் உள்ள ஆண்கள் சவுதி அரேபியாவில் பணி செய்ய விருப்பமிருந்தால் அரசு துறை மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் செய்தி மக்கள் தொடர்பு துறை வெளியிட்டுள்ள புகைப்படத்தை தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News March 9, 2025

ரோந்து பணி போலீசார் தொலைபேசி எண்கள்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (மார்ச் 9) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாருக்கு, புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).

News March 9, 2025

வீட்டினுள் மனைவிக்கு சமாதி கட்டி வாழும் கணவர்

image

பனப்பாக்கம் அடுத்த துறையூரைச் சேர்ந்த பழனி என்பவர் தனது இறந்த மனைவி மீது கொண்ட அன்பின் காரணமாக வீட்டினுள் மனைவிக்குச் சமாதி அமைத்து அங்கு வாழ்ந்து வருகிறார். கடந்த ஆண்டு உடல்நிலை குறைவால் அவரது மனைவி இறந்துவிட்டார். மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல், வீட்டின் உள்ளே மனைவிக்கென சமாதி எழுப்பியுள்ளார் பழனி. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

News March 9, 2025

பாஜக நிர்வாகி ஓட ஓட வெட்டிக்கொலை

image

ராணிப்பேட்டை ரெண்டாடி அருகே உள்ள விவசாய நிலத்தில் ரவுடி சீனிவாசன் என்கிற கிருஷ்ணகுமாரை நேற்று (மார்.8) மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ளது. வயல்வெளியில் மறைந்திருந்த அந்த மர்ம கும்பல், சீனிவாசனை தாக்கி ஓட ஓட விரட்டி உடல் முழுவதும் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. உயிரிழந்த சீனிவாசன் வேலூர் மாவட்டம் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ஆவார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 9, 2025

மாதத்திற்கு 26 நாட்கள் வேலை: ஆணைய தலைவர் தகவல்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அப்போது அவர் பேசுகையில் தூய்மை பணியாளர்கள் மாதத்திற்கு 26 நாட்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும். அதற்கு மேல் பணியாற்றும் ஒவ்வொரு நாட்களுக்கும் இரண்டு நாட்கள் கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். ஆட்சியர் சந்திரகலா உடன் இருந்தார்.

News March 8, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( மார்ச் -8) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100.

News March 8, 2025

புத்தகத் திருவிழா நாளை கடைசி நாள்

image

ராணிப்பேட்டை சந்தை மேடு பகுதியில் புத்தக திருவிழாவில் பொதுமக்கள் புத்தக ஆர்வலர்கள் மாணவர்கள் வருகை புரிந்து புத்தகங்கள் வாங்கி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் வேண்டுகோள். பிப்- 28 அன்று முதல் மார்ச் 6 வரையில் கடந்த 7 நாட்களில் 18,494 மாணாக்கர்களும், 8,630 பொதுமக்களும் புத்தக கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர். ரூ. 20,85,884 மதிப்பீட்டிலான நூல்கள் விற்கப்பட்டன என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!