India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சோளிங்கர் அருகே விவசாயி கொலை வழக்கில் 8 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். சோளிங்கர் அடுத்த ரெண்டு அடியில் ஞாயிற்றுக்கிழமை சீனிவாசன்(50) எனும் விவசாயி மர்ம கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார். இவர் மீது குற்ற வழக்குகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அரக்கோணம் டிஎஸ்பி ஜாஃபர் சித்திக் மேற்பார்வையில் அமைக்கப்பட்ட தனிப்படை திங்கட்கிழமை துப்பு துலக்கி 8 பேரை கைது செய்தது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகர காவல் நிலைக்கு உட்பட்ட பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை போன்ற பொருட்களை விற்பனை செய்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று உணவு பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன் போலீசார் தலைமையில் கடைக்கு சீல் வைக்கப்பட்டு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( மார்ச் -11 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100.

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயு. சந்திரகலா தலைமை வகித்து பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளைக் கேட்டறிந்தார். பொதுமக்களிடமிருந்து மொத்தம் 384 மனுக்கள் வரப்பெற்றன. பெற்றுக்கொண்ட மனுக்களை துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

இச்சிப்புத்தூரில் இயங்கி வரும் தனியார் டயர் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம், சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையில் வைத்து இரண்டாவது நாளாக பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ ரவி ஆதரவு தெரிவித்து பேசினார். அப்போது அதிமுக ஒன்றிய செயலாளர் பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் மார்ச் 12ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.பல்வேறு பதவிகளில் மொத்தம் 76 காலிப்பணியிடங்கள் உள்ளன.18-45 வயதுக்குள் இருக்க வேண்டும்.இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இந்து மதத்தை சார்ந்தவரக இருக்க வேண்டும்.ரூ.10,000 முதல் ரூ.50,400 வரை மாத சம்பளம். இந்த லிங்கை <

ஈசலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜான் (19). இவர் நேற்று இரவு பைக்கில் எஸ்.ஆர் கண்டிகை என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஜான் உயிரிழந்தார். அவரது உடலை அரக்கோணம் தாலுகா போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100

ராணிப்பேட்டையில் கோடைகாலம் தொடங்கும் முன்பே வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதன்படி ஏப்ரல் மாதத்தின் இறுதி தொடங்கி மே மாதத்தில் கடும் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது. பகல் நேரத்தில் வெளியில் செல்லும் மக்களுக்கு அசெளகரியமான சூழல் ஏற்படும் என தெரிவித்துள்ளது. இந்த செய்தியை உங்க ஊர் மக்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

பரோடா வங்கியில் 518 சிறப்பு அலுவலர் காலிப் பணியிடங்கள் உள்ளன. மாதம் ரூ.48,400 – ரூ. 67,160 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளன. முதுநிலை மேலாளர் பணிக்கு 27 – 37 வயதிற்குள்ளும், மேனஜர் ஆபிசர் பணிக்கு 22 – 32க்குள்ளும் இருக்க வேண்டும். பணி அனுபவம், கல்வித்தகுதி அடிப்படையில் எழுத்துத்தேர்வுக்கு அழைக்கப்பட்பட்டு தேர்வு செய்யப்படுவர். நாளைக்குள் (மார்ச் 11) இந்த லிங்கை <
Sorry, no posts matched your criteria.