India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதிதாக தோற்றுவிக்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களுக்கு சத்துணவுத் திட்ட செயலாக்கத்திற்கான புதியதாக பணியிடங்கள் தோற்றுவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 7 பதவிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிய பதவிகளுக்கு அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயல் சின்னமாக வலுவடைந்து வருவதால், தமிழகத்தின் வட மாவட்டங்களில், அடுத்த சில நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை நீடிக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் பகிரவும்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை சேர்ந்த சேர்ந்த சந்தோஷ் என்ற மாணவன் கிரகாம்பெல் சிலம்பாட்ட உலக சாதனை விழாவில் கலந்துகொண்டு சிலம்பத்தில் வெற்றி பெற்று சான்றிதழை பெற்றுள்ளார். பயிற்சியாளர் மற்றும் பலர் அந்த மாணவனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
ராணிப்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நாளை நடைபெற உள்ளது. இதனை ஒட்டி ஊர்வலம் நடைபெற உள்ள முத்துக்கடை, வாலாஜா உள்ளிட்ட சாலைகளை பாதுகாப்பு முன்னேற்பாடு குறித்து ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி இன்று மாலை ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது காவல்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் பகிரவும்.
ஆற்காடு மேற்கு ஒன்றியம் தென்நந்தியாலம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தீப்பாஞ்சி அம்மன் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது. இதில் ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர். காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். உடன் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரத்த சோகை இல்லாத கிராமம் குறித்த சிறப்பு பிரச்சாரம் மற்றும் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா அனைத்து கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட அளவில் போட்டிகள் நடைபெற உள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் மேற்படி சிறுதானியங்கள், பாரம்பரிய உணவுத் திருவிழா போட்டிகளில் கலந்துகொள்ள மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கேட்டுக்கொண்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரத்த சோகை இல்லாத கிராமம் குறித்த சிறப்பு பிரச்சாரம் மற்றும் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா அனைத்து கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட அளவில் போட்டிகள் நடைபெற உள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் மேற்படி சிறுதானியங்கள், பாரம்பரிய உணவுத் திருவிழா போட்டிகளில் கலந்துகொள்ள மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கேட்டுக்கொண்டுள்ளார்.
ராணிப்பேட்டையில் ‘நான் முதல்வன்’ உயர்வுக்கு படி நிகழ்ச்சி செப் 10, 13, 20, 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 10ஆம் தேதி வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரி கல்லூரியில் நடைபெற உள்ளது. அனைத்து துறை அலுவலர்களும் ஒரே இடத்தில் கூடி, உயர் கல்வியில் இதுவரை சேராத மாணவர்களுக்கு உயர்கல்வியில் சேர்ப்பித்து வாழ்க்கையை தரத்தை உயர்த்தி கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டையில் ‘நான் முதல்வன்’ உயர்வுக்கு படி நிகழ்ச்சி செப் 10,13,20,24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 10ம் தேதி வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரி கல்லூரியில் நடைபெற உள்ளது. அனைத்து துறை அலுவலர்களும் ஒரே இடத்தில் கூடி, உயர் கல்வியில் இதுவரை சேராத மாணவர்களுக்கு உயர்கல்வியில் சேர்ப்பித்து வாழ்க்கையை தரத்தை உயர்த்தி கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.