Ranipet

News September 11, 2024

ராணிப்பேட்டை விஏஓ வங்கிக்கணக்கில் இன்று முதல் பணம்

image

டிஜிட்டல் கிராப் சர்வே பணிக்கு பணம் வழங்கப்படவில்லை என்று நேற்று விஏஓ சங்கத்தினர் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், ராணிப்பேட்டை டிஆர்ஓ சுரேஷ் அனைத்து வட்டாட்சியருக்கும் ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதில் இன்று செப்டம்பர் 11ஆம் தேதி காலை 10 மணிக்குள் ஒரு சர்வே நம்பருக்கு ரூ. 10 வழங்கப்படும் அதை விஏஓ வங்கி கணக்கில் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

News September 10, 2024

ராணிப்பேட்டை வீரர்களுக்கு ஆந்திராவில் பாராட்டு

image

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கனமழை பெய்தது இதனால் அங்கு கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு என்டிஆர்எப் அதிகாரிகளை நேரில் அழைத்து துரிதமாக செயல்பட்டு மக்களையும் அவர்களது உடமைகளும் பாதுகாப்பாக மீட்டதற்கு பாராட்டுக்கள் தெரிவித்தார்.

News September 10, 2024

ராணிப்பேட்டையில் விளையாட்டுப் போட்டிகள்

image

ராணிப்பேட்டை ஜி.கே உலக பள்ளி வளாகத்தில் இன்று முதலமைச்சர் கோப்பை 2024-25க்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன், ஜி.கே உலகப்பள்ளி மேலாண்மை இயக்குனர்கள் வினோத் காந்தி, சந்தோஷ் காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், பல்வேறு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது.

News September 10, 2024

ராணிப்பேட்டை ஆட்சியர் பரிசுகளை வழங்கினார்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா குறித்து நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான ஓவியம், கவிதை மற்றும் கட்டுரை ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி/கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நினைவு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் ஏகாம்பரம் உடன் இருந்தனர்.

News September 10, 2024

ராணிப்பேட்டை கலெக்டர் கொடுத்த ’அப்டேட்’

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் GROUP 2 மற்றும் GROUP 2A தேர்வு செப்.14ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு 43 தேர்வு கூடங்களில் 10,987 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். இந்த தேர்வுக்காக கூடுதல் சிறப்பு பேருந்து வசதிகள், தடையில்லா மின்சாரம், காவல்துறை பாதுகாப்பு மற்றும் இதர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News September 10, 2024

ராணிப்பேட்டையில் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கியது

image

ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் வேப்பூர் ஊராட்சி விபி பேலஸ் வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து பெண் குழந்தைகளை பாதுகாத்தல் மற்றும் பெண் குழந்தைகளின் கல்வியை உறுதி செய்தல் குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை அமைச்சர் ஆர்.காந்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News September 10, 2024

ராணிப்பேட்டை: அமைச்சர் ஆர்.காந்தி அறிக்கை

image

செப்.15ஆம் தேதி பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தோன்றிய நாள் ஆகிய முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இந்த முப்பெரும் விழாவை திமுகவினர் அனைத்து இடங்களிலும் சிறப்பாக கொண்டாட வேண்டும். திமுக கொடி ஏற்றி இனிப்பு வழங்க வேண்டும். அனைவரது இல்லங்களிலும், கட்சி அலுவலகங்களிலும் கழக கொடி ஏற்ற வேண்டும் என கைத்தறி துறை அமைச்சர் காந்தி இன்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News September 10, 2024

அரக்கோணத்தில் மின்சார ரயில் ரத்து: தெற்கு ரயில்வே

image

சென்னை கடற்கரை – விழுப்புரம் இடையே இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் பராமரிப்பு பணி காரணமாக, மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், சென்னை கடற்கரை – அரக்கோணம் இடையே காலை 4.05 மணிக்கு இயக்கப்படும் ரயில் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுகிறது.

News September 9, 2024

ராணிப்பேட்டையில் நலத்திட்ட உதவிகளை

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், காதொலி கருவி, முழங்கை தாங்கி, சக்கர நாற்காலி, நடைப்பயிற்சி உபகரணம் உள்ளிட்ட 1.95 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று வழங்கினார். மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார் உடன் இருந்தார்.

News September 9, 2024

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்களின் பழக்கத்தில் 10 ரூபாய் நாணயங்கள் இருந்து வருகின்றன. இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என மக்கள் மத்தியில் பரவலாக ஒரு எண்ணம் உள்ளது. எனவே 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கும் நபர் அல்லது கடையின் உரிமையாளர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா எச்சரிக்கை விடுத்துள்ளார். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!