India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் தாலுகாவில் 1109 ஆற்காட்டில் 1107, கலவையில் 593 நெமிலியில் 1093, சோளிங்கரில் 919, வாலாஜாவில் 1,760 என மொத்தம் 6581 சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு தீபாவளி பண்டிகை முன்னிட்டு இலவச வேட்டி சேலை வழங்க கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் இன்று உத்தரவிட்டுள்ளார்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இன்று (அக்.27) தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்திருந்தார். எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தில் மக்கள் அனைவரும் ரேஷன் கடைகள் விடுமுறை இல்லை என்பதை நினைவில் கொண்டு, நியாய விலைப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். பண்டிகை கால கூட்ட நெரிசலை குறைப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (26.10.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்று முன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் : 9884098100
தீபாவளியை முன்னிட்டு பண்டிகை நாட்களில் பிரபல கடைகள் உணவகங்கள் பரிசு கூப்பன் அளிப்பதாக கூறி WhatsApp லிங்க்குகளை அனுப்பி மோசடியில் ஈடுபடுகின்றனர். அவ்வாறு அந்த போலியான லிங்குகளை கிளிக் செய்வதன் மூலம் தனிப்பட்ட தகவல்கள் பணம் திருடப்பட வாய்ப்புள்ளது. அப்படி ஏதாவது நடந்தால் 1930 என்ற எண்ணுக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் சுருதி தெரிவித்தார்.
அவளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம் இவர் இன்று பைக்கில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சங்கரன்பாடி கிராமத்தில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் மகாலிங்கத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த மகாலிங்கத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் இறந்தார். அவளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை வார சந்தை மைதானத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு நேற்று (அக் 25) ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆடுகள் உடல் எடை மற்றும் ரகங்கள் ஏற்றவாறு ரூ 5,000 முதல் 35 ஆயிரம் வரை வியாபாரம் நடைபெற்றது. காலை 5 மணி முதல் ஒரு மணி வரை நடைபெற்றது. இந்த சந்தையில் ரூ 40 கோடிக்கு மேலாக விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், பண்டிகை நாட்களை முன்னிட்டு, பிரபல கடைகள் மற்றும் உணவகங்கள் பேரில் பரிசு கூப்பன்கள் அளிப்பதாக கூறி வாட்ஸ்அப் லிங்குகளை அனுப்பி மோசடியில் ஈடுபடுகின்றனர். அவ்வாறு அந்த போலியான லிங்குகளை கிளிக் செய்வதன் மூலம் தங்கள் தனிப்பட்ட தகவல் மற்றும் பணம் திருடப்பட வாய்ப்புள்ளது. எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அக்.29 ஆம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெறும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளார். ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலா்கள் விவசாயிகளின் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனா். எனவே விவசாயிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கை வாயிலாகவும், தனிநபா் பிரச்னைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம் எனக் கூறியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (25.10.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் எண்ணிற்கும் 9884098100 அழைக்கலாம்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் GROUP-2 & 2A முதன்மை தேர்விற்கான மாதிரி தேர்வு நாளை (26.10.2024) சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு இராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. தேர்விற்கு விண்ணப்பித்த மாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள் இந்த மாதிரி தேர்வு கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.