India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாநில வாணிப கழகத்தின் டாஸ்மார்க் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மார்க் மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து உணவகங்களில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் 17ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மிலாடி நபி என்பதால் மதுபான கடைகளை மூடப்பட்டிருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமையகத்தில் நடைபெற்ற வாராந்திர உடற்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் (CWC), துணை காவல் கண்காணிப்பாளர்கள் திருமால் (ராணிப்பேட்டை உட்கோட்டம்) மற்றும் காவல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் குரூப் 2 தேர்வுகள் இன்று 43 இடங்களில் நடைபெற்றது. 10,987 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர் . இதில் 8392 பேர் மட்டும் தேர்வு எழுத வந்திருந்தனர். 2595 பேர் ஆப்சென்ட் ஆகினர். தேர்வு மையங்களை இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று பார்வையிட்டு எவ்வித பிரச்சனையும் இன்றி தேர்வு நடக்க வேண்டும் என்று அதிகாரிகளை அறிவுறுத்தினார்
டாட்டா நகரில் இருந்து அரக்கோணம் வழியாக எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அரக்கோணம் வந்தபோது ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரயிலின் பொதுப்பெட்டியில் ஏறி திடீர் சோதனை நடத்தினர் . அப்போது ரயிலின் சீட்டுக்கு அடியில் கேட்பாரற்று கிடந்த ஒரு பையை சோதனையிட்டதில் 6 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. கஞ்சாவை காஞ்சிபுரம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழகத்தில் ராணிப்பேட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.இந்நிலையில் அவர்களுடைய பதவிக்காலம் முடிவடையுள்ளதாக வந்த செய்தியை அடுத்து மாநில தேர்தல் ஆணைய செயலாளர் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு அளித்த கடிதத்தில்,2021-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2026 – அக்டோபர் 19 ஆம் தேதி முடிவடையும் என தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆற்காடு தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில் வரும் 18ம் தேதி ஒரு நாள் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி கட்டிடங்கள், மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்கிறார். அன்றைய தினம் இரவு அங்கு தங்கி இருந்து பொதுமக்களிடமிருந்து மனுக்களையும் பெற்றுக் கொள்கிறார் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V.கிரண் ஸ்ருதி இ.கா.ப., பரிந்துரையின் பேரில், அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட குற்றவாளிகள் 1.கோபிநாத் 2.குமார் ஆகியோர் இன்று (13.09.2024) குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
வாலாஜா தாலுகா கத்தியவாடி பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் காயத்ரி (33). திருமணம் ஆகாதவர். ஆஞ்சியோ சர்ஜரி செய்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தார். இவரது தாய் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மூன்று நாட்கள் கழித்து வந்த நிலையில் வீட்டில் துர்நாற்றம் வீசியுள்ளது. போலீசார் உதவியுடன் வீட்டை உடைத்து பார்த்ததில் காயத்ரி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆற்காடு டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சுதாகர் மற்றும் போலீசார் வாலாஜா, ரத்தினகிரி, கொண்டபாளையம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன் உட்பட்ட பகுதிகளில் இன்று ரெய்டு நடத்தினர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த 5 கடைகளுக்கு இன்று சீல் வைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. ஆட்சியர் சந்திரகலா தலைமை வகித்தார். இணை இயக்குனர் நிவேதிதா, மாவட்டம் மருத்துவர் அலுவலர் செந்தில்குமார், காச நோய் உள்ளிட்ட பல பிரிவுகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு டாக்டர், நர்ஸ் ஆகியோர் மருந்து வழங்க வேண்டும் என்றார்.
Sorry, no posts matched your criteria.