India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இராணிபேட்டை மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர, பேரூரில் நடைபெறும் கட்சி சார்ந்த அனைத்து கூட்டங்கள் மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்து அந்த நிகழ்ச்சிகள் சமூக வலைதளங்களில் சென்றடைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அமைச்சர் ஆர். காந்தி தெரிவித்துள்ளார்
இன்று ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தீபாவளி முன்னிட்டு பண்டிகை காலங்களில் தேவையில்லாத கவர்ச்சிகரமான விளம்பரங்களில் உங்களுக்கு பரிசுகள் விழுந்து விட்டது என்று தேவையில்லாத லிங்குகள் மூலம் உங்களை தொடர்பு கொள்ளவும் என்றும் போலியான தகவல்கள் பரப்புவார்கள். அதை யாரும் நம்ப வேண்டாம் என்று மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் வரைவு வாக்காளர் பட்டியலை இன்று மாவட்ட ஆட்சியர் சந்திரகலா வெளியிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா, ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் ரங்கராஜன் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறப்பு சுருக்கத் திருத்தம் பணிகள் 2025 வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா இன்று (அக்டோபர் 29) காலை 10 மணியளவில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சியினர் முன்னிலையில் வெளியிட உள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனைகள், பள்ளிகள், கோர்ட், வழிபாட்டுத்தலங்கள், முதியோர் இல்லங்கள் போன்ற அமைதி காக்கும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசைப்பகுதிகள் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிக்க கூடாது உள்ளிட்டவற்றை வழிமுறைகளை கடைப்பிடித்து பொதுமக்கள் மாசற்ற தீபாவளி கொண்டாட வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை உழவர் சந்தையில் இன்றைய நிலவரம்: தக்காளி ரூ.30-60, குடைமிளகாய் ரூ. 45, கத்திரிக்காய் ரூ. 60-80, கருணைக்கிழங்கு ரூ. 55-60 வெண்டைக்காய் ரூ. 30-40 உருளைக்கிழங்கு ரூ. 40-45, கேரட் ரூ.35-55, பீன்ஸ் ரூ. 120-140, வெங்காயம் ரூ. 30-60, சின்ன வெங்காயம் ரூ. 50-60, இஞ்சி ரூ. 60-80, பூண்டு ரூ. 280-400, காலிஃப்ளவர் ரூ. 30, மாங்காய் ரூ. 45-50, அவரை 80-100, முருங்கை ரூ. 40-45 விற்பனை செய்யப்படுகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (28.10.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்று முன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் : 9884098100 அழைக்கலாம்.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால் புகார்களை உடனுக்குடன் தெரிவிக்க மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24X7 நாள் முழுக்க இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு 1077 (0) 04172271766 தொடர்புக்கு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார். மேலே பேரிடர் உதவி எண் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையில் காவல்துறை அதிகாரிகள், ஆளிநர்கள், அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டு ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி கீழ்கண்டவாறு எடுக்கப்பட்டது. நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளது என்று உறுதிமொழி ஏற்றனர்.
PM கிசான் திட்டத்தில் பெயர் பதிவிட்டும் உங்களுக்கு தவணை வரவில்லை என்றால் உடனே புகார் அளிப்பதன் மூலம் விரைவில் உங்களுக்கு உதவித்தொகை கிடைக்கும். PM கிசான் “HELPLINE TEST” மூலம் நீங்கள் புகார் அளிக்கலாம். மேலும், pmkisan-ict@gov.in. w pmkisan-funds@gov .in. என்ற மின்னஞ்சல் ID மூலமும் புகார் தெரிவிக்கலாம். மாவட்டம் ஆட்சியர் யு. சந்திரகலா மற்றும் வேளாண்மை இயக்குநர் செல்வராஜ் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.