Ranipet

News October 31, 2024

வெடி விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டியவை

image

பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏதேனும் ஏற்பட்டால் முதலுதவியாக காயம்பட்ட நபரை காற்றோட்டமான இடத்திற்கு அழைத்துச் சென்று காயம் ஏற்பட்ட இடத்தில் குளிர்ந்த நீரை ஊற்றலாம். மேலும், பருத்தி துணியை நனைத்து காயம்பட்ட இடத்தை மூடலாம். பெரிய அளவில் காயம் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவரை அணுகவும். மருத்துவர் பரிந்துரையின்றி தாங்களாகவே ஏதும் செய்ய வேண்டாம்.

News October 31, 2024

ராணிப்பேட்டை மக்களே கவனமாக கொண்டாடுங்க

image

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் பட்டாசுகளை வெடிக்கும்போது கவனம் தேவை. பெற்றோர்கள் தங்கள் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும். மேலும், கையில் வைத்து பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கவும். பட்டாசு வெடிக்கும்போது அருகே ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் மண் வைத்திருப்பது அவசியம். விபத்தில்லா தீபாவளியை கொண்டாட ராணிப்பேட்டை மக்களுக்கு வே2நியூஸ் சார்பாக வாழ்த்துகள்.

News October 30, 2024

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு ரோந்து பணி விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்று முன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் : 9884098100

News October 30, 2024

புதிய மின்மோட்டார் வாங்குவதற்கு 50% மானியம்

image

விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் வாங்குவதற்கு 50% மானியம் வழங்குகிறது. இந்த மானியத்தை பெறுவதற்கு விவசாயிகள் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்க வேண்டும். ST & ST பிரிவை சார்ந்த சிறு குறு விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மானியம் பெற https://mis.aed.tn.gov.in/ இணையத்தள பக்கத்தில் விவசாயிகள் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என செந்தில்குமார்(வே.உ.பொ.)நெமிலி தெரிவித்தார்.

News October 30, 2024

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை வெளியிட்ட விதிமுறை 

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரையிலும், மாலை 7.00 மணி முதல் 8.00 மணி வரையிலும் என அரசால் அறிவிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக சத்தம் எழுப்பக் கூடிய பட்டாசுகள் வெடிப்பதையும், மருத்துவமனை, முதியோர் இல்லம் அருகே பட்டாசுகளை வெடிப்பதையும் தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

News October 30, 2024

தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்த ஆட்சியர்

image

தீபாவளி பண்டிகை  நாளை கொண்டாடப்படுவதையொட்டி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பொதுமக்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தீபாவளி திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். பொதுமக்கள் விபத்தில்லா தீபாவளி பண்டிகையை கொண்டாட மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 30, 2024

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட ஆட்சியர்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை நேற்று மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். அதன் படி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆண்கள் 5,08,859, பெண்கள் 5,38,376 மூன்றாம் பாலினத்தவர்கள் 104 என்று மொத்தம் 10,47,339 வாக்காளர்கள் உள்ளனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர், அரக்கோணம், ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

News October 29, 2024

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு ரோந்து பணி விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (29.10.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்று முன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் : 9884098100

News October 29, 2024

ராணிப்பேட்டை:கட்சி நிர்வாகிகளுக்கு அமைச்சர் முக்கிய அறிவிப்பு

image

இராணிபேட்டை மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர, பேரூரில் நடைபெறும் கட்சி சார்ந்த அனைத்து கூட்டங்கள் மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்து அந்த நிகழ்ச்சிகள் சமூக வலைதளங்களில் சென்றடைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அமைச்சர் ஆர். காந்தி தெரிவித்துள்ளார்

News October 29, 2024

ராணிப்பேட்டை காவல்துறை சார்பாக எச்சரிக்கை

image

இன்று ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தீபாவளி முன்னிட்டு பண்டிகை காலங்களில் தேவையில்லாத கவர்ச்சிகரமான விளம்பரங்களில் உங்களுக்கு பரிசுகள் விழுந்து விட்டது என்று தேவையில்லாத லிங்குகள் மூலம் உங்களை தொடர்பு கொள்ளவும் என்றும் போலியான தகவல்கள் பரப்புவார்கள். அதை யாரும் நம்ப வேண்டாம் என்று மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!