Ranipet

News November 4, 2024

நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

image

ராணிப்பேட்டை அம்மூர் அருகே வேலம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 40), விவசாயி. இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிரை பயிரிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக அவ்வப்போது பெய்து வந்த தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. சேதமடைந்த பயிர்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரடியாக வந்து உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News November 4, 2024

படித்த பட்டதாரிகளுக்கு ஒரு லட்சம் மானியம்

image

பட்டதாரி இளைஞர்கள் விவசாயம் சார்ந்த தொழிலை தொடங்கினால் அவர்களுக்கு ரூ.1 லட்சம் மானியத்துடன், வங்கிக் கடனும் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டதாரி இளைஞர்கள் விவசாயம் சார்ந்த தொழில் முனைவோராக மாறுவதற்கும், விவசாயம் சார்ந்த தொழிலை ஊக்குவிப்பதற்கும், விவசாயத்தின் மீது இளைஞர்களுக்கு ஆர்வத்தை தூண்டவும் இந்த மானியம் வழங்கப்படுவதாக நெமிலி வேளாண்மை உதவி இயக்குனர் அருணாகுமாரி தெரிவித்துள்ளார்.

News November 4, 2024

ராணிப்பேட்டையில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க

News November 4, 2024

மாவட்ட வேளாண்துறை இணை இயக்குநர் தகவல் 

image

வடகிழக்குப் பருவமழையால் மாவட்டத்தில் ஆங்காங்கு ஏற்பட்டுள்ள பயிர் சேதங்கள் குறித்து விவசாயிகள் தங்களது கிராம நிர்வாக அலுவலரிடமோ அல்லது உதவி வேளாண் அலுவலரிடமோ தகவல் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு சேத விவரங்கள் குறித்த அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டு நிவாரணம் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என ராணிப்பேட்டை மாவட்ட வேளாண்துறை இணை இயக்குநர்(பொ) செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

News November 3, 2024

ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (03.11.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் எண்ணிற்கும் 9884098100 அழைக்கலாம்.

News November 3, 2024

தண்டவாளத்தில் தலை வைத்து ஒருவர் தற்கொலை

image

அரக்கோணம் அடுத்த தணிகை போளூர் அருந்ததி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வினோத் (25). இவருக்கு திருமணமாகி கைக்குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், குடும்ப பிரச்சனை காரணமாக இன்று மாலை தணிகை போளூர் ரயில்வே கேட் அருகில் சரக்கு ரயில் செல்லும் போது தண்டவாளத்தில் தலை வைத்து வினோத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

News November 3, 2024

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவிப்பு

image

சாலையின் தவறான பக்கத்தில் வாகனம் ஓட்டுவது விபத்துக்களுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு 2வது பெரிய காரணம் தவறாக வாகனம் ஓட்டுவது. விதிகளை மீறியதால்தான் அதிக விபத்துகள் நடக்கின்றன. போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டால் அதிக அபராதம் விதிக்கப்படும் என ராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் கிரண் சுருதி தெரிவித்துள்ளார். 

News November 3, 2024

ராணிப்பேட்டை மாவட்ட மாணவ மாணவியர்களுக்கு பேச்சு போட்டி

image

அண்ணல் காந்தியடிகள் மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பேச்சுப்போட்டிகள் நடைபெறுகின்றன. நவம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் காலை 9 மணிக்கு தொடங்கியும், கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் பகல் 11 மணிக்கு தொடங்கியும் நடைபெற இருக்கின்றன. இந்த போட்டி வாலாஜா பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகக்கூட்ட அரங்கில் நடத்தப்பட உள்ளன.

News November 3, 2024

திருக்குறள் முற்றோதலில் மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் திருக்குறள் முற்றோதுதல் போட்டியில் பங்கேற்கலாம் எனவும் விருப்பம் உள்ளவர்கள் 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 0416-2256166 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். முழுமையாக நிறைவு செய்யப்பெற்ற விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், வேலூர்-632009 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

News November 3, 2024

உரிய அனுமதி பெற மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

image

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள் அரசின் உரிய அனுமதி பெற்று இயங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார் உரிய அனுமதி இன்றி செயல்படும் இல்லங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!