Ranipet

News September 22, 2024

சிறுதானியங்கள் உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டுதல் பயிற்சி

image

அரக்கோணம் வட்டம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் நாளை 23 /9/ 2024 அன்று விவசாயிகளுக்கான உள் மாநில அளவிலான கண்டுணர்வு பயண பயிற்சிக்காக 50 க்கு மேற்பட்ட விவசாயிகளை திருவண்ணாமலை மாவட்டம் அத்தியந்தல் சிறுதானிய மகத்துவ மையத்திற்கு விவசாயிகளை அழைத்துச் செல்கிறார்கள். இதில் ஆர்வம் உள்ள விவசாயிகள் கலந்து கொள்ளுமாறு அரக்கோணம் வேளாண்மை உதவி இயக்குனர் அனுராதா தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.

News September 22, 2024

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு ( 7 மணி வரை) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க ஏரியால மழையா? கமெண்ட்ல சொல்லுங்க.

News September 22, 2024

ராணிப்பேட்டை அருகே நாளை மின்தடை

image

அரக்கோணம் கோட்டத்தைச் சேர்ந்த மோசூர், அரக்கோணம் டவுன், விண்டர்பேட்டை ஆகிய மூன்று துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின்சாதன பராமரிப்பு பணிகள் நாளை செப்டம்பர் 23ஆம் தேதி நடக்கிறது . இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அரக்கோணம் மோசூர், கீழ்பாக்கம், நகரிக்குப்பம், ஆணைப்பாக்கம் , அம்பரிஷிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது என்று கோட்ட செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்

News September 22, 2024

ராணிப்பேட்டையில் விடிய விடிய மழை

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா, ராணிப்பேட்டை, சோளிங்கர், ஆற்காடு, மேல்விஷாரம் காவேரிப்பாக்கம் பனப்பாக்கம் நெமிலி போன்ற பகுதிகளில் இரவு முழுவதும் லேசான பரவலாக மழை பெய்து கொண்டிருந்தது. ஒரு சில இடங்களில் மிதமான மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருக்கிறது.

News September 21, 2024

அரக்கோணம் ஆர்டிஓ பணியிட மாற்றம்

image

அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியராக பாத்திமா பணியாற்றி வருகிறார். இவர் சென்னை சேப்பாக்கம் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் முகாம் தனித்துணை ஆட்சியராக பணியிட மாற்றம் செய்து அரசின் முதன்மை செயலாளர் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தார். அதேநேரம் அரக்கோணம் புதிய வருவாய் கோட்டாட்சியர் யார் என்று இதுவரை தகவல் தெரிவிக்கப்படவில்லை.

News September 21, 2024

அரக்கோணம் எம்எல்ஏ எச்சரிக்கை

image

அரக்கோணம் எம் எல் ஏ ரவி இன்று விடுத்துள்ள அறிக்கையில், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு சாலை பணிகளுக்காக நெடுஞ்சாலை துறைக்கு அரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யும் இந்த ஆண்டு 35 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.அரக்கோணம் தொகுதி சாலைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது.வழக்கம்போல் சாலை விரிவாக்க பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாவிட்டால் அரக்கோணம் நெடுஞ்சாலைத்துறை அலுவலக முற்றுகைப் போராட்டம் நடக்கும் என தெரிவித்துள்ளார்

News September 21, 2024

ராணிப்பேட்டையில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு 11 மணி முதல் தற்போது வரை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், ராணிப்பேட்டை இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News September 21, 2024

420 சிஐஎஸ்எப் வீரர்களுக்கு பயிற்சி நிறைவு விழா

image

அரக்கோணம் அடுத்த தக்கோலம் நகரி குப்பத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை மையம் இயங்கி வருகிறது இங்கு உதவி சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் 420 பேருக்கான பயிற்சி நிறைவு விழா நேற்று நடைபெற்றது விமான நிலையங்களின் தென் மண்டல ஐஜி ஜோஸ் மோகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று வீரர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார் பயிற்சியின்போது சிறந்து விளங்கியவர்களுக்கு அவர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார் .

News September 21, 2024

ராணிப்பேட்டையில் இன்றைய காய்கறி நிலவரம்

image

பெங்களூரு தக்காளி கிலோ ரூ.40, பீன்ஸ் ரூ.80, பீட்ரூட் ரூ.45, பாகற்காய் ரூ.60, சுரைக்காய் ரூ.20, கத்திரிக்காய் ரூ.40, அவரைக்காய் ரூ.45, முட்டைக்கோசு ரூ.25, குடைமிளகாய் ரூ.55, கேரட் ரூ.50, காலிஃப்ளவர் ஒன்று ரூ.45, வெங்காயம் ரூ.25, வெண்டைக்காய் ரூ.35, சின்ன வெங்காயம் ரூ.70, உருளைக்கிழங்கு ரூ.20, முள்ளங்கி ரூ.30, கோவக்காய் ரூ.25, முருங்கைக்காய் ரூ.60, கருணை ரூ.75, தேங்காய் ஒன்று ரூ.40, இஞ்சி ரூ.240.

News September 20, 2024

ராணிப்பேட்டையில் மழை

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாலையிலிருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. முதலில் சாரல் மழையாக இருந்தது பின்னர் பலத்த மழையாக மாறியது. இன்று இரவு 8.30 மணி அளவில் வாலாஜா, ஆற்காடு, அம்மூர், சிப்காட், காவேரிப்பாக்கம், சோளிங்கர், மேல்விஷாரம், பனப்பாக்கம் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

error: Content is protected !!