Ranipet

News November 15, 2024

ராணிப்பேட்டையில் நாளை குரூப் 2 மாதிரி தேர்வு

image

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் GROUP-2 & 2A MAIN EXAM மாதிரி தேர்வு நாளை (நவ.16) காலை 10 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வு எழுதுவதற்கு விருப்பம் உள்ள போட்டி தேர்வர்கள் புகைப்படம், Group 2 Hall ticket மற்றும் ஆதார் அட்டை நகலுடன் போட்டி தேர்வில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

News November 15, 2024

போதை இல்லா தமிழகம் போட்டி இன்றே கடைசி நாள்

image

தமிழ்நாடு அரசு சார்பாக “போதையில்லா தமிழ்நாடு” என்கிற தலைப்பில் ரீல்’ஸ், போஸ்டர் டிசைன், மீம்ஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது பொதுமக்கள் தங்களது படைப்புகளை tndiprmediahub@gmail.com என்ற TNDIPR மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் என கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி இன்று தெரிவித்துள்ளார் மேலும் போட்டியில் பங்கேற்க இன்று கடைசி நாள்.

News November 15, 2024

நாளை வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் அனைத்து விதமான திருத்தங்கள் செய்ய அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். இச்சிறப்பு முகாம்கள் நாளை (நவ.16), நாளை மறுநாள் (நவ.17) காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது. மக்கள் இந்த முகாம்களை பயன்படுத்தி கொள்ளுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

News November 15, 2024

ராணிப்பேட்டையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்

image

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (நவ.16.) காவேரிப்பாக்கம் துணை மின் நிலையம், அரக்கோணம் துணை மின் நிலையத்தில் மின் தடை செய்யப்பட உள்ளன. இதனால், மோசூர், அரக்கோணம் டவுன், சுவால்பேட்டை, சோளிங்கர், மாமண்டூர், ஓச்சேரி, ஆயர்பாடி, அவளூர், சிறுகரும்பூர், கீழ்குப்பம், செய்யூர், உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ளன.

News November 14, 2024

ரோந்து பணி போலீசார் தொலைபேசி எண்கள் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (நவ.14) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).

News November 14, 2024

டிஜிட்டல் பயிர் ஆய்வு பணிகளை பார்வையிட்ட கலெக்டர்

image

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.யு. சந்திரகலா வாலாஜா ஊராட்சி ஒன்றியம், பூண்டி கிராமத்தில் இன்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் வேளாண்மை கல்லூரி மாணவியர்களை கொண்டு டிஜிட்டல் பயிர் ஆய்வு (digital crop survey) பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். உடன் இணை இயக்குனர் வேளாண்மை (பொறுப்பு) செல்வராஜ், நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தபேந்திரன் உடனிருந்தனர்.

News November 14, 2024

ராணிப்பேட்டை பள்ளிக்கு விருது

image

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் குழந்தைகள் தின விழா சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொடக்கக் கல்வித்துறை, சிறந்த பள்ளிகளுக்கான விருது 2023-24 திமிரி ஒன்றியத்திற்குட்பட்ட மேல்புதுப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்.

News November 14, 2024

மாவட்ட காவல்துறை சார்பில்  குழந்தைகள் தின வாழ்த்து

image

இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை இன்று (நவம்பர் 14) குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகள் தின வாழ்த்துச் செய்தியை சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளது. இதில் “இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைத்து குழந்தைகளுக்கும் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது

News November 14, 2024

ராணிப்பேட்டை அருகே விபத்து; பள்ளி மாணவன் மரணம் 

image

அரக்கோணம் அடுத்த பெருங்களத்தூரில் உள்ள சலூன் கடையில் முடி திருத்தம் செய்து கொண்டு திருத்தணி டிபி கண்டிகை பகுதியை சேர்ந்த பிளஸ்2 மாணவன் அரி கிருஷ்ணன் நேற்று மாலை சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.எதிரே வந்த பைக் மோதியதில் படுகாயம் அடைந்தவரை  அங்கிருந்தவர்கள் திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இன்று காலை அரிகிருஷ்ணன் இறந்தார்.தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்

News November 13, 2024

30 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதி

image

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அருகே தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 30 தொழிலாளர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விசாரணையில், நிறுவனத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீரில் பல்லி இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனால், அவர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திமிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!