India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆற்காட்டில் ரூ.35 கோடியில் புறவழிச்சாலை (பைபாஸ்) அமைக்கும் பணியை கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். ஆற்காடு நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க புதிதாக 3.46 கிமீ தொலைவுக்கு புறவழிச் சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறை நபாா்டு மற்றும் கிராம சாலை துறை சாா்பில் ரூ. 35 கோடி ஒதுக்கப்பட்டது. சாலைப் பணிகள் தொடக்க விழா வேப்பூா் ஊராட்சி பொன்னியம்மன் கோயில் அருகே சனிக்கிழமை நடைபெற்றது.

வேடல் கிராமம் பெரியார் நகரில் அரக்கோணம் – சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் நேற்று இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் இரு வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இறந்தவர் யார் என அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

பங்குனி மாத சனிக்கிழமையில் வரும் பௌர்ணமி இன்று. ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த பனப்பாக்கத்தில் அமைந்துள்ளது மயூரநாதர் கோயில். அகத்தியருக்கு கைலாய மலையில் இருந்து சிவன் திருமண காட்சியை அருளிய தலம் என்பதால், திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து மயூரநாதரை வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. திருமண வரன் பார்த்துக்கொண்டிருக்கும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க..

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 211 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். அந்தந்த வட்டாரங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து ஏப்ரல் 30ஆம் தேதி மாலை 5:45 மணிக்குள் அனுப்ப வேண்டும் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.

இந்திய கடற்படையின் மருத்துவப் பிரிவில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மாதம் ரூ.21,700 – ரூ.69,100 சம்பளம் வழங்கப்படும். குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.60. இந்த<

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வரும் ஏப்.15ம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாற்று திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வேலை தேடுபவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்கள் 9499055897, 9952493516 அழைக்கலாம். ஷேர் செய்யுங்கள்

கொளத்தேரி ரயில்வே கேட் அருகில் தனியார் பஞ்சு ஆலை இயங்கி வருகிறது. இந்த பஞ்சு ஆலையில் இன்று மாலை இயந்திரத்தில் மின் கசிவு ஏற்பட்டு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு வைக்கப்பட்டிருந்த பஞ்சுகள் மள மளவென தீப்பிடித்து எரிந்தது. இதில் அப்பகுதி முழுவதும் கரும்புகை பரவி சிலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. வாலாஜா தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மேலும் தீ பரவாமல் அணைத்தனர்.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு நேரங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், காவல் துறை சார்பில் 11.04.2025 அன்று இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ரோந்து 1 முதல் 5 வரை மொத்தமாக 5 போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவுக்கும் ஓர் உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் பொறுப்பாக உள்ளனர்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் TNPSC Group I – IV RRB Group D,TNUSRB SI, SSC, Banking போன்ற மத்திய, மாநில அரசு போட்டி தேர்வுகளுக்கு பாடவாரியாக தேர்வு (subject wise test) மற்றும் முழு மாதிரி தேர்வு( full mock test) மெய் நிகர் கற்றல்( virtual learning portal ) வளைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை தேர்வர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

▶மாவட்ட ஆட்சியர் – 04172271000 ▶மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) – 9443472844 ▶மாவட்ட வருவாய் அலுவலர் – 041722723000 ▶ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் – 9445000416 ▶ இராணிப்பேட்டை நகராட்சி – 04172-272502 ▶காவல் கண்காணிப்பாளர் 9498100660 ▶மாவட்ட மின்வாரியம் – 04177-236700 ▶ பேரிடர் மேலாண்மை – 04172 – 271766 ▶ ஊரக வளர்ச்சி முகமை – 7305089500 ▶அரக்கோணம் இரத்த வங்கி – 04177-232270
Sorry, no posts matched your criteria.