India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (17.11.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் எண்ணிற்கும் 9884098100 அழைக்கலாம்.
இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் ஓம்கார் பாலாஜி கோயம்புத்தூரில் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இந்த கைது சம்பவத்தை கண்டித்து வாலாஜா பேருந்து நிலையத்தில் இன்று மாலை இந்து மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நிர்வாகி மோகன் தலைமையில் நடத்தினர். வாலாஜா போலீசார் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை கைது செய்து அங்குள்ள மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
ராணிப்பேட்டை அருகே ஆயல் நாகத்தாங்கலை சேர்ந்த சர்வேஷ் அப்பகுதியில் பைக்கில் வேகமாக சென்றுள்ளார். இது தொடர்பாக சிலர் அவரை தட்டி கேட்டுள்ளனர்.இந்நிலையில் இன்று சர்வேஷ், தம்பி சந்துரு, தந்தை சுரேஷ், பாட்டி கிருபாவதி ஆகியோரை ஐந்துக்கும் மேற்பட்ட கும்பல்தாக்கி கத்தியால் வெட்டியுள்ளனர். படுகாயம் அடைந்த 4 பேரும் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாணாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆற்காடு, ராணிப்பேட்டை ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய பா.ம.க. ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளராக கலவையை சேர்ந்த நல்லூர் சண்முகத்தை கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்து கடிதம் வழங்கி உள்ளார். இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற பின் முத்துக்கடைக்கு வந்த நல்லூர் சண்முகத்திற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பகவான் கார்த்தி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த தருண் என்ற ஒரே பெயர் கொண்ட இரு இளைஞர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் சுருதி இன்று பரிந்துரைத்தார். இதன் பேரில் இருவரும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (நவ.16) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).
தமிழகத்தில் இன்று 36 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. உங்களுடைய பகுதிகளில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.
வாலாஜாபேட்டை காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட சென்னசமுத்திரம் அருகில் வேலாயுதம், வள்ளுவம், பாக்கம் உட்பட மூன்று நபர்களை தாக்கி செல்போன் பறித்து சென்ற 2 நபர்களை காவல் ஆய்வாளர் சாலமன் ராஜா தலைமையிலான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா ஐ.ஏ.எஸ் அவர்கள் மேற்படி இரண்டு நபர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணை பிறப்பித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் அரக்கோணம் மற்றும் கலவை பகுதிகளில் உள்ள தனியார் வேளாண் கல்லூரி மாணவர்கள் 526 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் 326 வருவாய் கிராமங்களில் 9,53,550 சர்வே எண்கள் ஆய்வு செய்ய வேண்டும். இதுவரை 4,27,969 சர்வே எண்கள் பயிர் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் வரும் 22ம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (நவ.15) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).
Sorry, no posts matched your criteria.