Ranipet

News November 20, 2024

ரோந்து பணி போலீசார் தொலைபேசி எண்கள் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (நவ.20) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).

News November 20, 2024

ராணிப்பேட்டை எஸ்பி பாராட்டு

image

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி தீபிகா (வ/24) என்பவருக்கு 28 ஆண்டுகள் சிறைதண்டனை, 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.3000 அபராதம் விதித்து ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்
இன்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட எஸ்பி பாராட்டுகளை தெரிவித்தார்.

News November 20, 2024

ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவு

image

ஆற்காடு தாஜ்புரா மந்தைவெளி தெருவை சேர்ந்த ராஜா, ஒரு வயது குழந்தை பிரவினேஸ்வரன் ஆகியோர் கடந்த 2019 ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கில் ராஜாவின் மனைவி தீபிகா கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இன்று ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது தீபிகாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 3000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

News November 20, 2024

ராணிப்பேட்டையில் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு முகாம்

image

ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் தேர்வு வருகிற நவம்பர் 23 மற்றும் 24-ம் தேதி ராணிப்பேட்டையில் உள்ள இஐடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்வில் 13 வயதுக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் சந்தோஷ் காந்தி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News November 20, 2024

அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்

image

சோளிங்கர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் சோளிங்கர் வட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராமப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் இன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News November 20, 2024

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறை ஆய்வு

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா இன்று ஆற்காடு நகராட்சி தமிழ்நாடு அரசு வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூட குடோனில் சீலிடப்பட்டு வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையினை அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாதாந்திர ஆய்வு மேற்கொண்டார். உடன் தேர்தல் வட்டாட்சியர் செல்வி. வசந்தி, ஆற்காடு வட்டாட்சியர் பாக்கியலட்சுமி மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் இருந்தனர்.

News November 20, 2024

கோவை டபுள் டக்கர் பிருந்தாவன் ரயில்கள் தாமதம்

image

சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் பராமரிப்பு பணிகள் குறித்த நேரத்தில் முடியாத காரணத்தினால் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் அரக்கோணத்திற்கு மூன்று மணி நேரம் கால தாமதமாக வந்தது. அதேபோன்று ஏசி டபுள் டக்கர் மற்றும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இரண்டரை மணி நேரம் கால தாமதமாக வந்ததால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

News November 20, 2024

ராணிப்பேட்டை அருகே நாளை மின்தடை 

image

அரக்கோணம் கோட்டத்தைச் சேர்ந்த இச்சிப்புத்தூர் மற்றும் பள்ளூரில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை (21-11-2024)மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது. இச்சிப்புத்தூர்,தணிகை,போளூர்,திருமால்பூர்,சயனபுரம், சேந்தமங்கலம்,வாணியம்பேட்டை, தண்டலம், உளியம்பாக்கம், வளர்புரம், ஈசலாபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும் என்று கோட்ட செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News November 20, 2024

ராணிப்பேட்டை அருகே வாகனங்களுக்கு அதிக கட்டணம்

image

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் ஸ்ரீலட்சுமிநரசிம்மர் கோயிலில் கார்த்திகை மாதம் பெருவிழாவுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களுக்கு நகராட்சி ஒப்பந்ததாரர் அதிக கட்டண வசூல் செய்வதால் பக்தர்கள் அவதிக்கு ஆளாகின்றனர். கோயிலுக்கு வரும் கார்களுக்கு வாகன நிறுத்த கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது.எப்போதும் 30 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் கார்த்திகை மாதத்தில் மட்டும் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

News November 19, 2024

இரவு ரோந்து பணியில் விவரங்கள் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (19.11.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் எண்ணிற்கும் 9884098100 அழைக்கலாம்.

error: Content is protected !!