India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா, இ.ஆ.ப., தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று 10 மற்றும் 12ம் வகுப்புகளில் குறைந்த தேர்ச்சி சதவீதத்தை கொடுத்துள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. நடைபெற உள்ள அரையாண்டு தேர்வு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (23.11.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்டக் காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாரின் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் தெரிவிக்களாம். கண்ட்ரோல் ரூம் (9884098100) எண்ணிற்கும் அழைக்கலாம்.
ராணிப்பேட்டை மாவட்ட SP கிரண் ஸ்ருதி பரிந்துரையின் பேரில், கலவை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக குட்கா போன்ற போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றவாளிகள் 1.லத்தீப்கான் (வ/27) 2.மனோகர்சிங் (வ/32) ஆகியோர் இன்று (23.11.2024) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
அரக்கோணம் அடுத்த அம்மனூர் ஊராட்சியில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ ரவி கலந்து கொண்டு பேசினார். ஊராட்சி மன்ற தலைவர் ஞானவேல், வட்டாட்சியர் ஸ்ரீதேவி மற்றும் வருவாய் துறையினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்தும் பேசினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக இன்று (23-11-2024) மாவட்ட மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள விழிப்புணர்வு செய்தியில், குழந்தைகள் தொழிலாளர்கள் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது இதில் “குழந்தைகள் அறிவை சம்பாதிக்கட்டும் பணத்தை அல்ல” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று வெளியீடபட்டது
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று நவம்பர் (23) சனிக்கிழமை மற்றும் நாளை நவம்பர் (24) ஞாயிற்றுக்கிழமை ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு வாக்காளர் முகாம்கள் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம், பெயர் சேர்த்தல், புதிய வாக்காளர் சேர்த்தல் உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கலாம்.
சோளிங்கர் பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதுகுறித்து புகார் எழுந்த நிலையில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் தேவிபாலா தலைமையில், நகராட்சி பணியாளர்கள் சென்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் 3 கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி காட்டும் மையத்தின் சார்பில், அலுவலக வளாகத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களில் 120 பேர் தேர்வுசெய்யப்பட்டு அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தே.கவிதா இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (நவ.22) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).
காட்டுப்பாக்கம் ஸ்ரீராம் நகரை சேர்ந்த சுப்பிரமணி இன்று ஏரிக்கரை வழியாக டிராக்டரில் செல்லும்போது மண்சரிவு ஏற்பட்டு டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிராக்டர் அடியில் சிக்கிக்கொண்ட சுப்பிரமணியத்தை, அந்த வழியாக சென்றவர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் டிராக்டரை தூக்கி படுகாயங்களுடன் கிடந்த அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.