Ranipet

News October 17, 2024

ராணிப்பேட்டையில் இரவு ரோந்து பணி விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம்.

News October 17, 2024

அக்.20ஆம் தேதி மாவட்ட அளவிலான போட்டி

image

கலை பண்பாட்டு துறை சார்பில் சிறுவர்கள் இடையே குரலிசை, பரதநாட்டியம் நாட்டுப்புற நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 4 கலை பிரிவுகளில் மாவட்ட அளவிலான போட்டிகள் விளாப்பாக்கம், ஸ்ரீ மகாலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அக்.20ஆம் தேதி காலை 9 மணி முதல் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 04427269148, 9751152828 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ராணிப்பேட்டை கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News October 17, 2024

அக்.19ல் பொது விநியோக திட்ட முகாம்

image

பொது விநியோக திட்டம் சிறப்பாக நடைபெற ஒவ்வொரு மாதமும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அக்டோபர் மாதத்திற்கான பொது விநியோகம் திட்ட சிறப்பு முகாம் 19ஆம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே இந்த சிறப்பு முகாமினை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கேட்டுக்கொண்டுள்ளார்.

News October 17, 2024

ராணிப்பேட்டை காவல்துறை   எச்சரிக்கை

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை மழைக் கால எச்சரிக்கை பதிவு இன்று வெளியிட்டுள்ளார்கள். தற்போது மழைக்காலம் என்பதாலும் நீர் நிலையங்கள் நிரம்பும் அபாயம் உள்ளதாலும் சிறுவர்களை ஏரி குளம் மற்றும் நீர் நிரம்பிய பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டாம். நீர் நிரம்பியபகுதிகளுக்குச் சென்று புகைப்படம் எடுத்துக் கொள்வதும் பதிவு செய்வதும் போன்ற ஆபத்தான செயல்களில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம் என்றுஅறிவுறுத்தப்படுகிறது.

News October 17, 2024

ராணிப்பேட்டை காவல்துறை   எச்சரிக்கை

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை மழைக் கால எச்சரிக்கை பதிவு இன்று வெளியிட்டுள்ளார்கள். தற்போது மழைக்காலம் என்பதாலும் நீர் நிலையங்கள் நிரம்பும் அபாயம் உள்ளதாலும் சிறுவர்களை ஏரி குளம் மற்றும் நீர் நிரம்பிய பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டாம். நீர் நிரம்பியபகுதிகளுக்குச் சென்று புகைப்படம் எடுத்துக் கொள்வதும் பதிவு செய்வதும் போன்ற ஆபத்தான செயல்களில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம் என்றுஅறிவுறுத்தப்படுகிறது.

News October 17, 2024

ராணிப்பேட்டையில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

image

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 17)மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் திருவள்ளூர், , திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் வெளியே செல்லும் பொதுமக்கள் தகுந்த முன்னேற்பாடுகளுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 16, 2024

ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் தொலைபேசி எண்கள் வெளியீடு 

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).

News October 16, 2024

ராணிப்பேட்டை மாவட்டம் இரவு ரோந்து பணி விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (16.10.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்று முன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு,சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம்.
கண்ட்ரோல் ரூம் :9884098100

News October 16, 2024

ஆற்காட்டில் வேலை வாய்ப்பு முகாம்

image

ஆற்காடு அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 19ம் தேதி காலை 9மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.முகாமில் 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் எஸ்எஸ்எல்சி,எச்எஸ்சி,ஐடிஐ,டிப்ளமோ,டிகிரி,நர்சிங்,பி.இ,எம்.பி.ஏ உள்ளிட்ட கல்வி தகுதியினை உடைய வேலை நாடுநர்கள் கலந்துகொண்டுதங்களுக்கு தேவையான வேலைகளை தங்கள் அளவிலேயே தேர்வு செய்து பயன்பெறலாம் என ஆட்சியர் சந்திரகலா கேட்டுக்கொண்டுள்ளார்

News October 16, 2024

மாவட்ட வருவாய் ஆய்வாளர் எச்சரிக்கை

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர்ந்து அனைத்து ஊர்களிலும் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், அனைத்து வருவாய் ஆய்வாளர்களும் தங்களது முகாம் அலுவலகத்தில் தங்கி இருக்க வேண்டும், அவர்களது வீடுகளுக்கு செல்லக்கூடாது, இரவு நேரத்தில் முகாம்களில் இல்லாவிடில் வருவாய் ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் ஆய்வாளர் சுரேஷ் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!