India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்டம் கண்காணிப்பாளர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் குழந்தை தொழிலாளர் வேலைக்கு அமர்த்தி வேலை வாங்குவது சட்டப்படி குற்றம். படிக்கும் வயதில் பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்க வேண்டும். நாட்டின் அடுத்த தலைமுறைகள் இந்த குழந்தைகள் தான். அவர்களின் வாழ்வு சீரழிக்க யாராக இருந்தாலும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.புகாருக்கு எண் :1098 என்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.
பயிர் சேதத்தை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார். மாவட்ட நிர்வாகம் சார்பில் வடகிழக்கு பருவ மழையின் போது பயிர்களை காக்க வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதனை விவசாயிகள் பின்பற்ற வேண்டும். பயிர்களுக்கு காப்பீட்டுத் தொகை செலுத்தாத விவசாயிகள் இ.சேவை மையம் மூலம் நவ.15ந் தேதிக்குள் செலுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை ஆற்காடு அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. முகாமில் 8-ம் வகுப்பு தோ்ச்சி முதல் 10-ஆம் வகுப்பு, கல்வித் தகுதிகளை உடைய வேலைநாடுநா்கள் கலந்து கொள்ளலாம்.
தக்காளி ரூ.50-60 கத்திரிக்காய் ரூ 35-40, கருணைக்கிழங்கு ரூ 60, வெண்டைக்காய் ரூ 25-30, சுரைக்காய் ரூ 20 வெண்பூசணி ரூ 20-25,உருளைக்கிழங்கு ரூ 40, கேரட் ரூ 50,பீன்ஸ் ரூ 70-90வெங்காயம் ரூ 50-60, சின்ன வெங்காயம் ரூ 50-55, இஞ்சி ரூ120-150, பூண்டு ரூ 300-350,காலிஃப்ளவர் ரூ 25 வாழைத்தண்டு ரூ 10-15 கீரை வகைகள் ரூ 10-15 மாங்காய் ரூ 50-60 முருங்கை ரூ 40-50,தேங்காய் ரூ 25-30,விற்பனை செய்யப்படுகிறது
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (18.10.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்று முன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அதனுடன்,கண்ட்ரோல் ரூம் எண்: 9884098100.
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில் “நான் காவல்துறையிலிருந்து அழைக்கிறேன். உங்கள் பார்சல் கைப்பற்றப்பட்டது. அதில் போதைப் பொருள் இருப்பதைக் கண்டுபிடித்தோம்” என பொதுமக்கள் தங்கள் தொலைபேசிக்கு வரும் போலியான அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் போலியான அழைப்புகளை தவிர்த்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டையில் நாளை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 150க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் 10,000க்கும் மேற்பட்டவர்களை தேர்வு செய்ய உள்ளனர். காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி (ஆற்காடு) வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. மேலும் விவரங்களுக்கு 04172 – 291400 / 9488466468 என்ற தொலைப்பேசி எண்களை தொடர்புக் கொண்டு அறிந்துகொள்ளலாம்.
வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் மழை தொடரும் என, வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்ப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் உள்ள காலி மனை, வீட்டு மனை, வீடு, கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்களின் உரிமையாளர்கள் 2024-25ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியினை வரும் அக்.31ஆம் தேதிக்குள் செலுத்துவோருக்கு, அதற்கான தொகையில் 5% தள்ளுபடி வழங்கப்படும். இந்த வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.