India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு சாலை பழைய பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று (ஏப்ரல் 25) காலை 10 மணிக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 8ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு +2, பட்டப்படிப்புகள், ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், மற்றும் பி.இ படித்தவர்கள் பங்கேற்கலாம்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 24 இரவு ரோந்து பணியில் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை பாணாவரம் தக்கோலம் திமிரி ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம் உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம். 9884098100

ராணிப்பேட்டை வாலாஜாபேட்டை அருகேயுள்ள வன்னிவேடு அகத்தீசுவரர் கோயிலில் உள்ள மூலவரை அகத்திய முனிவர் மணலால் அமைத்து வழிபட்டார், வன்னி மரங்கள் அதிகம் உள்ளதால் இத்தலத்துக்கு வன்னிக்காடு என்ற பெயரும் உண்டு. இந்த கோயிலின் பூஜையில் கலந்து கொண்டால் வீடு மற்றும் கட்டிடம் கட்டுபவர்கள் தடங்கலின்றிக் கட்டி முடிப்பார்கள் என்கிற நம்பிக்கையுண்டு, வீடு கட்டும் பணி தடைபடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.

ராணிப்பேட்டையில் பிரசன்னா வெங்கடேஸ்வராபெருமாள் கோயிலின் சிறப்பாக பெருமாளின் 108 தெய்வதளத்தில் 107வது தளமான திருப்பாற்கடலை உடலுடன் சென்று பார்க்க முடியாது என்பதால் அந்த குறையை தீர்ப்பதற்காக பெருமாள் இந்த திருப்பாற்கடலில் அருள்கிறார். திருப்பாற்கடல் பெருமாளை தரிசித்தால் 107வது தளமான திருப்பாற்கடல் பெருமாளை தரிசித்த பலன் கிடைக்குமென்பது நம்பிக்கை இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.

அரசு இ – சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம், பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம் போதும். ஆனால், இவற்றை வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும்.

ராணிப்பேட்டை அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கியிருக்கும் சிறுவர்களுக்கான ஆற்றுப்படுத்துதல் சேவையை வழங்க, ஒப்பந்த அடிப்படையில் ஒரு ஆற்றுப்படுத்துநரை நியமிக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஆற்றுப்படுத்துநர் பணியிடத்திற்கான விண்ணப்பங்களை ராணிப்பேட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் நேரில் வழங்க வேண்டும். இதனை மே.9 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார் .

ராணிப்பேட்டை அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கியிருக்கும் சிறுவர்களுக்கான ஆற்றுப்படுத்துதல் சேவையை வழங்க, ஒப்பந்த அடிப்படையில் ஒரு ஆற்றுப்படுத்துநரை நியமிக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஆற்றுப்படுத்துநர் பணியிடத்திற்கான விண்ணப்பங்களை ராணிப்பேட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் நேரில் வழங்க வேண்டும். இதனை மே.9 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார் .

ராணிப்பேட்டை மாவட்டத்தில் SDAT அகாடமி மாவட்ட விளையாட்டு குத்துச்சண்டை பயிற்சி மையம் துவங்கப்பட உள்ளது. குத்துச்சண்டை விளையாட்டில் ஆர்வமுடைய 12-21 வயதுடையோர், விளையாட்டு விதிமுறைகள் மூலமாக 40 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தேர்வு 28ம் தேதியன்று காலை 7மணி அளவில் வன்னிவேடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. விரும்புவோர் இதில், கலந்துகொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆளுநரகத்தின் சார்பில் செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு, “செம்மொழியின் சிறப்பு மற்றும் முத்தமிழின் கலாச்சாரம்” என்ற தலைப்பில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் 09.05.2025 மற்றும் 10.05.2025 ஆகிய தேதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக நடைபெறவுள்ளன. இந்த நிகழ்வில் மாநில அளவில் 150 மாணவர்கள் தேர்வுசெய்யப்படுவர். மேலும் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்.

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை (23.04.2025) இன்று இரவு பாதுகாப்பு பணிக்கான ரவுண்டு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் உபமாவட்டங்களில் பொறுப்பான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்டுப்பாட்டு அறை மற்றும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய நடவடிக்கையாகும். அவசர தேவைக்காக இவை பயனுள்ளதாக இருக்கும்.
Sorry, no posts matched your criteria.