Ranipet

News October 26, 2024

ராணிப்பேட்டையில் ரூ 4 கோடிக்கு ஆடுகள் விற்பனை

image

ராணிப்பேட்டை வார சந்தை மைதானத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு நேற்று (அக் 25) ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆடுகள் உடல் எடை மற்றும் ரகங்கள் ஏற்றவாறு ரூ 5,000 முதல் 35 ஆயிரம் வரை வியாபாரம் நடைபெற்றது. காலை 5 மணி முதல் ஒரு மணி வரை நடைபெற்றது. இந்த சந்தையில் ரூ 40 கோடிக்கு மேலாக விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

News October 26, 2024

ராணிப்பேட்டை காவல்துறை மக்களுக்கு எச்சரிக்கை

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், பண்டிகை நாட்களை முன்னிட்டு, பிரபல கடைகள் மற்றும் உணவகங்கள் பேரில் பரிசு கூப்பன்கள் அளிப்பதாக கூறி வாட்ஸ்அப் லிங்குகளை அனுப்பி மோசடியில் ஈடுபடுகின்றனர். அவ்வாறு அந்த போலியான லிங்குகளை கிளிக் செய்வதன் மூலம் தங்கள் தனிப்பட்ட தகவல் மற்றும் பணம் திருடப்பட வாய்ப்புள்ளது. எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

News October 26, 2024

ராணிப்பேட்டை கலெக்டர் அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அக்.29 ஆம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெறும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளார். ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலா்கள் விவசாயிகளின் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனா். எனவே விவசாயிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கை வாயிலாகவும், தனிநபா் பிரச்னைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம் எனக் கூறியுள்ளார்.

News October 25, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (25.10.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் எண்ணிற்கும் 9884098100 அழைக்கலாம்.

News October 25, 2024

ராணிப்பேட்டையில் குரூப் 2 மாதிரி தேர்வு

image

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் GROUP-2 & 2A முதன்மை தேர்விற்கான மாதிரி தேர்வு நாளை (26.10.2024) சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு இராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. தேர்விற்கு விண்ணப்பித்த மாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள் இந்த மாதிரி தேர்வு கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

News October 25, 2024

அதிமுக புதிய உறுப்பினர் அட்டை வழங்கல்

image

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அதிமுக கிழக்கு ஒன்றியத்தில் புதிய உறுப்பினர் உரிமை சீட்டுகள் உறுப்பினர்களிடம் வழங்கியதை இன்று 25/10/2024 ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ராணிப்பேட்டை S.M.சுகுமார் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். உடன் ஒன்றிய கழக செயலாளர் சொரையூர் எம்.குமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கழக நிர்வாகிகள் வாலாஜா கு.எழில்ரசன் ஆகிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News October 25, 2024

அக்.29ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

image

அக்டோபர் மாதத்துக்கான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் வரும் அக்.29 காலை 11 மணியளவில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பொது பிரச்னைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்னைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம் எனக் கூறியுள்ளார்.

News October 25, 2024

13 துணை வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்

image

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 13 துணை வட்டாட்சியர்கள் மாற்றம் செய்து ஆட்சியர் சந்திரகலா நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். நெமிலி தேர்தல் துணை வட்டாட்சியர் பன்னீர்செல்வம், நெமிலி வட்ட வழங்கல் அலுவலராக பணிபுரிந்து வந்த சுரேஷ் சோளிங்கர் தலைமை இடத்து துணை வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சோளிங்கர் வட்ட வழங்கல் அலுவலர் குமார் ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலக வரவேற்பு துணை வட்டாட்சியர் என

News October 24, 2024

ராணிப்பேட்டையில் இரவு ரோந்து பணி விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (24.10.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்று முன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் 9884098100 அழைக்கலாம்.

News October 24, 2024

பஞ்சாப் மாநிலத்தில் நெமிலி விவசாயிக்கு பயிற்சி

image

ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த இயற்கை விவசாயி அமலன் அவர்கள் நெமிலி வட்டாரத்தில் உள்ள கீழ்வெண்பாக்கம் கிராமத்தில் விவசாயம் செய்து கொண்டு வருகிறார். இவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் வேளாண்மை இணை இயக்குனர் பரிந்துரையின்படி தேர்வு செய்யப்பட்டு பஞ்சாப் மாநிலத்திற்கு விவசாய சம்பந்தப்பட்ட பயிற்சிக்கு சென்றுள்ளார். இதர மாவட்டங்களிலும் ஒருவர் சென்றுள்ளனர் என அருணா குமாரி ADA தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!