India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய, கிருஷ்ணமூர்த்தி(46) என்பவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.6000 அபராதம் விதித்து வாலாஜா குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு மாவட்ட எஸ்.பி கிரண் சுருதி தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (டிச.3) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாரக்கு, புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று சர்வதேச மற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற 55 மற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு, நினைவுப் பரிசுகள் வழங்கி, மற்றுத்திறனாளி சுயஉதவி குழுவினரால் காட்சிப்படுத்தப்பட்ட LED பல்புகளையும் அமைச்சர் காந்தி பார்வையிட்டார் . மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உடனிருந்தார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது.இந்தநிலையில், இன்று (டிச 03) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி, அவர்கள் உத்தரவின் படி மாவட்டம் முழுவதும் நீர் நிரம்பியுள்ள குளம், ஏரி, ஆறு, ஆகிய பகுதிகளில் பொதுமக்கள்,குழந்தைகள் யாரும் செல்ல வேண்டாம் என காவல்துறையினர் மூலம் விழிப்புணர்வு பதாகைகள் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி அவர்கள் உத்தரவின்படி இன்று மாவட்டம் முழுவதும் நீர் நிரம்பியுள்ள குளம்,ஏரி, ஆறு, குட்டை ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் யாரும் செல்ல வேண்டாம் என காவல்துறை மூலம் விழிப்புணர்வு பதாகைகள் வைத்து விழிப்புணர்வு படுத்தப்பட்டது.
ஃபென்ஜால் புயலால் பெய்த கனமழையால் வடதமிழகத்தில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை நீடிக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுத்தப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. ஷேர் பண்ணுங்க
காட்ரம்பாக்கம் மதுரா மலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமலை, இவர் இன்று இரவு பைக்கில் சோளிங்கர் நோக்கி சென்று கொண்டிருந்தார். ஜம்புகுளம் கூட்ரோடு அருகில் செல்லும் போது எதிரே புலிவலம் கிராமத்தைச் சேர்ந்த சதீஸ், சந்தோஷ் ஆகியோர் வந்த பைக் திருமலை மீது மோதியது. இதில் மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். கொண்டபாளையம் போலீசார் சென்று மூன்று பேரையும் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு நாள் வரும் டிச.5-ம் தேதி அனுசரிக்கப்பட உள்ள நிலையில், அதிமுக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம் சுகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் டிச.5-ம் தேதி ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (டிச 02) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலுள்ள புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு, புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100
அரக்கோணம் நகராட்சி வின்டர்பேட்டை அன்னை தெரேசா தெருவை சேர்ந்த ரிஷ்வான்(12) நேற்று பெஞ்சல் புயல் தொடர் மழையின் காரணமாக பாதிப்புக்குள்ளான, ஈரமான வீட்டின் சுவற்றில் மின் கசிவு ஏற்பட்டது தெரியாமல் கழிப்பறை மின் விளக்கு பட்டனை அழுத்தும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். சிறுவனின் உடலுக்கு அமைச்சர் காந்தி இன்று அஞ்சலி செலுத்தி நிவாரண நிதி ரூ.4.5லட்சம் காசோலை வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.