Ranipet

News October 29, 2024

ராணிப்பேட்டை ஆட்சியர் மக்களிடம் வேண்டுகோள்

image

மருத்துவமனைகள், பள்ளிகள், கோர்ட், வழிபாட்டுத்தலங்கள், முதியோர் இல்லங்கள் போன்ற அமைதி காக்கும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசைப்பகுதிகள் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிக்க கூடாது உள்ளிட்டவற்றை வழிமுறைகளை கடைப்பிடித்து பொதுமக்கள் மாசற்ற தீபாவளி கொண்டாட வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News October 29, 2024

ராணிப்பேட்டை உழவர் சந்தையில் இன்றைய நிலவரம்

image

ராணிப்பேட்டை உழவர் சந்தையில் இன்றைய நிலவரம்: தக்காளி ரூ.30-60, குடைமிளகாய் ரூ. 45, கத்திரிக்காய் ரூ. 60-80, கருணைக்கிழங்கு ரூ. 55-60 வெண்டைக்காய் ரூ. 30-40 உருளைக்கிழங்கு ரூ. 40-45, கேரட் ரூ.35-55, பீன்ஸ் ரூ. 120-140, வெங்காயம் ரூ. 30-60, சின்ன வெங்காயம் ரூ. 50-60, இஞ்சி ரூ. 60-80, பூண்டு ரூ. 280-400, காலிஃப்ளவர் ரூ. 30, மாங்காய் ரூ. 45-50, அவரை 80-100, முருங்கை ரூ. 40-45 விற்பனை செய்யப்படுகிறது.

News October 28, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (28.10.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்று முன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் : 9884098100 அழைக்கலாம்.

News October 28, 2024

வட்டாட்சியர் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறைகள் அறிவிப்பு

image

இராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால் புகார்களை உடனுக்குடன் தெரிவிக்க மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24X7 நாள் முழுக்க இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு 1077 (0) 04172271766 தொடர்புக்கு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார். மேலே பேரிடர் உதவி எண் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 28, 2024

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

image

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையில் காவல்துறை அதிகாரிகள், ஆளிநர்கள், அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டு ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி கீழ்கண்டவாறு எடுக்கப்பட்டது. நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளது என்று உறுதிமொழி ஏற்றனர்.

News October 28, 2024

PMKISAN ரூ.2000 உதவித்தொகை அறிவிப்பு

image

PM கிசான் திட்டத்தில் பெயர் பதிவிட்டும் உங்களுக்கு தவணை வரவில்லை என்றால் உடனே புகார் அளிப்பதன் மூலம் விரைவில் உங்களுக்கு உதவித்தொகை கிடைக்கும். PM கிசான் “HELPLINE TEST” மூலம் நீங்கள் புகார் அளிக்கலாம். மேலும், pmkisan-ict@gov.in. w pmkisan-funds@gov .in. என்ற மின்னஞ்சல் ID மூலமும் புகார் தெரிவிக்கலாம். மாவட்டம் ஆட்சியர் யு. சந்திரகலா மற்றும் வேளாண்மை இயக்குநர் செல்வராஜ் தெரிவித்தனர்.

News October 28, 2024

ராணிப்பேட்டை ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

image

ராணிப்பேட்டை பயிர் சேதத்தை தடுக்க மேற்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார். மாவட்ட நிர்வாகம் சார்பில் வடகிழக்கு பருவ மழையின் போது பயிர்களை காக்க வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன அதனை விவசாயிகள் பின்பற்ற வேண்டும். பயிர்களுக்கு காப்பீட்டுத் தொகை செலுத்தாத விவசாயிகள் இ-சேவை மையம் மூலம் நவ.15ஆம் தேதிக்குள் செலுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

News October 28, 2024

10 கிராமங்களுக்கு 10 மின்கல வாகனங்கள்

image

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் ரூ.25.40 லட்சம் மதிப்பீட்டில் குப்பைகள் சேகரிக்கும் 10 மின்கல வாகனங்களை 10 கிராம ஊராட்சிகளுக்கு வழங்கி தொடங்கி வைக்க வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, சோளிங்கர் MLA முனிரத்தினம் இன்று தொடங்கி வைத்தனர்.

News October 28, 2024

ரேஷன் கடைகளுக்கு நவ.16ஆம் தேதி விடுமுறை

image

தீபாவளி பண்டிகையையொட்டி அக்.27ம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி, நேற்று அரிசி உள்பட அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு ஏதுவாக இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கூறியிருந்தார். இந்நிலையில், இந்த விடுமுறை நாளில் பணியாற்றுவதற்கு நவ.16ஆம் தேதி அன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 28, 2024

ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் 263 பணியிடங்கள்

image

ராணிப்பேட்டையில் அமைந்துள்ள பெல் (BHEL) நிறுவனத்தில் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நவ.8ஆம் தேதிக்குள் https://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு ஐ.டி.ஐ, படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

error: Content is protected !!