India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை வானிலை ஆய்வு மையம் சற்று முன் வெளியிட்ட செய்தி குறிப்பில் ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் சென்னை,புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், குமரி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இரவு 7 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாவட்ட கூட்டுறவு சங்கத்தின் உதவியாளர் ககாலிபணியிடங்களுக்காக தயாராகும் Diploma in Co-operative Management பயின்ற மாணவ, மாணவிகளுக்கு இலவச இணையவழி பயிற்சி வகுப்புகள் டிச.9 முதல் தொடங்கப்பட உள்ளதாகவும், விருப்பமுள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் https://forms.gle/ebKSyuCpgZB2WFLG9 என்ற google form இணைப்பில் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அரக்கோணம் ஷா நகர் பகுதியில் தெரு நாய்கள் கூட்டமாக இன்று சுற்றி திரிந்தது. அப்போது அந்த வழியாக வந்த சுப்பிரமணி உள்ளிட்ட 5 பேரை நாய் ஒன்று துரத்தி துரத்தி கடித்தது. இதில் காயம் அடைந்த ஐந்து பேரும் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நம் இந்திய திருநாட்டில் கப்பற்படை ஆற்றியுள்ள சாதனை மற்றும் பங்களிப்பை அங்கீகரிக்க ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4 அன்று கடற்படை நாள் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 4 அன்று இந்திய கடற்படை பி.என்.எஸ்,கைபர் உட்பட நான்கு பாகிஸ்தான் கப்பல்களை மூழ்கடித்த திரிசூலம் படை நடவடிக்கையின் போது தேர்ந்தெடுக்கப்பட்டது.அதனை நினைவு கூறும் வகையில் மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா அனைத்து அரசு அலுவலர்களுக்கும் தெரிவித்துள்ள உத்தரவில்,ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு அரிசி பருப்பு சமையல் பொருட்கள் தொகுப்பை அனைத்து அரசு துறை அலுவலர்களும் சேகரித்து இன்று மாலை 5 மணிக்குள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் அரசு அலுவலர்கள் நிவாரண பொருட்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சா்வதேச மாற்றுத்தினாளிகள் தினத்தை முன்னிட்டு அமைச்சர் காந்தி தெரிவித்ததாவது, ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடங்கப்பட்டு இதுவரை 11821 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.27.75 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் உதவித் தொகை, மூன்று சக்கர சைக்கிள், வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, திட்டங்களில் முன்னுரிமை வழங்கி உள்ளதாகவும் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர். காந்தி தெரிவித்துள்ளார்.
அரக்கோணம் நகராட்சி 8-ஆவது வார்டு கண்டிகை ஏரிக்கு நீர் செல்லும் கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 17 வீடுகளை இடிக்கும் பணி தொடங்கப்பட்ட நிலையில், ஜேசிபி இயந்திரத்தை மறித்து அப்பகுதி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி பொதுமக்களிடையே பேச்சு வார்த்தை நடத்தினார். இதனை தொடா்ந்து வீடுகளை இடிக்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டது.
ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய, கிருஷ்ணமூர்த்தி(46) என்பவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.6000 அபராதம் விதித்து வாலாஜா குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு மாவட்ட எஸ்.பி கிரண் சுருதி தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (டிச.3) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாரக்கு, புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று சர்வதேச மற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற 55 மற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு, நினைவுப் பரிசுகள் வழங்கி, மற்றுத்திறனாளி சுயஉதவி குழுவினரால் காட்சிப்படுத்தப்பட்ட LED பல்புகளையும் அமைச்சர் காந்தி பார்வையிட்டார் . மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உடனிருந்தார்.
Sorry, no posts matched your criteria.