Ranipet

News December 6, 2024

7 ஆவது முறையாக ஆட்சி அமைப்போம்: து. முதலமைச்சர்

image

ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள ஜி.கே.ஹோட்டலில் இன்று மாவட்ட திமுக சார்பு அணிகள் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று 7ஆவது முறையாக ஆட்சி அமைக்க உழைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

News December 6, 2024

 விளையாட்டு உபகரணங்களை வழங்கிய  துணை முதல்வர்

image

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர் காந்தி எம்பி ஜெகத்ரட்சகன் எம்எல்ஏக்கள் ஈஸ்வரப்பன் முனிரத்தினம் மற்றும் ஆட்சியர் சந்திரகலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

News December 6, 2024

ராணிப்பேட்டையில் நாளை எங்கெல்லாம் மின்தடை?

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை ( டிச.07) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, வளர்புறம், அரக்கோணம், திருவலங்காடு மற்றும் மோசூர்,கொடைக்கல், ரெண்டாடி, ஜம்புகுளம் மருதாலம், பாலகிருஷ்ணாபுரம், புலிவலம், சூரை, நெல்லிக்குப்பம், லாலாப்பேட்டை, கல்மேல்குப்பம், தக்கான்பாளையம் மற்றும் முகுந்தராயபுரம் அதன் சுற்றுப்புற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்க

News December 6, 2024

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 115 ஏரிகள் நிரம்பியது

image

கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள 369 ஏரிகளில் 115 ஏரிகள், அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும் 33 ஏரிகள் 75 சதவீதம் முதல் 99 சதவீதம் வரையும், 49 ஏரிகள் 75 சதவீதம் வரையும், 125 ஏரிகள் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையும், 47 ஏரிகள் 25 சதவீதம் குறைவாகவும் நிரம்பியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News December 5, 2024

இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸாரின் விவரங்கள் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (05.12.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் எண்ணிற்கும் 9884098100 அழைக்கலாம்.

News December 5, 2024

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 115 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் அதிவேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள 369 ஏரிகளில் 115 ஏரிகள், அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 33 ஏரிகள் 75 % முதல் 99 % வரையும்,49 ஏரிகள் 75 % வரையும்,125 ஏரிகள் 25 முதல் 50 % வரையும், 47 ஏரிகள் 25 % குறைவாகவும் நிரம்பியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

News December 5, 2024

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை

image

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஃபெஞ்சல் புயல் காரணமாக ராணிப்பேட்டை ,சென்னை,கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை,கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல வட மாவட்டங்களில் அதி கனமழை கொட்டி தீர்த்தது. அதன் தாக்கம் முடிவதற்குள் நேற்று நள்ளிரவு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு, அரக்கோணம், தக்கோலம் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் பரவலாக மழை பெய்தது. உங்கள் பகுதியில் மழை பெய்ததா என்பதை கமென்டில் சொல்லுங்க

News December 4, 2024

துணை முதல்வர் 4,715 பயனாளிகளுக்கு நலத்திட்டம்

image

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு டிசம்பர் 6-ஆம் தேதி ஆய்வுப் பணிக்காக வருகிறார். அன்றைய தினம் விளையாட்டு, ஊரக வளர்ச்சித் துறை, வருவாய், ஊரக வாழ்வாதார இயக்கம், உணவு பொருள் வழங்கல் துறை என மொத்தம் 4,715 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்ய வேண்டும் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.

News December 4, 2024

ரோந்து பணி போலீசார் தொலைபேசி எண்கள்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (டிச.4) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாருக்கு, புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).

News December 4, 2024

கொலை குற்றத்தில் கைது செய்யப்பட்டவர் குண்டாஸில் கைது 

image

திமிரி அடுத்த மோசூர் கிராமம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் வினோத் (24) இவர் கொலை குற்றத்தில் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி ஆட்சியர் சந்திரகலாவுக்கு பரிந்துரை செய்தார். ஆட்சியர் உத்தரவின் பேரில் இன்று வினோத் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

error: Content is protected !!