Ranipet

News December 8, 2024

வேலை தேடுவோரை குறிவைத்து மோசடி: டிஜிபி

image

வேலை தருவதாக இணையம் மூலமாக விளம்பரம் செய்து, அதை நம்பி வரும் மக்களை, தங்களின் இடத்துக்கு வரவழைத்து சிலர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற மோசடிகளில் சிக்கிக் கொள்ளாமல் விழிப்புடன் இருக்க வேண்டும். இத்தகைய மோசடிகளுக்கு ஆளாகி இருந்தால் சைபர் க்ரைம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1930-ஐ அழைத்து புகார் தெரிவிக்கலாம். அல்லது www. cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்யலாம்.

News December 7, 2024

வாலிபர் தூக்கு மாட்டி தற்கொலை போலீசார் விசாரணை

image

சிறுணமல்லி அடுத்த சம்பத்ராயன் பேட்டை கிராமம் காமராஜர் பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜி வயது  (20). இவர் இன்று மாலை தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் . நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு, அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரத்து வருகின்றனர்.

News December 7, 2024

ரோந்து பணி போலீசார் தொலைபேசி எண்கள் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( டிச 7 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் எண்களுக்கு, புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும், உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் : 9884098100

News December 7, 2024

ராணிப்பேட்டையில் மழைக்கு வாய்ப்பு

image

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள உள்ளது, இந்நிலையில் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை  உட்பட 14 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணிவரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News December 7, 2024

உயிரிழந்த படை வீரர்களை சார்ந்தவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை

image

மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்ற, படைவீரர் கொடிநாள் தேநீர் விருந்து அனுசரிப்பில் போர் மற்றும் போரையொத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு உயிரிழந்த படைவீரர்களை சார்ந்தோர்கள் மற்றும் போரில் ஊனமுற்ற முன்னாள் படைவீரர் உள்ளிட்ட 3 நபர்களுக்கு சால்வை அணிவித்து கெளரவித்தார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ந. சுரேஷ், துணை இயக்குனர் நலன் லெப் கர்னல், வேலு உடனிருந்தனர்.

News December 7, 2024

ராணிப்பேட்டை காவல் துறையின் விழிப்புணர்வு செய்தி

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக இன்று (டிச-7) விழிப்புணர்வு செய்தியில், “தேவையற்ற தரவுப் பரிமாற்றங்களைத் தவிர்க்க, பயன்பாட்டில் இல்லாதபோது ‘புளூடூத்’ மற்றும் ‘என்.எப்.சி.’யை முடக்கவும்” என ராணிப்பேட்டை காவல் துறை சார்பாக மாவட்ட மக்களுக்கு இன்று ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு செய்தியில்  தெரிவிக்கப்பட்டுள்ளன.

News December 7, 2024

மதுபோதையில் நண்பனை கொன்ற நபர் கைது

image

ஆற்காடு பகுதியை சேர்ந்த ஸ்ரீதா்(23) உணவக தொழிலாளி தனது நண்பன் ஸ்ரீதா்(23) தின்பண்ட வியாபாரியுடன் நேற்று தனது வீட்டில் மது அருந்திய போது இருவருக்கும் போதையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த உணவக தொழிலாளி ஸ்ரீதர் தின்பண்ட வியாபாரி ஸ்ரீதரை கழுத்து மற்றும் மார்பில் கத்தியால் குத்தியதில் உயிரிழந்தார். இது குறித்து ஆற்காடு நகர போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 7, 2024

மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூ.17.98 கோடி கடன் உதவி

image

ராணிப்பேட்டையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த 2229 நபர்களுக்கு ரூ.17.98 கோடி மதிப்பில் கடனுதவிக்கான காசோலையை வழங்கினார்.

News December 6, 2024

ரோந்து பணி போலீசார் தொலைபேசி எண்கள் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100

News December 6, 2024

7 ஆவது முறையாக ஆட்சி அமைப்போம்: து. முதலமைச்சர்

image

ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள ஜி.கே.ஹோட்டலில் இன்று மாவட்ட திமுக சார்பு அணிகள் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று 7ஆவது முறையாக ஆட்சி அமைக்க உழைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

error: Content is protected !!